Friday 23 November 2018

கருத்துகள்

பிச்சைக்காரர்களுக்குத்தான் இலவசம் தேவை - கமலு
அரசர்களிடமிருந்து பிரம்மதேயம்,தேவதானம்,சீவிதம் அப்படிங்கிற பேருல பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை தானமாகவும் அதற்கு வரிவிலக்கும் வாங்கிக்கொண்ட உங்க முன்னோர்களை பிச்சைக்காரர்கள்னு சொல்றீங்களா Mr. கமலு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏழு பேர் விடுதலையை பற்றி?
ரஜினி: நான் இப்பத்தான் வர்றேன்...எனக்கு அதைப்பத்தி தெரியாது.
பாவம் சுடுகாட்டுல இருந்து பாதியிலேயே எந்திருச்சு வந்திருப்பாரு போல.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை - ரஜினி

நீச்சல் தெரியாம எறங்குனா மூழ்கிருவ ராசா.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை - ரஜினி

கடைசி வரைக்கும் புட்போர்டுலேயே தொங்குவாரு போல.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரசியல் என்னும் குளத்தில் குளிப்பதற்காக படிக்கட்டுகளில் இறங்கிவருகிறார் ரஜினிகாந்த்-பொன்.ராதாகிருஷ்ணன்.
படியெல்லாம் பாசியா இருக்கும் பாத்து வரசொல்லுங்க, வழுக்கி குப்புற விழுந்தா செதறிரும் செதறி.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹெலிகாப்டரில் இருந்தபடியே புயல் பாதித்த பகுதிகளை எட்டிப் பார்த்ததால் எடப்பாடி பழனிச்சாமி இனி எட்டிப்பார்த்த பழனிச்சாமி என அன்போடு அழைக்கப்படுவார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது - தமிழிசை
எத்தனை முறை விரட்டினாலும் வெட்கமில்லாமல் திரும்பத்திரும்ப வருவது எங்களுக்கு கோபத்தை அளிக்கிறது - மக்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரஜினி அரசியலுக்கு வந்து பின்னி பெடலெடுப்பார் - லதா ரஜினிகாந்த்
அதுக்கு முன்னால அவரு பென்ட யாரும் கழட்டிறாம பாத்துக்குங்க
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

நவம்பர் 8 - பன்னாட்டுக் கதிரியல் நாள் (International Day of Radiology)

நவம்பர் 8 - பன்னாட்டுக் கதிரியல் நாள் (International Day of Radiology)
இன்றைய நவீன மருத்துவத் துறையில் மருத்துவப் படிமவியலின் சிறப்பினை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். எக்சு-கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நவம்பர் 8 ஆம் நாள் இது கொண்டாடப்படுகிறது. கதிரியலுக்கான ஐரோப்பியக் கழகம், மற்றும் கதிரியலுக்கான அமெரிக்கக் கல்லூரி ஆகியன இணைந்து 2012 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்நாளை அறிமுகப்படுத்தின.
செர்மானிய இயற்பியலாளர் வில்கெல்ம் இராண்ஜன் (1845-1923) 1895 நவம்பர் மாதம் எட்டாம் நாள் எக்சு கதிர்களை கண்டுபிடித்தார். அதற்காக அவர் இயற்பியலுக்கான நோபல் பரிசினை 1901-ல் பெற்றார். இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு இதுவாகும். அனைத்துத் துறைகளிலும் அதிலும் சிறப்பாக மருத்துவத் தறையிலும் பெரும் பரட்சியினை அவர் கண்ட இக்கதிர்கள் ஏற்படுத்தின. அவரது பங்களிப்பினை போற்றும் வகையில் அணு எண் 111 கொண்ட தனிமம் இராண்ஜனியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
எக்ஸ் கதிர்கள் (X-rays, X-கதிர்கள், எக்ஸ் கதிர்கள்) மிக அதிக ஆற்றல் வாய்ந்த கதிர்கள் ஆகும். இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை.இதனைக் கண்டுபிடித்த வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவரின் பெயரால் ராண்ட்ஜன் கதிரிவீச்சு என்றும் சில மொழிகளில் அழைக்கப்படுகிறது.
வில்ஹெம் இராண்ட்ஜன் கண்டுபிடித்ததிலிருந்து எக்ஸ்-கதிர்கள் எலும்புகளின் கட்டமைப்பைக் கண்டறியப் பயன்படுகின்றன. எக்ஸ்-கதிர்கள் மருத்துவப் படிமவியலில் பயன்படுத்தப்படுகின்றன. எக்ஸ்-கதிரின் முதலாவது மருத்துவப் பயன்பாடானது அவரது கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளேயே நிகழ்ந்தது.
X கதிர்கள் மனித உடலை ஊடுருவிப் பார்க்க உதவுவது மட்டுமல்லாமல், வானூர்தி தளங்களில் பெட்டிகளைத் திறக்காமலேயே சோதனையிட உதவுகிறது. இக்கதிர்கள் நேர்கோட்டில் செல்கின்றன. இப்பண்பே அவைகள் நோயறி கதிரியலில் (Diagnostic Radiology) கதிர்ப்படம் எடுக்கப் பயன்படுகிறது.இக்கதிர்கள் உயிரியல் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. இப்பண்பு அவைகள் புற்றுநோய் மருத்துவத்தில் பயன்பட காரணமாகும். இம்முறை கதிர் மருத்துவம் (Radiation therapy) எனப்படும். இக்கதிர்கள் CT scannerல் பிரதான ஊடுருவும் மின்காந்த அலையாக உள்ளது.

பாண்டி புலிப்பால் குடித்த கதை

பாண்டி புலிப்பால் குடித்த கதை
-------------------------------------------------
ஒரு ஊருல பாண்டி பாண்டின்னு ஒருத்தன் இருந்தான் அவன் பக்கத்து ஊருல உள்ள காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருந்தான், ஒருநாளு அவங்கூட படிக்கிற பயல ஊருக்கு கூட்டிட்டுப் போனான், ஊருல உள்ளவங்கள்லாம் பாண்டிய புலிப்பால் பாண்டி, புலிப்பால் பாண்டின்னு கூப்புடறத கேட்டுட்டு அவனோட பிரண்டு ஏன் உன்னைய எல்லாரும் புலிப்பால் பாண்டின்னு கூப்புடுறாங்கன்னு கேட்டான், அதுக்கு பாண்டி நா குழந்தையா இருக்கும்போது ஒரு நாளு என்னைய தரையில படுக்க வச்சுட்டு எங்கம்மா வயலு வேலைக்கு போயிருச்சு, தூங்கி எந்திருச்ச எனக்கு பயங்கரமான பசி என்னால தாங்க முடியல அழுதுகிட்டே இருந்தேன், அந்த நேரம் அந்த பக்கமா ஒரு புலி வந்துச்சு, அது நா பசியாலா அழுகுறத பாத்துட்டு மனசு தாங்க முடியாம எனக்கு பால் குடுத்துச்சு, நா குடிச்சு முடிச்சதும் எனக்கு முத்தம் கொடுத்துட்டு போயிருச்சு, புலிப்பால நா குடிச்சதுனால எல்லாரும் என்னைய புலிப்பால் பாண்டின்னு கூப்புடுறாங்கன்னு சொன்னான் இதக்கேட்டதும் அவனோட பிரண்டுக்கு சிரிப்பு தாங்க முடியல இருந்தாலும் அடக்கிக்கிட்டான்.
கொஞ்ச நேரம் கழிச்சு பாண்டி கடைக்கு போயிட்டு வாறேன்னு சொல்லிட்டு வெளிய போனதும், அவனோட பிரண்டு பாண்டி அம்மாக்கிட்ட பாண்டிக்கு ஏன் புலிப்பால் பாண்டின்னு பேரு வந்துச்சுன்னு கேட்டான், அதுக்கு அந்த அம்மா பாண்டி சின்னப் புள்ளயா இருக்கும்போது, வெள்ளையா இருக்கவும் பாலுன்னு நெனச்சு மோர எடுத்துக் குடிச்சுட்டான் அதாவது பரவாயில்ல குடிச்சு முடிச்சதும் என்னம்மா பால் புளிக்குதுன்னு கேட்டான், அதக் கேட்டதும் சுத்தி இருந்தவங்கள்லாம் குடிச்சது மோருதான்னு கூடத் தெரியாம பாலு புளிக்குதுன்னு சொல்றானேன்னு சொல்லி பயங்கரமா சிரிச்சுட்டாங்க, அன்னையில இருந்து அவன புளிப்பால் பாண்டி, புளிப்பால் பாண்டின்னு எல்லாரும் கிண்டலா கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க அப்படின்னு சொன்னாங்க.

# ஆண்ட ஜாதிப்பெருமைகள்

கோவக்கார குருவும், சின்னாபின்னமான சீடனும்

கோவக்கார குருவும், சின்னாபின்னமான சீடனும்
-----------------------------------------------------------------------------
ஒரு ஊருல ஒரு குரு இருந்தாரு அவருக்கு நெறைய சீடனுக இருந்தானுக, ஒரு நாளு அந்த குரு கோவத்தை அடக்குறது எப்படின்னு சீடனுகளுக்கு வகுப்பு எடுத்துக்கிட்டு இருந்திருக்காரு, அப்ப ஒரு சீடன் எந்திரிச்சு குருவே நீங்க நடத்துற பாடம் புரியலன்னு தைரியமா சொல்லி இருக்கான் உடனே குருவுக்கு கோவம் வந்துருச்சு அந்த சீடன புடுச்சு அடிஅடின்னு அடிச்சு தூக்கிபோட்டு மிதிச்சிக்கிட்டு இருந்துருக்காரு, அப்ப அந்தப் பக்கமா வந்த ஒருத்தரு என்ன குருவே ஒரு சின்ன பையன போட்டு இந்த அடி அடிக்கிறீங்களேன்னு கேட்டுருக்காரு, அதுக்கு அந்த குரு எப்படி கோவத்த அடக்குறதுன்னு பாடம் நடத்திக்கிட்டு இருக்கும்போது இவன் எந்திருச்சு பாடம் புரியலன்னு சொல்றான் அதான் எனக்கு கோவம் வந்து அவன தூக்கிப்போட்டு மிதிச்சுக்கிட்டு இருக்கேன், அதுசரி இப்ப நீ எதுக்கு வந்து அத கேக்குற ஒன்னோட வேல மயிரப் பாத்துக்குட்டு போய்யான்னு வந்தவர அசிங்கம் அசிங்கமா திட்ட ஆரம்பிச்சிட்டாரு, வந்தவரும் தெறிச்சு ஓடிட்டாரு.
# நடிகர் சிவக்குமார் பரிதாபங்கள்

