Thursday 10 May 2018

கிண்டல் கருத்துகள்

ரஜினியை வைத்தே சிலர் #உச்சத்திற்கு வர நினைக்கிறார்கள்-தனுஷ் பேச்சு!
அவருக்கே உச்சத்துல ஒன்னும் இல்லேன்னு சொல்றாங்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முதல்வர்களை சந்திப்பதுதான் பிரதமருக்கு வேலையா-குருமூர்த்தி
அப்ப வெளிநாட்டுக்குப் போயி அதிபர்களுக்கும் பிரதமர்களுக்கும் கை குடுக்குறதுதான் வேலையா
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"தென்னக நதிகளை இணைப்பதே என் வாழ்க்கையின் இலட்சியம்"
#ரஜினி.
அதோட அந்த வாடகை பாக்கி குடுக்குறதயும் கொஞ்சம் சேர்த்துகுங்க ரஜினி சார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யார் என்ன சொன்னாலும் என் பாதையில் நான் சென்று கொண்டே இருப்பேன் - ரஜினி
ட்ராபிக் போலீஸ் சொல்றதயாவது கேளுங்க பாஸ், ஏதாவது சேதாரம் ஆயிறப்போகுது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்னை அண்ணியாக நினைக்க வேண்டாம், இனி நான் உங்களுக்கு அம்மா-#பிரேமலதா
ஏற்கனவே ஒரு அம்மா எங்கள படுத்துன பாடு போதாதா.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரஜினியை உசுப்பி விடாதீர்கள்- குருமூர்த்தி
உசுப்பி விட்டா எந்திரிச்சு கொட்டாவி விட்டுட்டு குப்புறப் படுத்துக்குவாரு
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சி.பி.எஸ்.சி ஒரு No.1 டுபாக்கூர்

கேள்வி : சி.பி.எஸ்.சி ஒரு No.1 டுபாக்கூர் – விளக்குக.
பதில் : Central Board of Standard Education என்று ஆங்கிலத்திலும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்று தமிழிலிலும் அழைக்கப்படும் இந்நிறுவனம் உயர்தரக் கல்வியை வழங்குவதாக தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறது அவ்வாறே பொதுமக்களாலும் நம்பப்படுகிறது, ஆனால் இதுவரை இந்தக் கருத்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
உயர்தரக் கல்வியை வழங்குவதாகச் சொல்லிக்கொள்ளும் இந்த நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வுகள் மிகவும் தரமற்றதாக இருக்கிறது. சென்ற கல்வியாண்டில் நடத்தப்பட்ட பிளஸ்-2 வகுப்பு பொருளாதார தேர்வு வினாத்தாளும், 10-ம் வகுப்பு கணக்கு தேர்வு வினாத்தாளும் தேர்வுக்கு முந்தின நாளே பலருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் வந்துவிட்டது. 10-ம் வகுப்பு கணக்கு வினாத்தாளை பொறுத்தமட்டில், சி.பி.எஸ்.இ. தலைவருக்கே முந்தினநாள் அனுப்பப்பட்டு இருக்கிறது. ‘முடிந்தால் என்னை பிடித்துப்பார்’ என்ற தைரியம்தான் இந்த வினாத்தாளை அனுப்பியவர்களுக்கு இருந்திருக்கிறது.
வினாத்தாள் வெளியானதால் மறுதேர்வு அறிவிக்கப்பட்டபோது அதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் செய்தனர் அப்போது அவர்கள் “இது சிபிஎஸ்இ தவறு. அவர்களால் கேள்வித்தாளை பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. அதற்காக நாங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?” என கேள்வி எழுப்பினர். இருந்தபோதும் தேர்வு திட்டமிட்டபடியே நடத்திமுடிக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ.-யை பொறுத்தமட்டில், வினாத்தாள் வெளியாவது இதுதான் முதல்முறையல்ல. ஏற்கனவே 2006-ம் ஆண்டும், 2011-ம் ஆண்டும் கேள்வித்தாள்கள் தேர்வுக்கு முன்பே வெளியாகியிருக்கிறது.
இதுமட்டுமல்ல நீட் தேர்விலும் இதுபோன்ற பல குளறுபடிகள் நடந்துள்ளன. சென்ற ஆண்டு நடந்த தேர்வில் வினாத்தாள்கள் ஒரே மாதிரியாக இல்லை எனவும், கேள்விகள் வடமாநிலங்களில் எளிதாக இருந்ததாகவும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடினமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது, உயர்நீதிமன்றமும் கேள்வித்தாள்கள் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என சி.பி.எஸ்.இ-க்கு அறிவுறுத்தியது. இந்த ஆண்டும் கூட தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில்(தமிழ்வழி) 49 கேள்விகள் தவறானவை என்று சொல்லப்படுகிறது. இதுதவிர மாணவர்களை சோதனை என்ற பெயரிலும் தேர்வுமையங்களை வெளிமாநிலங்களில் அமைத்தும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
ஒரு தேர்வையே சிறப்பாக நடத்தத் தகுதியும் திறமையும் இல்லாத துப்புக்கெட்ட வெட்கங்கெட்ட சி.பி.எஸ்.இ-க்கு தகுதித்தேர்வு நடத்த என்ன அருகதை இருக்கிறது என்பதே பெரும்பாலான மாணவர்களின் கருத்தாக இருக்கிறது.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சி.பி.எஸ்.சி ஒரு No.1 டுபாக்கூர் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.
பி.கு. ஆசிரியப் பெருமக்கள் இந்த கேள்வி பதிலைப் படித்துவிட்டு மதிப்பெண் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
முன்னாள் மாணவன்
க.ம.மணிவண்ணன்