கருத்துகள்

இந்தியாவில் மோடியின் முகத்தை திரையில் பார்த்த அடுத்த நொடியில் 88% மக்கள் உடனடியாக சேனலை மாற்றி விடுகின்றனர் - BBC கருத்துக்கணிப்பு.
மீதி 12% மக்கள் உடனடியாக டி.வியை ஆஃப் செய்துவிடுகின்றனர்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது - ௭டப்பாடி

ஆமா அதுவாவே ஒடஞ்சிரும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


அளவுக்கதிகமா பயப்படுறதுக்குப் பேரு "போபியா"வாம், தமிழிசைக்கு வந்திருக்கிறது "சோபியா போபியா"ன்னு ஊருல எல்லாரும் பேசிக்கிறாங்க.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்ப தெரியுதாய்யா எதுக்காக நாங்க காலி சேர்கள வச்சே கூட்டம் நடத்துறோம்னு, ஏன்னா அதுகளுக்கு தான்யா ஒழிகன்னு கோஷம் போடத் தெரியாது.- தமிழக பாஜக
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாம் தமிழரில் கட்சியில் இருக்கும் தலைவர்கள் கதை சொல்லிகளாகவும் பொய் சொல்லிகளாகவுமே இருக்கிறார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகவத் கீதையை வாசித்தால் சர்க்கரை நோய் தீரும்.
-தினமலர்.
தினமலத்தை வாசித்தால் வாந்தி பேதி உண்டாகும் - மருத்துவ மலர்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரதமர் மோடிக்கு சொந்தமாக கார் இல்லை-செய்தி
ஆகாயத்திலேயே பறப்பவருக்கு கார் எதுக்கு
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்தவாரம் தமிழகம் வருகிறார் மோடி
-தமிழிசை
அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா. ம் கிளப்புங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை பாதியாக குறைக்கப்படும் - மோடி

என்னது, மறுபடியும் மொதல்ல இருந்தா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சபரிமலையில்பெண்கள் நுழைந்தால் கூட்டம்கூட்டமாக தற்கொலை செய்து கொள்வோம் --சிவசேனா

இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்புல வருமா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோயிலின் ஐதீகத்தில் யாரும் தலையிடக் கூடாது- ரஜினிகாந்த்

அப்ப கால விடலாமா?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. - ரஜினி

ஏன் தலைவா, "யூ டூ" ?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இடைத் தேர்தல்களை சந்திக்கத் தயார்"-தமிழிசை.

ஒன்னுமே படிக்காத பய பரிட்சைக்கு பயப்பட மாட்டான்னு சொல்லும் எங்க அப்பத்தா.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------














ஜாதி வெறியும் ஆணவப்படுகொலைகளும்

ஜாதி வெறியும் ஆணவப்படுகொலைகளும்
--------------------------------------------------------------------
தெலங்கானாவில் ஒரு ஆணவப் படுகொலை நடந்திருக்கிறது, இதே போன்றதொரு படுகொலை இங்கேயும் நடந்திருக்கிறது. கொலை நடந்த இடங்கள் தான் வேறு வேறு, கொலைக்கான காரணத்திலும் கொலையை நிகழ்த்தியவர்களிடத்திலும் ஒற்றுமை இருக்கிறது. கொலைக்கான அடிப்படைக் காரணம் ஜாதியும் ஆதிக்க ஜாதி வெறி மன நிலையும் தான். தங்களுடைய பெண்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாத தந்தைகள் இந்த கொலைகளை செய்துள்ளனர்.
இந்து மதம் தன்னை இந்துவாக கருதிக்கொள்கிற ஒவ்வொரு தனி மனிதனின் மூளையிலும் ஜாதி என்ற நஞ்சை ஆழமாக பாய்ச்சியிருக்கிறது. நால் வர்ணத்தையும் உண்டாக்கி அதில் ஒரு கூட்டத்தை மட்டும் உயர்ந்தவர்களாக சித்தரித்து, ஜாதிப் படிநிலையை உருவாக்கி ஒருவருக்கு ஒருவர் கீழானவர்கள் என்ற கட்டமைப்பை உண்டாக்கி தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் ஏற்பாட்டை செய்து வைத்திருக்கிறது இந்து மதம், இந்த ஏற்பாடு எதற்காகவென்றால் உயர்ந்த நிலையில் இருக்கின்ற கூட்டம் தங்கள் இருப்பை பாதுகாத்துக் கொள்ளவும் நிலைநிறுத்திக்கொள்ளவும் தான்.
ஜாதிப் பற்றோடும் ஆதிக்க வெறியோடும் திரிகின்ற ஒவ்வொரு தனி மனிதனுக்கும் படுகொலைகள் செய்திட்ட அந்த பாதிக்கப்பட்ட பெண்களின் தந்தைக்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடு இல்லை, ஜாதிப் பற்றோடு இருக்கிற ஒவ்வொரு தனி மனிதனும் தன் பிள்ளைகளுக்கு தன் ஜாதியிலேயே மணம் முடிக்கின்றனர். முடியாத பட்சத்தில் தான் ஜாதிக்கு நிகரான மற்றொரு ஜாதியிலோ அல்லது தன்னைவிட உயர் ஜாதியிலோ மணம் முடிக்கின்றனர் ஆனால் தான் கீழாக நினைக்கின்ற ஜாதியில் மணம் முடிப்பதில்லை காரணம் ஆதிக்க ஜாதி வெறி, இது காதல் திருமணத்திற்கும் பொருந்தும் தன் பிள்ளைகள் தன் ஜாதியிலோ அல்லது தன்னை விட உயர்ந்த ஜாதியிலோ உள்ள ஒருவரை காதலிக்கும்போது ஏற்றுக்கொள்ளும் பெற்றோர் தான் கீழாக நினைக்கின்ற ஜாதியை சேர்ந்த ஒருவரை தம் பிள்ளைகள் விரும்பும்போது மிகப்பெரிய அளவில் எதிர்க்கின்றனர். சரியான வாய்ப்பும் வசதியும் இருந்து மூளைச்சலவை செய்யக்கூடிய கைதேர்ந்த நபரால் தூண்டப்படும்போது இவர்களும் கொலைகாரர்கள் ஆவதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது.
இத்தகைய ஆணவப் படுகொலைகள் இல்லாது போக வேண்டுமானால் ஜாதி என்னும் அசிங்கத்தை ஒவ்வொரு தனி மனிதனும் தன் மனதில் இருந்து நீக்க வேண்டும், ஜாதி நீங்கிவிட்டால் ஜாதிஆணவமும் ஆதிக்க ஜாதிவெறி மனநிலையும் இல்லாது போகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயர்ந்த மன நிலையை ஒவ்வொருவரும் அடைவதில்தான் இருக்கிறது ஒட்டு மொத்த மனித சமூகத்தின் வளர்ச்சி. ஜாதியை இந்த சமூகத்திலிருந்து துடைத்தெறிய வேண்டிய பெரும் பொறுப்பு ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு நிறையவே இருக்கிறது.

சபரிமலையில் வழிபட பெண்களுக்கு அனுமதியும் – 12 வயது சிறுமி ராகவி படுகொலையும்

சபரிமலையில் வழிபட பெண்களுக்கு அனுமதியும் – 12 வயது சிறுமி ராகவி படுகொலையும்.
------------------------------------------------------------------------------------------------------
சபரிமலையில் வழிபடுவதற்கான உரிமையை பெண்கள் போராடி வெற்றிபெற்ற அதே வேளையில், தேனி அல்லிநகரைச் சேர்ந்த 12 வயது சிறுமி ராகவி ஆதிக்க சாதி வெறியிடம், வாழ்வதற்காகப் போராடி தோற்றுப்போய் தனது உயிரை இழந்திருக்கிறாள்.
ஆணும் பெண்ணும் சமம், பாலின வேறுபாடு கிடையாது, அனைத்திலும் சமத்துவம் என நீதிமன்றம் சொன்னதும், நமது சமூகம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியிருக்கிறது என்று நாமெல்லாம் மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், சமத்துவம் என்பதெல்லாம் இல்லவே இல்லை பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு உண்டு உயர்ந்தவன் தாழ்ந்தவன் எங்கேயும் உண்டு என்று சொல்லி ஆதிக்க சாதி வெறி தனது கோரப்பசிக்கு உணவாக சிறுமியின் உடலையும் உயிரையும் தின்று செரித்திருக்கிறது.
எந்த சமத்துவத்திற்கும் எப்போதும் எதிரிகளாக இருக்கும் சாதிகளையும் மதங்களையும் ஒழிக்காமல், சமத்துவம் கிடைத்துவிட்டதென்று எண்ணும் நமது கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியும் தற்காலிகமானதே. மனித மனங்கள் ஏற்காத சமத்துவத்தை சட்டம் மட்டும் எப்படி கொண்டுவந்து சேர்க்கும். வழிபடும் உரிமையை மதம் தடுக்குமென்றால் வாழ்கின்ற உரிமையை சாதி பறிக்குமென்றால் வீணாய்ப்போன மதங்களும் சாதிகளும் எதற்கு. சாதிகளும் மதங்களும் ஒழிந்தால் மட்டுமே எல்லா சமத்துவங்களும் நம்மிடையே வந்து சேரும்.
சாதி மதத்தை ஒழிப்பதற்கான மருந்து அவரவரிடமே இருக்கிறது அதை உட்கொள்வதற்கு பெரும்பாலானோர் உடன்படுவதில்லை என்பதே மிகப்பெரிய வேதனை. சாதி மத ஒழிப்பு எனும் நமது இலக்கை நோக்கி நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. சாதி மத ஒழிப்பிற்கான போராட்டங்களை நீட்டிப்பதற்கான தேவையும் அதிகமாகவே இருக்கிறது.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 
தமிழ்க்கவிதையில் எளிமையும், இனிமையும், புதுமையும் புகுந்து நவீன கவிதை பிறந்தது. தமிழ்க் கவிதை மரபில் உடைப்பு ஏற்பட்டது. கவிதை புதிய பரிமாணத்தில், புதிய களங்களில், தளங்களில் பயணித்தது.பாவேந்தர் பாரதிதாசனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானசீக குருவாக ஏற்று, பாரதிதாசனே வியந்து பாராட்டும் கவிஞராகத் திகழ்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 -அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடுவது அவருடைய சிறப்பு . இப்போது அவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 29 ஆண்டுகளே வாழ்ந்தாலும் தான் எழுதிய பாடல்களால் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் 'பாட்டுக்கோட்டை'யாகவே அறியப்பட்டவர்.
பட்டுக்கோட்டையார். திரையுலகப் பாடல்களில் பட்டிருந்த கறையை நீக்கி, மக்கள் நெஞ்சம் நிறைவுறவும்,வியத்தகு செந்தமிழில் எளிமையாக அருமையான கருத்துக்களும், முற்போக்குக் கருத்துக்களும் கொண்ட பாடல்கள் எழுதி குறுகிய காலத்தில் புகழ் அடைந்தவர் பட்டுக்கோட்டையார். கிட்டத்தட்ட 189 படங்களில் பாட்டு எழுதிய‌வர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
மக்கள் கவிஞரின் பாடல் வரிகள்
----------------------------------------------------
'ஆறறிவில் ஓரறிவு அவுட்டு- சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு - இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு!'
'பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே... ஹா... ஹா...
பசியும், சுண்டல் ருசியும் போனால்
பக்தியில்லை பஜனையில்லை'
'வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்...
எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒழச்சு சோறு போடுறான்.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்ல நாட்டைக் கூறு போடுறான் இவன்
சோறு போடுறான் அவன்
கூறு போடுறான்...'
'கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி
எடுக்கிற அவசியம் இருக்காது.
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது.
ஒதுக்கிற வேலையும் இருக்காது.
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது'
'மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா-தம்பி
மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே-நீ
வலது கையடா-நீ
வலது கையடா
தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா-நீ
தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா-எல்லாம்
பழைய பொய்யடா.

சே குவேரா

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னாவின்(ஜூன் 14, 1928 – அக்டோபர் 9, 1967)
----------------------------------------------------------------------------
தன் நாட்டிற்காக,இனத்துக்காக,மக்களுக்காக புரட்சி செய்த புரட்சியாளர்கள் உண்டு. இதில் சே குவேரா சற்று வித்தியாசமானவர், அர்ஜென்டினாவில் பிறந்த அவர் கியூபா,மெக்ஸிகோ,காங்கோ,பொலிவியா நாட்டு மக்களுக்காக புரட்சி இயக்கங்களில் கலந்து கொண்டு போராடினார்.
எனக்கு வேர்கள் கிடையாது கால்கள் தான் உண்டு என்று கூறிய சே குவேரா மக்களை நோக்கிய தனது பயணத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் வாழ்வியலை தெரிந்து கொண்டார். அவர்கள் படும் இன்னல்களையும் துயரங்களையும் கண்ட பிறகே அடிமைப்பட்டவர்களுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் போராட வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றுகிறது. மானுடப்பற்று கொண்டவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமான ஒன்று.
கியூபாவின் புரட்சியை சேகுவேராவை தவிர்த்துவிட்டு எழுதிவிட முடியாது. எங்கோ அர்ஜென்டினாவில் பிறந்து, கியூப விடுதலைக்காக போராடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. ஆனால் அவர் விலங்கு பூட்டப்பட்ட மக்களின் விடுதலையில்அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். மருத்துவம் பயின்ற ஒருவர், ஆஸ்துமா நோயுடன் கைகளில் துப்பாக்கி ஏந்தி படைத் தளபதியாக செயல்பட முடியுமென்றால், அது சேகுவேரா எனும் சாகசக்காரனால்தான் முடியும்.
சேவும் காஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய புரட்சியால் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா ஆட்சியில் இருந்து வீழ்ந்தார். ' இனி கியூப மக்கள் அமெரிக்காவின் அடிமையாக இருக்கப்போவதில்லை' என்ற மகிழ்ச்சி அனைவரிடத்திலும் ஏற்பட்டது. தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் போலவே சேகுவேராவை கியூப மக்களும் காஸ்ட்ரோவும் கொண்டாடினார்கள். சேகுவேராவுக்கு அரசு பதவியும் கியூப நாட்டு கரண்சியில் 'சே' எனக் கையெழுத்திடம் கவுரவுமும் வழங்கப்பட்டது.கியூப நாட்டு தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் வகையில் பல சிறப்பான திட்டங்களை கொண்டுவந்ததோடு மக்களோடு மக்களாக நின்று தமது உடல் உழைப்பையும் தந்தார்.
அரசு ஆடம்பரங்களையும்,மரியாதைகளையும் உதறித்தள்ளிவிட்டு, 'காங்கோவில் நடக்கும் ஆயுத புரட்சிக்கு உதவ போகிறேன்' என காஸ்ட்ரோவிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார் ‘சே’. ஒரு தோழனை விட்டும் செல்லும் நிலை சேவுக்கு ஏற்பட காரணம், உலக மக்களின் விடுதலை மீது அவருக்க இருந்த பெரு விருப்பம்தான்.
காங்கோவில் இருந்து பொலிவியா வந்த சேகுவேரா, அங்குள்ள சிறு ஆயுதக் குழுக்களுக்கு கெரில்லா பயிற்சிகளை அளித்தார். புதிய நாடு, வித்யாசமான தட்பவெட்ப சூழ்நிலை என பொலிவியாவில் சிரமத்தை எதிர்கொண்டார். அதற்கெல்லாம் அவர் அஞ்சவில்லை. ஒருகட்டத்தில், (1967-ம் வருடம் அக்டோபர் மாதம்) அமெரிக்க படைகளால் சுற்றி வளைக்கப்பட்டார் சேகுவேரா. உலக முதலாளித்துவத்துக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய சேகுவேரா பிடிப்பட்டதை அமெரிக்க அதிகாரிகளால் எளிதில் நம்ப முடியவில்லை.தான் இறக்கப்போவது தெரிந்த நிலையிலும், போராட்டங்கள் மீதும் மாற்றத்தின் மீதும் மிகப் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால்தான் அவர் அசாத்தியங்களை விரும்பும் எதார்த்தவாதியாக இருந்தார்.
அக்டோபர் 9, சேகுவேரா சுட்டுக் கொல்லப்பட்டார். 'நீ ஒரு கோழையை சுடவில்லை. ஒரு வீரனைத்தான் சுடுகிறாய்' என தோட்டாக்களை தனது நெஞ்சில் வாங்கி கொண்டார். அவர் மறைந்து 50 வருடங்கள் ஆகப் போகின்றன. ஆனால், இன்றும் ‘சே’ கொண்டாடப்படுகிறார். கியூபாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும். இப்போதும் இளைஞர்களின் சட்டைகளிலோ, போராட்டக் களத்திலோ சேகுவேரா புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. உலக மக்களின் விடுதலைக்காக அவர் போராடினார். இந்த உலகுக்கே அவர் பொதுவானவர். அடக்குமுறைகள் இருக்கும் வரையில் போராட்டங்கள் நீடித்துக் கொண்டுதான் இருக்கும். போராட்டங்கள் இருக்கும் வரையில் ‘சே’வும் மக்கள் நினைவுகளில் வாந்துகொண்டுதான் இருப்பார்.
இன்றும் கியூபாவில் பள்ளிக்குழந்தைகள் காலையில் இப்படித்தான் உறுதிமொழி எடுக்கிறார்கள், எங்கள் முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டாக இருந்தார்கள் நாங்கள் சேகுவேராவைப் போல் இருப்போம் என்று. ஒரு புரட்சியாளனை இதைவிட சிறப்பாக எப்படி பெருமைப் படுத்திவிட முடியும்.
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை.நான் சாகடிக்கப் படலாம் ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டேன்.

அக்டோபர் 11, உலகப் பெண் குழந்தைகள் தினம்

அக்டோபர் 11, உலகப் பெண் குழந்தைகள் தினம்.
----------------------------------------------------------------------------
“பொண்ணு பொறக்குமா ஆணு பொறக்குமா பத்து மாதமாப் போராட்டம், இதுவும் பொண்ணாப் பொறந்தா கொன்னுடுவேன்னு புருஷன் பண்ணுறான் ஆர்ப்பாட்டம்”
பெண் சிசுக்கொலை முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் முன்பு இருந்ததை விட வெகுவாக குறைத்திருக்கிறது என உறுதியாகச் சொல்லலாம். இதற்கு பெற்றோரிடையே ஏற்பட்டிருக்கும் மனமாற்றம் ஒரு காரணமென்றால் பெண் குழந்தைகளுக்கான அரசு நலத்திட்டங்கள் மற்றொரு காரணம்.
இருந்த போதிலும் இன்னும் நம் மக்களிடையே பெண் குழந்தையை விட ஆண் குழந்தை உயர்வானது என்ற எண்ணம் மேலோங்கியே இருக்கிறது. உணவு,உடை, படிப்பு, விளையாட்டுப் பொருள் என ஒவ்வொரு விஷயத்திலும் புறக்கணிப்பை, இரண்டாம் இடத்தை, கசப்பைச் சந்திக்கும் பெண் குழந்தை இளமையிலிருந்தே மரபார்ந்த பாகுபாடுகளைத் தின்று செரிக்க முடியாமல் தான் வளர்கிறாள்.
குழந்தைகளிடையே பாகுபாடு காட்டும் எண்ணத்தை முதலில் துடைத்தெறிய வேண்டும், எந்தக் குழந்தையாக இருந்தாலும் அது நம் குழந்தை தான் ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம் தான் என்ற உணர்வோடு குழந்தைகளை வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.
இன்று பெண் குழந்தைகள் சிசுக்கொலை எனும் பேராபத்திலிருந்து தப்பி வந்தாலும் பாலியல் சீண்டல்கள்,வன்முறைகள்,வன்புணர்வுகள்,கொலைகள் என்ற கொடுமைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலின் தான் வாழ்ந்து வருகிறார்கள். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பிரச்சினைகளுக்குப் பொறுப்பையும் பழியையும் அவர்கள் மீதே திணிப்பது மிகவும் கொடுமையானது.பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான அனைத்து வன்முறைகளும் முற்றிலும் ஒழிய வேண்டும் அதுவே காலத்தின் தேவை.
இயற்கையின் இயல்பான மலர்ச்சியோடு பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம். சமத்துவக் கண்ணோட்டத்தோடு அணுகக் கற்றுக்கொள்வோம். மாசற்ற அன்பின் பார்வையை, களங்கமற்ற அரவணைப்பை, உள்ளார்ந்த நெகிழ்ச்சியுறுதலை அனுபவிக்கப் பழகிக்கொள்வோம்.பெண்மையைப் புனிதப் படுத்துவதாகச் சொல்லி, கீழ்மைப்படுத்திய காலங் களுக்கு விடைகொடுத்து, அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கும் வண்ணம் ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வோம்.