கிண்டல் கருத்துகள்

பாமகவை விட சிறந்த கொள்கைகள் உடைய கட்சி இருந்தால் சொல்லுங்கள் பாமகவை கலைத்து விடுகிறேன் - #ராமதாஸ்
குடிசைய கொளுத்துறது ஒரு கொள்கையா.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எனது கேள்விகள் கடினமாக இருப்பதால் தான் தமிழிசைக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என ஸ்டாலின் சொல்கிறார் - தமிழிசை
ஒரு வேள இந்தம்மா நீட் எக்ஸாம்ல கேட்ட கேள்விகள கேட்டுருப்பாங்களோ
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாஜகவை பொறுத்தவரை சூப்பர்ஸ்டார் மோடி,உலகநாயகன் அமித்ஷா - தமிழிசை
இவ்வளவு காமெடியா பேசும்போதே தெரியுது, நீங்க தான் கோவைசரளா
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரஜினிக்கு ஆலோசகரா நான் இருக்கிறேன் என்பதில் உண்மை இருந்தால் எனக்கு பெருமை தான் - #குருமூர்த்தி
ஓடாத கடிகாரத்துக்கு சாவி குடுக்குறதுல ஒரு பெருமையாடா
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மோடியுடன் இணைந்தால்தான் ரஜினியால் வெற்றிடத்தை நிரப்ப முடியும்.. !!
_ஆடிட்டர் குருமூர்த்தி _
ஒன்னு மொரட்டுப் பீசு இன்னோன்னு முட்டாப்பீசு
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனுநீதி – குலக்கல்வி – நீட் - ஒரு ஒப்பீடு

------------------------------------------------------------------
மனுநீதி – குலக்கல்வி – நீட் - ஒரு ஒப்பீடு
------------------------------------------------------------------
சூத்திரர்கள் வேதம் படிக்கக்கூடாது, காதால் கேட்கக்கூடாது, மனதில் நிறுத்தக்கூடாது. மீறினால் நாக்கை வெட்ட வேண்டும், ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்ற வேண்டும், நெஞ்சை பிளக்க வேண்டும். இதுதான் மனுநீதி. இங்கு வேதம் என்பது கல்வியையே குறிக்கிறது. இந்த அநீதியை மீறியதால் தான் ஏகலைவனின் கட்டை விரலும் சம்பூகனின் தலையும் பறிக்கப்பட்டது. கல்வி கற்ற பார்பனர்களுக்கும் கல்வி மறுக்கப்பட்ட ஏகலைவனுக்கும் சம்பூகனுக்கும் என்ன பெரிய வேறுபாடு, ஒரு நூலளவு தான் வேறுபாடு ஆம் பூணூல் ஒன்றுதான் வேறுபாடு.
ஆங்கிலேயர்கள் வந்த பிறகு அவர்களின் கல்விக்கொள்கைப்படி எல்லோரும் கல்வி கற்கலாம் என்ற நிலை உருவானது, அது எப்படி எல்லோரும் கல்வி கற்கலாம், தலையில் இருந்து பிறந்தவனும் காலில் இருந்து பிறந்தவனும் ஒன்றா மற்ற கல்வி எப்படியோ மிக உயர்ந்த கல்வியான மருத்துவமுமா, அது முடியாது மருத்துவக்கல்வி படிக்க வேண்டுமெனில் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும். ஆம் தமிழ்நாட்டில் இந்த அரசாணை 1920 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. நீதிக்கட்சியின் பெருமுயற்சியால் தான் இந்த அரசாணை நீக்கப்பட்டது. மருத்துவம் பயின்ற பார்பனர்களுக்கும் மருத்துவக்கல்வி மறுக்கப்பட்ட மற்றவர்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு, ஒரு நூலளவு தான் வேறுபாடு ஆம் பூணூல் ஒன்றுதான் வேறுபாடு.
பார்ப்பனியம் தோற்றுப்போனதுபோல் நமக்குத் தெரியலாம், ஆனால் ஒருபோதும் அது தன்னை மற்றவர்கள் வெல்வதை அனுமதிக்காது, ஆம் புத்தத்தால் அடித்து நொறுக்கப்பட்ட பார்ப்பனீயம் அந்த புத்தத்தையே உள்வாங்கி செரித்து அதை இந்தியாவில் ஒழித்தது. அதுதான் வரலாறு.
சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பார்ப்பனியம் ராஜாஜியின் பார்ப்பன மூளையை தட்டி எழுப்பியது. 6000 பள்ளிகளை இழுத்து மூடினார் எஞ்சியிருந்த பள்ளிகளில் குலக்கல்வி திட்டம் புகுத்தப்பட்டது அதாவது அவரவர் சாதித்தொழில் அவரவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. எதற்காக இந்த ஏற்பாடு, எல்லாச்சாதியினரும் உயர்கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டால் பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவித்து வந்த வசதிகளும் வாய்ப்புகளும் பறிபோகுமே அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அப்படி என்ன வேறுபாடு, ஒரு நூலளவு தான் வேறுபாடு ஆம் பூணூல் ஒன்றுதான் வேறுபாடு.
குலக்கல்விக்கு எதிராக பெரியார் மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்தினார். பயந்துபோன ராஜாஜி பதவி விலகினார், முதல்வராக பதவியேற்ற காமராஜர் குலக்கல்வித் திட்டத்தை நீக்கினார்.
இப்போது நீட்டை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறது பார்ப்பனியம் தகுதி திறமை என்று சொல்லிக்கொண்டு, தலைமுறை தலைமுறையாக கல்வி கற்று வருகின்ற ஒரு கூட்டத்திற்கும் காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்டு ஓரிரு தலைமுறைகளாக மட்டுமே கல்வி கற்கின்ற ஏகலைவர்களின் சம்பூகர்களின் கூட்டத்திற்கும் இவர்கள் சொல்கின்ற தகுதி திறமையில் சிறு வேறுபாடு இருக்கவே செய்யும், அதுவும் நூலளவுதான் ஆம் பூணூலளவு தான் வேறுபாடு.
குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக பெரியார் பெரும்போராட்டத்தை நடத்தியபோது நமது மூத்த தலைமுறையினர் அந்த திட்டத்தின் கேட்டைப்பற்றி முழு அளவில் தெரியாது இருந்தபோதும் தலைவர்களின் பேச்சைக்கேட்டு நன்கு புரிந்து முழு வீச்சில் போராட்டங்களில் கலந்து கொண்டனர். அதனால் தான் குலக்கல்வித் திட்டம் தோல்வி அடைந்தது. அன்று நம்மவர்கள் பொருளாதாரத்தில் அடித்தட்டு மக்களாய் இருந்தார்கள் இருந்தாலும் நமது உரிமையை நாம் எதற்காகவும் விட்டுத்தரக்கூடது என்ற போர்குணம் இருந்தது அதனால் போராட்டங்களில் கலந்து கொண்டனர். போராட்டம் வெற்றி அடைந்தது.
ஆனால் இன்றைய நீட் எதிர்ப்பு போராட்டங்களில் நம்மக்கள் பெருமளவில் ஈடுபாடு காட்டுவதில்லை குறைந்தபட்சம் எதிர்ப்புக்குரல் கூட எழுப்புவதில்லை. காரணம் இன்றைய தலைமுறையில் நம்மவர்களில் பெரும்பாலனவர்கள் பொருளாதாரத்தில் உயர்நிலையில் உள்ளார்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என நீட் பயிற்சி மையத்திற்கு பிள்ளைகளை அனுப்ப தயாராக உள்ளனர், வெளிமாநிலத்தில் என்ன வெளிநாட்டில் தேர்வு வைத்தாலும் பிள்ளைகளை விமானத்தில் அழைத்துச் சென்று தேர்வெழுத வைக்க தயாராக உள்ளனர். எதையும் பொருளாதாரத்தை கொண்டு பெற்று விடலாம் என்ற மேட்டுக்குடி மனநிலையை அடைந்துவிட்டனர் நம்மவர்கள். உரிமையும் தன்மானமும் காசு கொடுத்தால் கிடைக்குமா என்ன, கடைகளில் பெற முடியுமா சூடும் சொரணையும்.
ஏதுமற்ற அடித்தட்டு மக்கள் ஏக்கப்பெருமூச்சு விட்டபடி விரக்தி நிறைந்த முகங்களோடு தங்கள் கைகளை விட்டு நழுவிச் செல்லும் எதிர்காலத்தை எட்டிப்பிடிக்க வழிதெரியாமல் உலா வருகின்றனர்.
நேற்று வரை நீட் தேர்வே வேண்டாம் என்று குரல் எழுப்பி வந்த நாம், இன்று தமிழ்நாட்டிலேயே தேர்வெழுத விடுங்கள் என்ற இடத்திற்கு நகர்ந்து வந்து விட்டோம். நாளை.......?
க.ம.மணிவண்ணன்
07/05/2018