உன்னத புகழுக்கு உறுப்புகள் தானம்

உன்னத புகழுக்கு உறுப்புகள் தானம்
----------------------------------------------------------
அக்டோபர் 14, உடல் உறுப்புகள் தானம் மற்றும் சிகிச்சை தினம்.
உடல் உறுப்புகள் தானம் ஆங்கிலத்தில் ‘கெடாவர் டொனேஷன்’ அல்லது ‘கெடாவர் ட்ரான்ஸ்ப்ளான்ட்’ என்று அழைக்கப்படுகிறது
.
உடல் உறுப்புகள் தானம் என்பது உடலின் உறுப்புகளில் ஒன்றையோ,பலவற்றையோ ஏதேனும் ஒரு உறுப்பின் பகுதியையோ ஒருவர் தானம் செய்யும் செயல் ஆகும்.
ஒருவர் உயிரோடு இருக்கும்போதே உடல் உறுப்பு தானம் செய்ய இயலும். இரு சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரல் திசு, கணையத் திசு, நுரையீரல் திசு, போன்றவற்றை உயிருடன் இருப்பவர் தானமாகக் கொடுக்க முடியும். இதே போல் எலும்புத் திசு, எலும்பு மஜ்ஜைத் திசு, இதய வால்வுப் பகுதிகள் போன்றவற்றையும் கொடுக்கலாம், இரத்தம் கொடுப்பதைக்கூட இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
இறந்து விட்ட ஒருவரின் உறுப்புகளையும் தானமாகக் கொடுக்கலாம், அவற்றை எடுத்துத் தேவைப்படுவருக்குப் பொருத்தலாம். கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல், கணையம், சிறுகுடல், இரைப்பை, இதய வால்வுகள், நுரையீரல், எலும்புத் திசு, தோல் பகுதிகள் போன்ற உறுப்புகளையும் திசுக்களையும் இவ்வாறு கொடுக்கலாம். வெளிநாடுகளில் ஆண் விந்தகப் பகுதிகளைக்கூட இவ்வாறு பொருத்துகிறார்கள்.
இறப்புக்குப் பின்னரான உறுப்பு தானத்தில் மூளைச்சாவு முக்கிய பங்காற்றுகிறது. மூளைச்சாவு என்பது மூளை தனது செயல்பாட்டை முற்றிலும் நிறுத்தி விடுவதாகும். விபத்துகளில் தலையில் ஏற்படும் காயங்கள் மூளைச்சாவுக்கான முக்கிய காரணம். மூளைச்சாவு அடைந்த பிறகும் இதயமும் நுரையீரலும் செயல்படும், இரத்த ஓட்டமும் நடைபெறும் இதனால் பிற உறுப்புகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
மூளைச்சாவு அடைந்தவர் அதற்கு மேல் சாதாரணமான வாழ்க்கையை வாழ முடியாது என்ற நிலையிலும் இனி சில மணிநேரங்களிலோ சில நாட்களிலோ இதயமும் தனது செயல்பாட்டை நிறுத்தி மரணம் நிகழும் என்ற நிலையிலும் அவருடைய உறுப்புகளை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு பொருத்துவதே உறுப்பு மாற்றுச் சிகிச்சையின் அடிப்படையாகும்.
இயற்கை மரணம் அடைந்தவர் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முடியும் என்பது பற்றி மருத்துவ உலகில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இயற்கை அடைந்து விட்ட ஒருவரின் உடலை இறந்து ஒரு சில நிமிடங்களுக்கு உள்ளாக அல்லது இறக்கப் போகிறார் என்று தெரிந்து விட்ட நிலையில் உடனடியாக செயற்கை முறையில் இரத்த ஓட்டத்தை நீட்டித்து அந்த நிலையில் அவருடைய உறுப்புகளை இன்னொருவருக்கு மாற்றக்கூடுமா என்பது பற்றியும் ஆய்வாளர்கள் சிந்தித்து வருகிறார்கள். இப்போதிருக்கும் நிலையில் இயற்கை மரணம் அடைந்தவரின் முழு உடலையும் மருத்துவ கல்விக்காகவும் மருத்துவ ஆய்வுகளுக்காகவும் கொடுக்கலாம் இது உடல் தானம் ஆகும்.
விபத்து நேர்ந்து மூளைச்சாவு அடையும் நிலையில் தன்னுடைய உறுப்புகளை தானமாக எடுத்துக் கொள்ளலாம் என்று ஒருவர் முன்னரே தன்னுடைய விருப்பத்தை பதிவு செய்து வைக்கலாம்.
மூளைச்சாவு அடைந்துவிட்ட ஒருவருடைய உறுப்புகளை எடுப்பதற்கு அவருடைய நெருங்கிய உறவினர்கள் அனுமதியும் சம்மதமும் வழங்க வேண்டும். உயிருடன் இருக்கும்போது கொடுக்கப்படும் சிறுநீரக தானம் போன்றவற்றிற்கு தானம் கொண்டுப்பவரே தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்கலாம்.
உடல் உறுப்புகள் தானத்தில் இந்தியாவில் தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.

இந்து மதத்தை பாதுகாத்து சிறப்பாக வளர்த்தவர் ராஜராஜசோழன் - H.ராஜா

இந்து மதத்தை பாதுகாத்து சிறப்பாக வளர்த்தவர் ராஜராஜசோழன் - H.ராஜா
---------------------------------------------------------------------------------------------------------------------
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஊருக்கு வெளியே பறச்சேரி, தீண்டாச்சேரின்னு குடியிருப்புகள் வைத்திருந்தானே,
தஞ்சை பெரிய கோவில்ல நானூறு பெண்களை தேவரடியார்களா அதாவது பாலியல் அடிமைகளா நியமிச்சிருந்தானே,
பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயம்,தேவதானம்,சீவிதம் அப்படிங்கிற பேருல பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை தானமாகக் கொடுத்து அதற்கு வரிவிலக்கும் தந்தானே,
ஏழை விவசாயிகளுக்கு கடுமையான வரி விதிச்சு வரி கட்டாதவங்களுக்கு விதவிதமா தண்டனைகள் கொடுத்தானே,
இந்துமதத்தின் வர்ணாசிரமத்தை, ஜாதியை, தீண்டாமையை,தேவதாசி முறையைக் கட்டிக்காத்து பார்ப்பன அடிமையாய் வாழ்ந்தானே,
அதுனால ராஜராஜசோழன இப்படி பாராட்டுறியா ராஜா.