கருத்துகள்

குலக்கல்வித் திட்டம் 2.0
---------------------------------------------------------------------------------
குலக்கல்வித் திட்டம் - ராஜாஜி
நீட் தேர்வு - மோடிஜி
ராஜாஜி குலக்கல்வித் திட்டத்த கொண்டு வந்தப்ப, எல்லாரும் கைல பெட்ரோலும் தீப்பெட்டியும் வச்சுக்கங்கன்னு சொல்றதுக்கு பெரியாரு இருந்தாரு.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
துரோணர்களும் ராமர்களும் நாக்குகளில் எச்சில் வழிய கொலைவெறியோடு காத்துக்கொண்டு இருக்கிறார்கள்
ஏகலைவர்களின் விரல்களுக்காகவும் சம்பூகர்களின் தலைகளுக்காகவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நீ
நீட்டை நீட்டாதே அது தீட்டுடை நீட்டாதே அது தீட்டு

கிண்டல் கருத்துகள்

எம்ஜிஆர் படத்தை பார்த்தால் குற்றம் செய்தவர்கள் திருந்தி விடுவார்கள் - செல்லூர் ராஜ்
நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் , என்ன வாய்தான் காதுவரை நீளுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராகுல் காந்தியால் 15 நிமிடம் பேப்பரை பார்க்காமல் பேச முடியுமா..?
#மோடி////
மோடி சார் நீங்க தானே Mrs.Srisena ங்கிறத M R S srisena ன்னு பாக்காமலேயே வாசிச்சது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புமணி கோட்டையில் கொடியேற்றுவது உறுதியாகிவிட்டது - ராமதாஸ்
தேவகோட்டையா அருப்புக்கோட்டையா.
உங்க கட்சிக்கொடி அது அத எங்கேயோ ஏத்துங்க.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வைகோவின் பேச்சை கேட்டு வளர்ந்தவன் நான் - சீமான்
பேச்சை கேட்டீங்க சரி, ஆனா இன்னும் வளரலையே.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்னை விமர்சித்தால் நகத்தை வெட்டுவேன்-திரிபுரா முதல்வர்
நகம் வளரல, முடிதான் ரெம்ப வளந்துருச்சு முடிவெட்டி டை அடிச்சு விடுவீங்களா.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கிண்டல் கருத்துகள்

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்
இறங்கினாரு சரி, ஒரு தடவையாவது குளிச்சாரா.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சீமான் தமிழர்களுக்கு ஜீசஸ் மாதிரி - பாரதிராஜா
காட்டிக் கொடுத்தவன் பேரு யூதாஸ் தானே, இவரு பேர மாத்திச் சொல்றாரு. 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்லமாட்டோம்..
கால்ல விழுந்து மட்டும்தான் கும்பிடுவோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சீமானை சாதாரணமாக நினைக்காதிங்க. - பாரதிராஜா
அவர சாதா - ரணமா நெனைக்கல, மிகப்பெரிய ரணமா நெனைக்குறோம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உ.பி.யில் 10 ஆம் வகுப்பு தேர்வில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேறவில்லை.
11 லட்சம் மாணவர்கள் இந்தி பாடத்தில் தோல்வி.
மாட்டு மூத்திரம் குடிக்கிறவன் முதலமைச்சரா இருந்தா எல்லாப் பயலுகளும் மடச்சாம்பிராணியாத் தானே இருப்பானுக.
இதுல இந்தி இவனுக தாய்மொழி வேற.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கிண்டல் கருத்துகள்