படேலும் மோடியும் – ஒற்றுமைக்கான சிலையும்

படேலும் மோடியும் – ஒற்றுமைக்கான சிலையும்
----------------------------------------------------------------------------
நரேந்திர மோடி வல்லபாய் படேலுக்கு உலகத்திலயே மிக உயரமான சிலையை(597 அடி) 3000 கோடி செலவில் நிறுவி அதனை திறந்து வைத்திருக்கிறார். இந்த சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என்று பெயரிடிடப்பட்டுள்ளது. மோடிக்கும் படேலுக்கும் உள்ள ஒற்றுமைக்காக இந்த பெயரை வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த படேலுக்கும் பாஜாகவைச் சேர்ந்த மோடிக்கும் என்ன ஒற்றுமை, இந்துத்துவா என்பது தான் அவர்களுக்குள்ள ஒற்றுமை அவர்கள் இருவரும் இணைகின்ற புள்ளி அதுதான். இன்னும் புரியும்படியாக சொல்ல வேண்டுமானால் அப்போதைய மோடி தான் படேல், இப்போதுள்ள படேல்தான் மோடி. மோடியின் முன்னோடிதான் இந்த படேல், ஆட்சியிலும் அதிகாரத்திலும் ஒரு இந்துத்துவாவாதி இருந்தால் அவர்களது எண்ணமும் செயல்பாடும் எப்படி இருக்கும் என்பதற்கு படேலும் மோடியுமே எடுத்துக்காட்டு.
வல்லபாய் பட்டேலைத் தன் நாயகனாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன்னிறுத்துவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. இந்து மதவெறி அரசியலுக்கு ஏற்பளித்த, இஸ்லாமியர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது அதைப்பற்றிக் கவலைப்படாமல், இந்து மத வெறி அமைப்புகளுக்கு ஆதரவாக நின்ற தலைவர், இந்தியாவின் முதல் துணை பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல். படேலைத் தங்கள் நாயகனாக இந்துத்துவவாதிகள் முன்னிறுத்துவதற்க்கான காரணம் இதுதான்.
ஆங்கிலேயர்கள் சேர்த்து பயிற்சி கொடுத்து வைத்திருந்த இராணுவத் தைப் பயன்படுத்தி எல்லா பகுதிகளையும் வலுவில் பிடுங்கி ஒருங்கிணைத்துவிட வேண்டும் என்ற உந்துதலும் முனைப்பும் படேலிடம் மிகுந்து கிடந்தன. இதே கனவுதான் ஆர்.எஸ்.எஸ் இடம் ‘அகண்டபாரதம்’ என்ற திட்டமாகவும், காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சேயிடம் ‘இந்து ராஷ்டிரம்’ என்ற பெயரிலும் இருந்து வந்தது. இன்று நரேந்திர மோடியும், வல்லபாய் பட்டேலும், பிற இந்து மதவாத அமைப்புகளும் எந்த புள்ளியில் சந்திக்கிறார்கள் என்பது இப்போது புரியும் ‘இந்து மயமே இந்தியம்’, ‘வன்முறையே வழிமுறை’ என்பதில் கோட்சேவுக்கும், பட்டேலுக்கும், நரேந்திர மோடிக்கும் வேறுபாடே கிடையாது.
மோடி ஒரு இந்துத்துவாவாதி என்பது நமக்கு நன்றாகத் தெரியும், படேலின் பேச்சுக்களையும் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் அறிந்துகொண்டால் அவரும் இந்துத்துவாவாதிதான் என்பது நன்கு விளங்கும்.
இந்தியாவில் பணிபுரிய விருப்பந்தெரிவித்த முஸ்லிம் அதிகாரிகள்கூட இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள். ஆகவே, அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பது படேலின் கருத்து.
வங்காளத்தில் கலவரத்தில் முஸ்லிம்கள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி, அதைத் தடுக்கவே ஆள் இல்லா நிலை ஏற்பட்ட போது, படேல் 1946 ஆகஸ்ட் 21 அன்று இராஜகோபாலாச்சாரியாருக்கு எழுதிய கடிதத்தில், இவ்வாறு குறிப்பிட்டார்: “பாதுகாப்பும் ஒழுங்கும் முற்றிலுமாக நொறுங்கியது; இவற்றைத் தடுக்க எவருமே இல்லை. ஆனாலும், முஸ்லீம்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். ஏனெனில், இறந்தவர்களில் விகிதாச்சாரத்தில் முஸ்லிம்களே கணிசமாக அதிகம் என்று நான் கேள்விப்படுகிறேன்.’’
வங்கப் பிரிவினை நிகழ்ந்த போது அங்கிருந்து இந்துக்கள் இந்தியாவை நோக்கி வெளியேறினர். அப்போது படேல்,இந்துக்கள் கிழக்கு வங்காளத்தில் இருந்து வெளியேற நேர்ந்தால் அதே அளவு எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவர் என்று இந்தியா பாகிஸ்தானை எச்சரிக்க வேண்டும் என்று யோசனை கூறியிருக்கிறார். இதுதானே இந்துத்துவா யோசனை.
‘முஸ்லிம்கள் தாக்கினார்கள்’ என்ற புகார் வந் தாலே, அதைப் பற்றி விசாரிக்காமலே “அப்பகுதிகளில் உள்ள இந்துக்களின் கோழைத்தனம் அவ மானகரமானது’’ என்று படேல் கருத்துரைத்தார்.
இந்து மகா சபையினரையும் காங்கிரசில் சேர அழைத்தார் வல்லபாய் படேல். ‘இந்து மதத்தின் பாதுகாவலர்கள் நீங்கள் மட்டுமே என்று நீங்கள் கருதியிருந்தால், தவறு செய்கிறீர்கள்’ என்று கூறினார்.
‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தங்கள் அறிவுத் திறனைப் பயன்படுத்தி சாதுர்யமாக செயல்பட வேண்டும்’ எனக் கூறிய படேல், இஸ்லாமியர்களை நோக்கி, ‘நாட்டுப்பற்று அற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும். இன்னமும் இரண்டு குதிரைகளில் சவாரி செய்கிறவர்கள் (முடிவெடுக்காதவர்கள்) இந்துஸ்தானத்தை விட்டு வெளியேறி விட வேண்டும்’ என்றார் இந்தியா என்று சொல்லை விட இந்துஸ்தானம் என்ற சொல் படேலுக்கு இனிப்பானது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை அடக்கி வைக்க வேண்டும் என்று கோருவோர் காங்கிரசில் இருந்தனர். படேல் அவர்களுக்குக் கூறினார்.
‘காங்கிரசின் அதிகாரமான இடத்தில் இருப்பவர்கள் தங்கள் அதிகார நிலையைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நொறுக்கிவிடலாம் என்று கருதுகிறார்கள். ‘தடி’ எடுத்து ஓர் அமைப்பை அடக்கி விட முடியாது. மேலும் ‘தடி’ என்பது திருடர்களுக்கும் கொள்ளைக்காரர்களுக்குதான். தண்டம் எடுப்பது அதிக பலனைத்தராது. அது மட்டுமல்லாது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் திருடர்களோ கொள்ளைக்காரர்களோ அல்லர். அவர்கள் தேச பக்தர்கள். அவர்களின் சிந்தனைப் போக்கு மட்டுமே மாறுபட்டது. காங்கிரசுக்காரர்கள் அவர்களை அன்பால் வெற்றி கொள்ள வேண்டும் (‘For a United India’, Speeches of Sardar Patel, Publi cation Division, Govt. of India, pp.64-69; A.G.Noorani, Patel’s Communalism, p.15)
நேரு வெளிநாடு சென்றிருந்த நேரம், அவர் அருகே இல்லாததைப் பயன்படுத்தி, 1949 நவம்பர் 10ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினரை காங்கிரசில் சேர அனுமதித்து தீர்மானம் இயற்றினார் படேல். நேரு திரும்பி வந்து, நவம்பர் 17 அன்று இத் தீர்மானத்தை இரத்து செய்தார்.
1948 செப்டம்பர் 9 அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் கோல்வால்கருக்கு படேல் எழுதிய கடிதத்தில் ‘ஆர்.எஸ்.எஸ். பரப்பிய வகுப்புவாத நஞ்சினால்தான் காந்தியை இழக்க வேண்டி வந்தது’ என்று எழுதினார். ஆனால், அதே கடிதத்தில் ஆர்.எஸ்.எஸ் தனது தேசப்பற்று செயல்பாடுகளை காங்கிரஸ் சேர்வதன் மூலமே செய்ய முடியும் என்று அழைப்பு விடுத்தார். படேலின் பார்வையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு தேசப்பற்றாளர் அமைப்பு.
காந்தியின் படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கிய கோல்வால்க்கர் 1948 நவம்பர் 13 அன்று கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் ஒரு அமைப்பு வரைவைத் தயாரித்து அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கும்படிக் கூறினார் படேல். இதைப் பெற்றுக் கொண்டு (சூன் 1949) ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீதான தடையை படேல் நீக்கினார். (12சூலை 1949) மறுநாள் கோல்வால்க்கரும் விடுதலை செய்யப்பட்டார்.
ஆர்.எஸ்.எஸ். மீது கட்டாயத்தின் பேரிலேயே படேல் தடை விதிக்க நேர்ந்தது. 1949 ஜீலை 12இல் ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கப் பட்டது. படேல் கோல்வால்கருக்குக் கடிதம் எழுதினார். அதில். ‘எனக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும், சங்கத்தின் மீதான தடை நீக்கப்பட்ட போது எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் என்பது’ என்று எழுதினார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பாதுகாக்கிற வேலையை படேல் செய்தார். காந்தியின் படுகொலையினால் ஆர்.எஸ்.எஸ். அல்லது இந்து மகா சபை முழுவதும் பாதிக்கப்பட்டுவிடாமல், அகப்பட்டுக் கொண்ட அந்த சிலரோடு பிரச்சினை முடிக்கப்பட வேண்டும் என்பது அவருடைய உள்ளார்ந்த விருப்பமாக இருந்தது. 1948 பிப்ரவரி 27இல் நேருவுக்கு எழுதிய கடிதத்தில், படேல் ” நமக்கு முன் உள்ள சான்றுகளின் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ். அல்லது இந்து மகா சபையின் வேறு எந்த உறுப்பினரையும் தண்டிக்க இயலாது என்றே நான் கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டார். இது ஆர்.எஸ்.எஸ் செய்தது அல்ல என்பதே கடிதத்தில் வலியுறுத்தப்பட்ட செய்தி.
நரேந்திர மோடி கோரும் மத சார்பின்மை(!) வல்லபாய் படேலிடம் இருந்தது. அது முஸ்லிம்கள் விரட்டப்படுவதை, கொத்துக் கொத்தாய் கொல்லப்படுவதை ஏற்றுக் கொண்டது.
இந்துத்துவாவாதியாக செயல்பட்ட படேலுக்கு மோடி சிலை வைக்கிறார் என்றால் ஆச்சரியம் இல்லை, சிலை வைக்காமல் இருந்தால் அது நன்றி கெட்டதனமல்லவா? இனம் இனத்தோடு சேர்ந்திருக்கிறது.

Saturday 25 August 2018

மனிதநேயமும் ஐயப்பனின் கோபமும்

ஒவ்வொரு இயற்கைப் பேரிடரும் உயிர் இழப்பையும் பொருள் இழப்பையும் தாங்கமுடியாத வலியையும் சொல்லமுடியாத சோகத்தையும் தந்துவிட்டு செல்வதோடு மனிதநேயத்தின் வலிமையையும் சொல்லிவிட்டுத்தான் செல்கிறது.
ஒவ்வொரு சாதாரண மனிதனும் மனிதநேயம் மிக்கவனாகவே இருக்கிறான். பேரவலம் நடைபெறும்போதெல்லாம் பிறரது துன்பத்தை கண்டு ஓடோடிச்சென்று உதவுபவனாகவும் தம்மால் இயன்றதை கொடுப்பவனாகவும் ஏதும் செய்ய இயலாத போது ஆற்றாமையில் கண்ணீர் விட்டு அழுகின்றவனாகவுமே இருக்கிறான்.
மனிதநேயம் மிக்கவர்களாலேயே இந்த உலகம் இன்னும் நிலை பெற்றிருக்கிறது இல்லாது போனால் உலகம் என்றோ மண்ணோடு மண்ணாயிருக்கும். சாதி மதம் இனம் மொழி கடவுளின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்கள்தான் மனிதநேயமற்ற இழிபிறவிகளாக இருக்கின்றனர்.
அனுப்ரியா என்ற விழுப்புரத்தில் உள்ள சிறுமி கேரளத்தில் நிகழ்ந்த இயற்கை பேரழிவை தொலைக்காட்சியில் பார்த்தபோது ஒரு குழந்தை அழுவதைப் பார்த்து தானும் அழுதவள் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என எண்ணி தான் மிதிவண்டி வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை கொடுத்து உதவி இருக்கிறாள், ஒருவர் அழும்போது தான் அழுவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அந்த சிறுமியின் எண்ணம்தான் ஒவ்வொரு சாதாரண மனிதனின் எண்ணமும்.
மெத்தப்படித்த அறிவாளியாக சுட்டிக்காட்டப்படுகிற ஆடிட்டர் குருமூர்த்தி கேரள பேரழிவிற்கு காரணம் அனைத்து பெண்களையும் ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டதனால் ஐயப்பன் கொண்ட கோபம் தான் என்கிறார், சுனாமி வந்ததற்கு காரணம் சங்கராச்சாரியாரை கைது செய்ததுதான் என்று கூறியவர்கள்தான் இவர்கள்.
ஒரு பேரவலம் நடைபெறும்போது கூட தங்கள் மதத்தையும் மதக்கருத்துக்களையும் நிலைநிறுத்த முயல்கின்ற கொடூர மனம் படைத்த மதவாதிகள். இவர்கள் பிழைப்பு நடத்துவற்கு மதம் வேண்டும் மதம் நிலை பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் ஒரே சிந்தனை, இது கடவுள் தந்த தண்டனை எல்லோரும் அனுபவியுங்கள் என்று சொல்வது எப்படிப்பட்ட குரூர மனத்தின் வெளிப்பாடு,மதவாதிகளுக்கும் மனித நேயத்திற்கும் வெகுதூரம், இல்லையென்றால் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரை தீயிட்டுக் கொளுத்தியிருப்பார்களா.
இந்த உலகில் இன்னும் மனித இனம் நிலைபெற்று வாழ்வது அனுப்ரியாக்களால் தான். அனுப்பிரியாக்களை வளர்ப்பதில்தான் இருக்கிறது எதிர்கால மனிதகுலத்தின் வாழ்வு.