சிவில் சர்வீஸ் தேர்வுகளை சிவில் எஞ்சினியர்கள்தான் எழுத வேண்டும், மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் எழுதக்கூடாது" : - திரிபுரா பிஜேபி முதல்வர் பிப்லப் குமார்
இனி NEET தேர்வுகளை நீட்டாக இருப்பவர்கள் மட்டுமே எழுதவேண்டும்.
GATE தேர்வுகளை GATE KEEPER அதாவது WATCH MAN மட்டுமே எழுத வேண்டும்.
CAT தேர்வுகளை பூனைகள் எழுத முடியாது என்பதால் பூனைகளை வளர்ப்போர் மட்டுமே எழுத வேண்டும்.
NET தேர்வுகளை NET ஐ பயன்படுத்தும் மீனவர்களும் INTERNET ஐ பயன்படுத்துபவர்களும் மட்டுமே எழுத வேண்டும்.
CRIMINAL LAWYER ஆக CRIMINAL மட்டுமே பணிபுரிய வேண்டும்.
HARDWARE கடை வைத்திருப்பவர்கள் மட்டுமே இனி HARDWARE ENGINEER ஆக முடியும்.
- மங்குனி முதல்வர்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த நீதிபதிகள் தேர்வுக்கான பரிந்துரையில் இந்து மல்கோத்ராவை, அவர் 'இந்து' மல்கோத்ராவாவாக இருந்ததால் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுவிட்டது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கிண்டல் கருத்துகள்

எஸ் வி சேகர் முன்ஜாமீன் கேட்டு மனு
இந்த ஆளோட பாடி லாங்குவேஜ பாத்துட்டு பெரிய ரவுடின்னு நெனச்சேன், பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சர்ச்சையாக பேசாதீர்கள்,
அது பாஜகவின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் - கட்சிகாரர்களுக்கு மோடி கண்டிப்பு
அப்ப , விநாயகருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணோம்னு சொன்னது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் விந்து - நாதக தம்பிகள் கண்டுபிடிப்பு
எப்படியும் நோபல்பரிசு வாங்கிருவாங்கன்னு நெனைக்கிறேன்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மறு தேர்தல் வந்தால் அன்புமணி தான் முதல்வர் ஆவார் என மோடிக்கு தெரியும்-இராமதாஸ்.
மக்களே இந்த இடத்துல நீங்க பலமா கைதட்டணும் இப்படி சத்தம் போட்டு சிரிக்கக்கூடாது
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சீனா பயணத்தை முடித்து இந்தியா திரும்புகிறார் மோடி-செய்தி
சீனாக்காரனுகளா உங்களோட எல்லா duplicate சாமானையும் நாங்க காசு கொடுத்து வாங்கிக்கிறோமுல, நீங்க இந்த duplicate ஆள மட்டும் இலவசமா அங்கேயே வச்சுக்கங்ககடா

கிண்டல் கருத்துகள்

கட்சி தொடங்குவது உறுதி; தேதி பின்னர் அறிவிக்கப்படும் - #ரஜினிகாந்த் //
எரிப்பீங்களா,பொதைப்பீங்களா
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மகாபாரத காலத்திலேயே இந்தியாவில் இணையதளம் இருந்தது - திரிபுரா பாஜக முதல்வர்.
internet என்பது வேறு intercourse என்பது வேறு.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நிர்மலாவுக்கு தண்டனை கொடுக்கணும் - ரஜினி
அப்ப அந்த higher officialக்கு
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாஜகவும் அதிமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி
ஒருவேளை கள்ளத் துப்பாக்கியாக இருக்குமோ
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெண்: சாமி பேருக்கு அர்ச்சனை பண்ணுங்க..
யோவ் அந்த தேடிச்சோறு நிதம் தின்று அய்யரக் கூப்பிடுங்கப்பா
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் ரஜினி
ஆண்டவன் என் பின்னால இருக்கான்னு சொன்னாரு

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...