60,000 யானைகள் கப்பலில் சென்ற கதை - சீமானின் கதைகள்

அன்பான உறவுகளே நான் சில மதங்களுக்கு முன்னால் சொன்ன ஆமைக்கதை, ஆஸ்திரேலியா கப்பலில் வடை சுட்ட கதைகளை கேட்டு கைதட்டி விசிலடித்து சில்லறையை சிதற விட்டிருப்பீர்கள், நான் இப்போது ஒரு கதை சொல்லப்போகிறேன் இது நமது பாட்டன்களான தமிழ் அரசர்கள் கதை.
நம் அரசர்கள் அண்டை நாட்டின் மீது படையெடுத்து செல்லும்போது 60,000 யானைகள்,60,000 பாகன்கள்,படைவீரர்கள்,யானைகள் மற்றும் மனிதர்களுக்கான உணவு ஆகியவற்றை மரக்கலங்களில் கொண்டு செல்வார்கள் ஏனென்றால் அந்த காலத்தில் உலோகத்திலான கப்பல்கள் இல்லை. தம்பி தங்கைகளே ஒரு யானையின் எடை சுமாராக 6000 கிலோகிராம் என்றால் 60,000 யானைகளின் எடையை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அவற்றை ஏற்றிச்சென்ற மரக்கலங்கள் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
நீங்கள் நினைக்கலாம் காட்டில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த யானைகளை பிடித்துவந்து கொடுமைப்படுத்தலாமா, அவ்வளவு பெரிய மரக்கலங்களை செய்வதற்கு காடுகளை அழிக்கலாமா என்று. நீங்கள் அவ்வாறெல்லாம் நினைக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும் ஏனென்றால் நான் உங்களை அவ்வாறு வளர்க்கவில்லை, கைதட்டி விசிலடித்து நான் சொல்வதே வரலாறு என்று நம்பி சில்லறயை சிதறவிடுவதற்கே உங்களை பழக்கப்படுதியுள்ளேன். இருந்தாலும் ஒன்றை மட்டும் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும் உறவுகளே, நமது சுயநலத்துக்காக செய்யக்கூடாதது எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
நமது அரசர்கள் யானைகளை வைத்து எப்படி மற்றவர்களிடம் படம் காட்டி நாட்டைப் பிடித்தார்களோ அதைப்போலவே நானும் கையை முறுக்கி ஆவேசமாக சத்தம்போட்டு வாயாலே வடை சுட்டு உங்களை கைதட்டவும் விசிலடிக்கவும் வைத்துக்கொண்டிருக்கிறேன். எப்போதும் இல்லாததை பற்றிக் கவலைப்படக்கூடாது இருப்பதை வைத்துக் கொண்டு ஏமாற்றத் தெரிய வேண்டும், இதனால் தான் உறவுகளே நான் அடிக்கடி சொல்கிறேன் நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று.

Tuesday 7 August 2018

அறத்தை மீறிய ஆசிரியர்களும், கண்டுகொள்ளாத களவானிகளும்

அறத்தை மீறிய ஆசிரியர்களும், கண்டுகொள்ளாத களவானிகளும்
------------------------------------------------------------------------------------------
தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும் அறத்தையும் நல் ஒழுக்கத்தையும் கற்றுத்தந்து அவர்களை சிறந்த மனிதர்களாக ஆக்கும் பொறுமையும் திறமையும் ஆசிரியர்களுக்கு உண்டு என ஒவ்வொரு பெற்றோரும் நம்புகின்றனர் ஆனால் இந்த நம்பிக்கையைப் பொய்யாக்கும் விதமான செய்திகளே அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன.
அண்ணா பல்கலைக்கழகம் உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு கல்வி நிறுவனம், இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை உலக அளவில் இருக்கிறது அதனாலேயே மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் இங்கு பயின்ற மாணவர்களை பணியில் அமர்த்திக்கொள்கின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையை கெடுக்கும்விதமாகவும் பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
தங்கள் தேர்வுத்தாள்களை மறுகூட்டல் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்த மாணவர்களிடமிருந்து லஞ்சமாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கும் தோல்வி அடைந்தவர்களுக்கும் அதிக மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி அடைய வைத்திருக்கிறார்கள். இந்த ஊழல் முறைகேட்டில் இதுவரை 200 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டிருக்கிறது. இந்த ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவருமே உயர் கல்வி கற்று உயர் பதவியில் இருந்து கொண்டு அதிக சம்பளம் பெறக்கூடிய பேராசிரியர்களும் உதவிப் பேராசிரியர்களும் தான்.
அறத்தை கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்கள் அறத்தின் மீது அக்கறை இல்லாமல் பொருளின் மீது பேராசை கொண்டிருக்கின்றனர். நாமும் இவர்களை நம்பித்தான் நம் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறோம் அறத்தையும் நல் ஒழுக்கத்தையும் கற்றுத்தருவார்கள் என நம்பி. இவர்களிடம் பயிலும் மாணவர்களிடம் நாம் எவ்வாறு அறத்தையும் ஒழுக்கத்தையும் எதிர்பார்க்க முடியும், இவ்வாறு பணம் கொடுத்து மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று வெளியில் வரும் மாணவன் இந்த சமூகத்துக்கு என்ன நல்லது செய்வான். பெற்றோருக்குத் தெரியாமல் இந்த குற்றச்செயல் நடந்திருக்க முடியுமா அப்படியானால் தங்கள் பிள்ளைகளிடமிருந்து பெற்றோர் எதிர்பார்ப்பதுதான் என்ன, அறம் வேண்டாத பொருள் மட்டும் தானா. பணம் மட்டும் இருந்தால் போதும் ஒருவன் படிக்காமலேயே அதிக மதிப்பெண்ணுடன் பட்டமும் பெற்று வேலையும் பெற்றுவிட முடியுமானால் எதற்காக இந்த கேடுகெட்ட கல்விமுறை தேர்வுமுறை.
இது எதுவுமே தெரியாமல் ஏதாவது ஒரு அரசு வேலை கிடைத்துவிடாதா என்று எண்ணி அரசுப்பணிக்காக நம்பிக்கையோடு தொடர்ந்து தேர்வெழுதி வருகிறதே ஒரு இளைஞர் கூட்டம் அவர்களுக்கு இந்த சமூகம் சொல்ல வருவதுதான் என்ன. இந்த இளைஞர்கள் விரக்தியுற்று ஒரு கட்டத்தில் தவறான பாதையில் செல்லும்போது அவர்களுக்கு அறிவுரை சொல்ல வரும் அறிவாளிகள் கூட்டம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது.
உலக அளவில் நடக்கின்ற ஊழல்களைப் பற்றி எல்லாம் வாய்கிழிய பேசியும் எழுதியும் வரும் நாம் நம்மைப்போன்ற சக மனிதர்களின் ஊழல்களை கண்டும் காணாமல் கடந்துவிடுவது எதனால், உண்ணுவது உறங்குவதைப்போல் ஊழலும் சாதாரண நிகழ்வுதான் என எண்ணத் தொடங்கிவிட்டோமா, நம்மைப்போன்ற ஒருவர்தானே செய்திருக்கிறார் என்ற பாசமா, வாய்ப்புக் கிடைத்தால் நாமும் யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்யலாம் என்கிற கேடுகெட்ட மனநிலையா. இனி வரும் காலங்களில் தனி மனித ஊழல்வாதிகள் பெருகி வருவர், தனி மனித ஊழல்வாதிகள் நிறைந்த சமூகத்தை ஆள்வதற்கு ஊழல் அரசர்களே வருவார்கள் உத்தமர்கள் வரப்போவதில்லை.

அடிமைகளின் வாழ்க்கை

அடிமைகளின் வாழ்க்கை
----------------------------------------
அப்படி ஒன்றும் எளிதானதல்ல அடிமைகளாய் வாழ்வது, சூடு சொரணை வெட்கம் மானம் எல்லாவற்றையும் உதிர்த்து விட வேண்டியதாய் இருக்கிறது, விடுதலை உணர்வோடும் தன்மானத்தோடும் வாழத்தெரிவதில்லை அடிமைகளுக்கு, அடிமைகளாய் நடத்தும் ஏதாவதொரு எஜமான் தேவையாய் இருக்கிறது எப்போதும் அவர்களுக்கு, முகத்தில் காறி உமிழ்ந்தாலும் துடைத்துவிட்டு மீண்டும் துப்புங்கள் எஜமான் என்று முகத்தைக்காட்டும் மனப்பக்குவம் தேவையானதாக இருக்கிறது. ஆகச் சிறந்த அடிமை தான்தான் என்பதை நொடிக்கொரு முறை நிரூபிக்க வேண்டியதாக இருக்கிறது.
அடிமைகளுக்குள் அவ்வப்போது போட்டியும் வந்துவிடுகிறது யார் மிகச் சிறந்த அடிமையென்று காட்டிக்கொள்வதில், அடிமைத்தனத்தில் புதிய யுக்திகளை கற்றுக்கொண்டுவரும் புதிய அடிமைகளிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டி இருக்கிறது அதற்காக தனது அடிமைத்தன உத்திகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகி விடுகிறது. எஜமானர்கள் காலில் விழுவதற்கு தயாராக இருக்க வேண்டியிருக்கிறது எங்கேயும் எப்போதும். எட்டி உதைத்தாலும் உதைத்த கால்களை தொட்டு வணங்கி கால்கள் வலிக்கிறதா எஜமான் என்று கேட்கக்கூடிய பொறுமை அவசியமாகிறது.
அறிவாளிகளாலும் திறமையாளர்களாலும் அவர்களுக்குரிய இடத்தை எஜமானர்களிடத்தில் பெற்று விட முடியும் ஆனால் அந்த இடத்தில் காலமெல்லாம் நீடித்து இருப்பதற்கு அடிமைகளால் மட்டும் தான் முடியும், எஜமானர்களுக்கு எப்போதும் அடிமைகளையே பிடித்திருக்கிறது அடிமைகளுக்கும் தங்களை அடிமைகளாய் நடத்தும் எஜமானர்களையே பிடித்திருக்கிறது.

கருத்துகள்

தமிழக வரலாற்றை பாஜக மாற்றப்போகிறது .. டாக்டர் தமிழிசை.
வரலாற்றை மாற்றி எழுதுவதும் திரித்து எழுதுவதும் தானே உங்கள் வரலாறு.
                                     ------------------------------------------------------------
மோடி இந்தியாவிற்கு கடவுள் கொடுத்த வரம்- சிவ்ராஜ்சிங் செளகான், ம.பி முதல்வர்
பெருமைக்காக புள்ளய பெத்தேன்னாலாம் ஒருத்தி,
அதுக்கு ஏண்டி எருமைய பெத்தன்னாலாம் இன்னொருத்தி.
                                      ----------------------------------------------------------
நாட்டை மீட்க 5 ஆண்டு போதாது. மோடி மீண்டும் வெற்றி பெற வேண்டும் - நடிகை கங்கனா ரனாவத்.
அடகு வச்சவருதான் மீட்கனும்னு சொல்றாங்க போல.
                                    ----------------------------------------------------------
ஓ.பி.எஸ் செய்த பாவங்கள் அவரை விடாது - தினகரன்
இதுகளயெல்லாம் எங்க தலையில கட்டுன பாவமும் ஒங்கள விடாதுய்யா.
                                  ---------------------------------------------------------
வண்டலூர் பூங்காவில் சிங்கக் குட்டிக்கு "ஜெயா" என்று பெயர் சூட்டப்பட்டது
அது கால்ல யாரும் விழுகலயே?      

பெரியாரெனும் ஓர் ஆகச் சிறந்த ஆட்டக்காரர்

பெரியாரெனும் ஓர் ஆகச் சிறந்த ஆட்டக்காரர்
------------------------------------------------------------------------
பெரியாரின் ஆடுகளம் தூரத்தால் குறிக்கப்படுவது அல்ல, அது காலத்தால் குறிக்கப்பட வேண்டியது. அவர் எப்போதும் எதிர்ப்பு ஆட்டமே (Offence) ஆடியிருக்கிறார் தடுப்பாட்டத்தில் (Defence) அவருக்கு விருப்பமில்லை. ஆனால் ஒரு போதும் அவர் முரட்டு ஆட்டம் ஆடியது இல்லை.
பிரேசில் வீரர் நெய்மரைப்போல் அழுது நடிக்கும் அழுகுணி ஆட்டமும் ஆடியது இல்லை, அர்ஜென்டினா வீரர் மரடோனாவைப்போல் கையால் கோல் அடித்துவிட்டு அது கடவுளின் கை (Hand of God) என்று பொய் சொல்லி ஏமாற்றியதைப் போன்ற புளுகுணி ஆட்டமும் ஆடியதில்லை. துடிதுடிப்போடும் சுறுசுறுப்போடும் களத்தில் பம்பரமாய் சுழன்று ஆடியிருக்கிறார் தன் வாழ்நாள் முழுவதும்.
எதிராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பந்துகளை எல்லாம் நேர்த்தியாக திருப்பி தடைகளை தகர்த்து வெற்றிக் கோல்களாக்கி வெற்றிக்கோப்பையை பார்வையாளர்களாகிய பொதுமக்களுக்கே பெற்றுத் தந்திருக்கிறார் பெரியார், இதோ கோல் அடிக்கிறேன் முடிந்தால் தடுத்துப் பார் என்று சொல்லிச் சொல்லியே அடித்திருக்கிறார் கில்லி மாதிரி.
சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு வீரர்கள் ஆடுகளத்திலிருந்து வெளியேற்றப்படுவது போல், பெரியாரும் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அவ்வப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார், அது அவர் செய்த தவறுகளுக்காக அல்ல அவரது ஆட்டைத்தை கண்டு கலக்கமடைந்த எதிராளிகளுக்கு ஏற்பட்ட பயத்தினால்.
வெற்றிக்குரிய கோலை அடிக்கும் வீரராக அவர் இருந்தபோதும் களத்தில் குழுவாக இணைந்து ஒற்றுமையுடனே ஆடி இருக்கிறார், ஆம் அவரின் எல்லாப் போராட்டங்களிலும் பொதுமக்களின் பங்களிப்பும் சேர்ந்தே இருந்திருக்கிறது.
அன்று மட்டுமல்ல இன்றும் அவரே ஆகச் சிறந்த ஆட்டக்காரராக இருக்கிறார் மக்களிடத்தில். ஏனெனில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் களத்தில் ஆடிய ஆட்டம் அப்படி.

Monday 6 August 2018

அம்மா அப்பாவிற்குப் பிறந்தவன்

அம்மா அப்பாவிற்குப் பிறந்தவன்
----------------------------------------------------
பசிக்கான உன் உணவை
இனி நான் சமைக்க மாட்டேன்
வளர்ந்துவிட்ட உன் முடியை
இனி நான் வெட்ட மாட்டேன்
அழுக்கான உன் உடையை
இனி நான் வெளுக்க மாட்டேன்
கிழிந்துபோன உன் செருப்பை
இனி நான் தைக்க மாட்டேன்
நாறுகின்ற உன் மலத்தை
இனி நான் அள்ள மாட்டேன்
உன் வீட்டு சாக்கடைக்குள்
இனி நான் இறங்க மாட்டேன்
உன் வீட்டு சாவுக்கு
இனி நான் பறையடிக்க மாட்டேன்
நீ சூத்திரன்
காலில் இருந்து பிறந்தவன்
பார்ப்பானின் வைப்பாட்டி மகன்,
ஆனால் நானோ என் அம்மா அப்பாவிற்குப் பிறந்தவன்
க.ம.மணிவண்ணன்

கருத்துகள்

மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை - ரஜினி
நீங்க இன்னும் கட்சி தொடங்குறதப் பத்தியே முடிவு செய்யலயே பாஸ்.
                                      ---------------------------------------------------------
பிரதமர் நாற்காலியில் இருந்து நான் எழ ஒருவர் விரும்புகிறார்- மோடி
ஒருத்தர் இல்ல பல கோடி பேரு
                                      --------------------------------------------------------
மோடியுடன் கல்லூரியில் படித்த ஒரு நபரை காட்டுங்கள்- ராகுல் காந்தி
சாரி பாஸ்,அவரு இன்னும் பொறக்கவே இல்ல.
                                      -------------------------------------------------------
இந்தியா ஒரு கோவில் அதில் கடவுள் இருக்குமிடம் தமிழ்நாடு - எடப்பாடி
தமிழ்நாட்டுலதான் 7000 கடவுள் திருடு போச்சுன்னு சொல்றாங்க
                                    --------------------------------------------------------
இமயமலை ஏறிவிட்ட பெண்களால் இன்னும் சபரிமலை ஏற முடியாமலேயே இருக்கிறது.
                                   ----------------------------------------------------------
அயோத்தியில் போலி சாமியார்களை களைய அடையாளம் அறியும் சோதனை : யோகி ஆதித்தியநாத்
சாமியார்னாவே போலிதானே.   

ரஜினி - கடவுளின் அல்லக்கை

உழைப்பால்,முயற்சியால் மட்டும் வெற்றி பெற முடியாது,ஆண்டவன் அருள் இருந்தால் தான் வெற்றி கிடைக்கும் – ரஜினிகாந்த்
--------------------------------------------------------------------------------------
ரஜினி - கடவுளின் அல்லக்கை
------------------------------------------------
தன்னைவிட அதிக திறமையும் முயற்சியும் உழைப்பும் உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கும்போது, சொல்லிக்கொள்ளும்படி எந்தவித திறமையும் கடின உழைப்பும் இல்லாத தான் இந்த சமூகத்தில் பேருடனும் புகழுடனும் வாழ்வதற்குக் காரணம் என்ன? வெற்று மாயக் கவர்ச்சியை மூலதனமாக்கி ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்று, அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை சுரண்டிக்கொழுத்து, மாபெரும் செல்வந்தனாக தான் இருப்பதற்கு காரணம் என்ன? இந்த விடை தெரியாத கேள்விகளுக்கு ரஜினி கண்டுபிடித்த விடைதான் கடவுள்,கடவுள் அருள்.
அதாவது, ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் தகுதியும் திறமையும் இல்லாத ஒருவர் அந்த நிறுவனத்தின் முதலாளியிடமிருந்து, திறமை வாய்ந்த மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக சம்பளம் வாங்கும்போது, தனது முதலாளியிடம் எவ்வளவு நன்றியும் விசுவாசமும் வைத்திருப்பாரோ, அதைப்போன்றதே ரஜினி தன்னுடைய முதலாளியாக நினைக்கின்ற கடவுளின் மேல் வைத்திருக்கும் பக்தியும், அதுமட்டுமல்லாமல் எங்கே தனது முதலாளி எல்லாவற்றையும் பறித்துக்கொள்வாரோ தடுத்துவிடுவாரோ என்ற பயமும்தான் அவரது அளவற்ற கடவுள் பக்திக்கு காரணம்.
ரஜினி சொல்லவருவது என்னவென்றால் யாரெல்லாம் சதாசர்வகாலமும் கடவுளுக்கு அல்லக்கைகளாக இருந்து சொம்படிக்கிறார்களோ அவர்களுக்கே அவர் அருள்புரிந்து வெற்றிபெறச் செய்வார் என்பதே. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது இப்படிப்பட்ட கடவுள் மட்டும் கேடுகெட்டவர் அல்ல, இதை வெட்கமின்றி சொல்லித்திரியும் ரஜினியைப் போன்றவர்களும் கேடுகேட்டவர்களே.
க.ம.மணிவண்ணன்
13/07/2018

இராஜாஜியும் குலக்கல்வியும்

"என் பாட்டன் ராஜாஜி குலக்கல்வியை கொண்டு வந்ததை தவிர வேறு எந்தத் தவறையும் செய்ய வில்லை - "சீமான்"
இராஜாஜியும் குலக்கல்வியும்
-----------------------------------------------
அன்றைய சென்னை மாகாணத்தின் முதல்வராக 1952 முதல் 1954 வரை இராஜாஜி இருந்தார். அவர் கொண்டு வந்த திட்டம் தான் “குலக்கல்வி”. தந்தை பெரியார் துவங்கி சாதாரணமானவர்கள் வரை எதிர்த்த திட்டம். அந்த திட்டம் என்ன? அதாவது, தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே கல்வி. மீதி நேரம் தகப்பன் செய்யும் தொழிலை கற்றுக் கொள்ளவேண்டும். எவ்வளவு அருமையான திட்டம்?
அதாவது இராஜாஜி போன்ற பார்ப்பனர்கள் படித்து, பட்டம் பெற்று, பதவி சுகத்தை அடையலாம். அதே வேளை முடிவெட்டுகிற குப்பனின் மகன் பள்ளிக்கு செல்லலாம் அங்கு மூன்று மணி நேரம் இருந்து விட்டு வந்து முடிவெட்ட தகப்பனாருடன் வீடு வீடாக சென்று ‘தொழில்’ பழகலாம். அப்படியே காலப்போக்கில் படிப்பை நிறுத்தி முடி திருத்தும் தொழிலில் ஈடுபடலாம். என்ன உயரிய சிந்தனை? துணி வெளுப்பவர் மகன் துணி வெளுக்கவும், செருப்பு தைப்பவர் மகன் செருப்பு தைக்கவும், மீன் விற்பவர் மகன் மீன் விற்கவும், மணியாட்டி பூஜை செய்பவர் மகன் மணியாட்டவுமான சாதிச் சாக்கடையை கட்டிக்காக்கிற சாக்கடை நாற்றெமெடுக்கிற ஆரிய சிந்தனையின் வக்கிரம் தான் இராஜாஜியின் குலக்கல்வித் திட்டம்.
அன்று இந்த குலக்கல்வித் திட்டத்தை முழுவேகமாக சிலிர்த்தெழுந்து சிங்கமாக தந்தை பெரியார் எதிர்த்ததால் இன்று அனைவருக்கும் அடிப்படைக் கல்வியும் தொழில்நுட்ப கல்வி என்பதும் நடைமுறையாகி இருக்கிறது. அந்த எதிர்ப்பை தாங்காது இராஜாஜி பதவியை துறக்க நிர்ப்பந்திக்கப்பட்டார் என்பது தான் உண்மை. இராஜாஜி பதவி துறந்தது 1954.இராஜாஜி பதவியிழந்த பின்னர் தந்தை பெரியாரால் ஆதரவளிக்கப்பட்டு படிக்காத மேதை காமராஜர் முதலமைச்சரானார்.
குலக்கல்வி திட்டத்தை ஒழித்ததோடு அதிக எண்ணிக்கையில் பள்ளிகள், கல்லூரிகளை திறந்து அனைவருக்கும் கல்வியை தந்தார் காமராஜர். இலவச கல்வி முறை, மதிய உணவு திட்டம் என சமூக நோக்கான உயர்ந்த திட்டங்களை கொண்டுவந்து ஏழை வீட்டு பிள்ளைக்கும் கல்வி கிடைக்க செய்தார். அதன் விளைவு தான் இன்று பார்ப்பனர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் கல்வி என்பது நடைமுறையானது. அனைவரும் மருத்துவம், சட்டம், பொறியியல் என படிக்க முடிந்தது. (திராவிட இயக்கங்களின் சாதனை, தாக்கமென்ன என முகமூடியணிந்து கேட்பவர்களுக்கு இதுவும் சாதனைகளில் ஒன்று என்பது புரியட்டும்.)
இராஜாஜி பதவியை விட்டு இறங்கியதும் அரசுக்கு நெருக்கடி தீர்ந்தது எப்படி? பள்ளிகளுக்கு கட்டிடங்கள், ஆசிரியர்கள், புதிய பள்ளிகள், கல்லூரிகள், மதிய உணவு என திட்டங்கள் வந்தது எப்படி? அப்படியானால் இராஜாஜிக்கு நிர்வாக திறனில்லை! அல்லது அவர் சார்ந்த பார்ப்பன குலத்தின் வேதங்கள் சொல்லுகிற சாதியை கட்டிக்காக்க அரசு திட்டங்கள் தீட்டி தனது ‘சாணக்கியத்தனத்தை’ நிரூபித்தார். அந்த குலக்கல்வி சாணக்கியம் பெரியார், காமராஜர் என்கிற திராவிடர்களால் அழிக்கப்பட்டது என்பது வரலாறு.
இராஜாஜியின் குலக்கல்வி திட்டம் மனிதனை அடிமையாக வைத்திருக்கும் தந்திரமுடையதே தவிர கல்வியை வழங்குவதோ அல்லது வேலைவாய்ப்பின்மையை களையும் நோக்கமுடையதோ அல்ல. கல்வி பயிலும் பார்ப்பனரல்லாத ஒவ்வொருவரும் மனதில் நிறுத்த வேண்டிய தலைவர்கள் பெரியார், காமராஜர் என்பதை தமிழக வரலாறு பதிவு செய்துள்ளது.
ராஜாஜி இரண்டு முறை சென்னை மாநிலத்திற்கு முதல் அமைச்சராக வந்தார்.இரண்டு முறையும் தேர்தலில் நின்று மக்கள் வாக்குப் பெற்று முதல் அமைச்சர் ஆனவர் இல்லை. கொல்லைப்புறம் வழியாக (மேல்சபை மூலம்) உள்ளே நுழைந்தவர்தான் அவர்.
1937இல் முதல் அமைச்சராக வந்தபோது அவர் செய்தது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடியது,அதே நேரத்தில் ரூ.12 லட்சம் செலவில் சமஸ்கிருதக் கல்லூரியை ஏற்படுத்தினார். 1952_54 காலகட்டத்தில் இரண்டாவது முறையாக மாநில முதல் அமைச்சராக வந்தபோது அரசிடம் போதிய நிதி இல்லை என்று சொல்லி 6000 பள்ளிகளை இழுத்து மூடினார் மூதறிஞர் ராஜாஜி(!?). ஆனால் அதே நேரத்தில் வேதபாடசாலைகள் திறக்கப்பட்டன.இருமுறை முதல் அமைச்சராக வந்தபோதும் அவர் செய்ததெல்லாம் பள்ளிக் கூடங்களை இழுத்து மூடியதுதான்.காமராசர் ஆட்சிக்கு வந்தவுடன் மூடிய பள்ளிகளை திறந்ததோடு மட்டுமல்லாமல் மேலும் ஆயிரக்கனக்கான பள்ளிகளை திறந்தார். அதன் மூலம் தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த 60,70 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பது இப்போது இருக்கும் இளைய சமுதாயத்திற்கு தெரியவில்லை என்பது கவலை அளிக்கும் விடயம்.
அண்ணன் சீமான் சொல்வதே அரசியல்,வரலாறு என நம்பி கைதட்டி விசிலடித்து சில்லரைகளை சிதற விடும் தம்பிகளை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

கருத்துகள்

அமித்ஷாவின் வருகை எங்களுக்கு பவுர்ணமி. சிலருக்கு அமாவாசை-தமிழிசை
மேடம் அமித்ஷாவோட முடி இல்லாத தலைய கிண்டல் பண்றாங்க
                                                 ----------------------------------------------------
வர்றவங்கள வாங்க வாங்கன்னு சொல்றதுதானடா தமிழனோட பண்பாடு, வராதே திரும்பிப்போன்னு எங்கள சொல்ல வைக்கிறீங்களேடா பிஜேபிக்காரனுகளா.
                                               ------------------------------------------------------
நான் இனி பொது கூட்டங்களில் பேசவே மாட்டேன்.
-சீமான்
அண்ணே, இனிமே யாருண்ணே எங்களுக்கு ஆமக் கத,கப்பல் கத,AK 74 கதயெல்லாம் சொல்லுவா.
                                               ----------------------------------------------------
அமித்ஷா பேச்சை மொழிபெயர்ப்பு செய்ததில் தவறு ஏதுமில்லை. - எச் ராஜா
அப்படின்னா அமித்ஷாதான் தவறா பேசி இருக்காரு.
                                               ---------------------------------------------------
வீட்டில் இல்லாத நேர்மையை வெளியில் தேடிக்கொண்டிருக்கிறார் ரஜினி.

மதுரையை எரித்த கண்ணகிக்கு ஒன்னுந்தெரியாத சின்னப்பய எழுதுறது,

மதுரையை எரித்த கண்ணகிக்கு ஒன்னுந்தெரியாத சின்னப்பய எழுதுறது,
எனக்கு இலக்கண இலக்கியம் சிலப்பதிகாரமெல்லாம் தெரியாது, ஒங்கள சினிமாலதான் பாத்துருக்கேன். ஒங்ககிட்ட சில விசயங்கள சொல்லனும்னு தோணிச்சு அதுனாலதான் இந்த கடுதாசிய எழுதுறேன்.
1) உங்களுக்கு நடந்தது குழந்தை திருமணம்,உங்களுக்கு 12 வயசு கோவலனுக்கு 16 வயசு அதாவது good touch, bad touch னா என்னன்னு தெரியாத வயசுல ஒங்களுக்கு கல்யாணம் நடந்திருக்கு,நீங்க இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லி அழுது அடம்புடிச்சு கல்யாணத்த நிப்பாட்டாம இந்த தப்புக்கு நீங்களும் தொண போயிருக்கீங்க.
2) அந்த சின்ன வயசுலேயே உங்க வீட்டுக்காரரு மாசறு பொன்னே வலம்புரி முத்தேன்னு பாடும்போது இது child abusing னு சொல்லி கண்டிக்காம நீங்களும் சந்தோசமா சிரிச்சு ரசிச்சுக்கிட்டு இருந்திருக்கீங்க.
3) கோவலனோட character என்னன்னு ஒங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்,அப்படி தெரிஞ்சிருந்தும் நானும் ஒங்க கூட வர்றேன் அத்தான்னு சொல்லாம அவன மட்டும் வெளியூருக்கு அனுப்பி வச்சிருக்கீங்க business பண்றதுக்கு.
4) போனவன ரெம்ப நாளா காணாம்னதும் பெத்தவங்ககிட்ட சொல்லி தேடச்சொல்லியிருக்கணும்.நீங்க ரொம்ப வசதியான குடும்பம் அதுனால அரசர்கிட்ட சொல்லி ஒற்றர்கள அனுப்பி அவன கண்டுபிடிச்சு கூட்டிக்கிட்டு வரச்சொல்லியிருக்கலாம் ஆனா நீங்க அத செய்யாம இருந்திருக்கீங்க.
5) காசு பணத்தையெல்லாம் அழிச்சிட்டு மாதவி மேல சந்தேகப்பட்டு சண்டைபோட்டுட்டு வீட்டுக்கு வந்தவன நீ எதுக்கு இங்க வந்தேன்னு சொல்லி வெரட்டிவிடாம அவன சேத்துக்கிட்டீங்க இது நீங்க செஞ்ச உலக மகா தப்பு.
6) ஏற்கனவே ஒரு தடவ உங்கள விட்டுட்டு போனவன்னு தெரிஞ்சும் அவன் கூடப்போகாம business னா என்னன்னே தெரியாத அவன்கிட்ட ஒங்க சிலம்பக் கொடுத்து வித்திட்டு வரச்சொல்லியிருக்கீங்க.
7) பாண்டிய நெடுஞ்செழியன் கோபத்துல கொண்டுவா கள்வனைன்னு சொல்றதுக்குப் பதிலா கொன்றுவா கள்வனைன்னு சொன்னதும் கோவலனை கொன்னுட்டாங்க, நீங்களும் கோவத்தோட போயி தேரா மன்னான்னு பாண்டியன்கிட்ட வாக்குவாதம் பண்ணி உண்மைய நிரூபிச்சதும் அவனும் நாம தப்பு பண்ணிட்டோமேன்னு feel பண்ணி செத்துப்போயிட்டான்.
8) இதோட நீங்க விட்டுருக்கணும் ஆனா என்ன பண்ணீங்க உங்க சொந்தப் பிரச்சனைக்காக பொது சொத்துக்களையும் பொதுமக்களையும் தீயில எரிய விட்டுருக்கீங்க அது மட்டுமா பாப்பானுகள ஒன்னும் செய்யக்கூடாதுன்னு தீக்கிட்ட சொல்லி இருக்கீங்க. ஒழைக்காம தின்னு கொழுக்குற பாப்பானுகளுக்கு ஒன்னும் ஆகக் கூடாது, அன்னாடம் ஒழச்சுப் பொழைக்குற எங்க பாட்டனும் பாட்டியும் நெருப்புல வெந்து சாகணும்னு நெனச்சிருக்கீங்க இது எவ்வளவு பெரிய அநியாயம்.
9) நீங்க ஒழுங்கா check பண்ணியிருந்தா ஒங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சிருக்கும், அந்த சிலம்பயே பாப்பானுகதான் திருடியிருப்பானுக, இவ்வளவு technology, cctv இருக்குறப்பவே கோவில் சிலைய திருடி இருக்குறானுக, கருவறைக்குள்ளேயே அசிங்கம் பண்றானுக, தப்பு பண்ணிட்டு தலைமறைவா திரியிறானுக அப்ப அந்த காலத்துல என்னென்ன பண்ணியிருப்பானுக, நீங்க என்னடான்னா அவனுகள காப்பாத்தியிருக்கீங்க.
இப்பவாவது தெரிஞ்சுக்குங்க நீங்க எவ்வளவு பெரிய தப்புகள பண்ணியிருக்கீங்கன்னு.
இப்படிக்கு,
தீயில் எரிந்து சாம்பலான பாட்டன் பாட்டிகளின் பேரன்
க.ம.மணிவண்ணன்

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...