Monday 18 June 2018

கருத்துகள்

காவிரி நீர் திறப்பிற்கு நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல, எடப்பாடிக்குதான்-தமிழிசை
நன்றி சொல்ல வேண்டியது எடப்பாடிக்கோ குமாரசாமிக்கோ இல்ல, கர்நாடகாவுல பெய்யுற மழைக்குதான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலையை மாற்றபோகிறோம்-ஜெயக்குமார்
சிலைய மாற்றப்போறோம்னு மட்டும் சொல்லுங்கய்யா அதுதான் ஜெயலலிதா சிலை இல்லைன்னு உலகம் பூரா தெரியுமே.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நீதிபதி இந்திரா பானர்ஜி அதிமுக வுல உறுப்பினரா இருக்காங்கன்னு என் ஃப்ரண்டு சொல்றான் உண்மையா அது
-------------------------------------------------------------------------------------------------------------------------------
மோடி நெருப்பில் பூத்த மலர் - பொன்னார்
அதுனாலதான் ரொம்ப கருகி போய் இருக்கா
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரியாணி" அரேபிய நாட்டு உணவு வகை_ எச்ச.ராஜா
நீங்களும் மத்திய ஆசியாவுல இருந்து இங்க வந்தவனுக தானே.
பிரியாணியாவது உணவா பயன்படுது, நீங்க யாருக்குமே பயன்படமா தொல்லையாதானே இருக்கீங்க.



அமெரிக்கன் எம்பசில வணக்கம் வச்ச கதை - சீமான் கதைகள்

அன்பான ஒறவுகளே கொஞ்ச நாளைக்கு முன்னால நா சொன்ன கப்பல் கதைய கேட்டீங்க, இப்ப அமெரிக்கன் எம்பசில வணக்கம் வச்ச கதைய சொல்லப்போறேன்.மொத மொதலா என்னய அமெரிக்காவுக்கு கூப்புட்டாங்க, அதுனால விசா வாங்குறதுக்காக எம்பசிக்கு போனேன் அங்க ஒரு வெள்ளக்காரம்மா உக்காந்து இருந்துச்சு அதுக்கிட்ட கடவுச்சீட்ட கொடுத்துட்டு வணக்கம்னு சொன்னேன் அது என்னய நிமிர்ந்து பாத்துட்டு ஹேப்பி ஜேனின்னு சொல்லிட்டு கடவுச்சீட்ட வாங்கி வச்சிக்கிருச்சு.
அந்தம்மா என்னய பத்தி வெளில விசாரிச்சிருக்கும் இல்லனா நான் பேசுற வீடியோவ யூடியுப்ல பாத்திருக்கும்னு நெனைக்கிறேன், இவன் சும்மாவே கொட்டுற மழையில 5 மணி நேரம் மூச்சுவிடாம நரம்பு பொடைக்க பேசுவான் நாம ஏதாவது இங்கிலீஷ்ல கேக்கப்போக அது புரியாம இவன் கைய தூக்கிகிட்டு பேச ஆரம்பிச்சான்னா நம்ம காதுல ரத்தம் வந்துரும்னு பயந்துகிட்டு கடவுச்சீட்ட வாங்கி வச்சிக்கிருச்சுன்னு நெனைக்கிறேன், அது மட்டுமில்லாம அமெரிக்காவுல இவன விட பெரிய தில்லாலங்கடி ஒருத்தன் இருக்கான் அதுனால அங்க பொழப்பு நடத்த முடியாது, அங்க உள்ளவனுக எல்லாம் இங்கிலிஷ்ல புளுகுனாதான் நம்புவானுக இங்க உள்ள எளிய தமிழ் புள்ளைகளும் தம்பிகளும் தான் இவன் பேசுற பொய்ய நம்பி கைதட்டி விசிலடிச்சு சில்லறய செதற விடுவானுக அதுனால கண்டிப்பா இவன் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்திருவான்னு அந்த வெள்ளக்காரம்மா நம்பிருச்சு.
அப்புறம் அங்க நின்னுக்கிட்டு இருந்த தமிழ் ஆளுங்க எல்லாம் ஏதோ குசுகுசுன்னு பேசிக்கிட்டானுக இவ்வளவு நாளா நம்மள கொலையா கொன்னான் கொஞ்ச நாளைக்கு நாம நிம்மதியா இருக்கலாம் அமெரிக்காவுல இருக்குறவனுக இவன் பேசுறத கேட்டு சாகட்டும்னு பேசிக்கிட்டு இருந்துருப்பானுகன்னு நெனைக்கிறேன்.
இது தான் ஒறவுகளே அமெரிக்கன் எம்பசில நா வணக்கம் வச்ச கதை.

ஆஸ்திரேலியாக் கப்பலில் வடை சுட்ட கதை - சீமான் கதைகள்

எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது, ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு கப்பல் 40000 மெட்ரிக் டன் அரிசியுடன் வந்தது, அது நடுக்கடலில் தடுத்து நிறுத்தப்பட்டு அந்த கப்பலில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த நேரத்தில் எங்களுக்கு மிகவும் பசியாக இருந்தது, அண்ணன் என்னைப் பார்த்துக் கேட்டார் உனக்கு உளுந்த வடை சுடத் தெரியுமா என்று, நான் சொன்னேன் எனக்கு வாயால் வடை சுட மட்டும் தான் தெரியும் உளுந்த வடை சுடத்தெரியாது என்று. எத்தனை காலம் தான் வாயாலே வடை சுட்டுக் கொண்டிருப்பாய் உளுந்த வடை சுடவும் கற்றுக்கொள் என்றார்.
நானும் கப்பலில் உளுந்தம் பருப்பு இருக்கிறதா என்று தேடினேன் நல்ல வேலையாக கப்பலில் உள்ள சமையல் அறையில் உளுந்தம் பருப்பு இருந்தது அதை நன்கு அரைத்து எண்ணெயில் பொரித்து மொறுமொறுப்பான வடையை அண்ணனிடம் கொடுத்தேன் அவர் அதை நன்கு ரசித்து உண்டார். எப்போதும் வாயில் மட்டுமே வடை சுடும் நான் ஆஸ்திரேலியா கப்பலில் தான் முதன்முதலில் உளுந்த வடை சுடக் கற்றுக்கொண்டேன்.
என்னிடம் இதுபோன்ற பல கதைகள் இருக்கிறது அவற்றை நான் அவ்வப்போது உங்களுக்குச் சொல்கிறேன். சில நாட்களுக்கு முன்னால் நான் சொன்ன ஆமைக்கதையை நீங்கள் மிகவும் ரசித்தீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
அனைவருக்கும் நன்றி ஒறவுகளே

கனவில் வந்த இயேசு

தொடரும் நீட் கொடுமைகள்
எப்போது முடியுமென சொல்லியிருக்கலாம்
காவிரியில் பாசன நீர்
எப்போது வருமென சொல்லியிருக்கலாம்
தூத்துக்குடி படுகொலைகள்
எப்போது தண்டனையென சொல்லியிருக்கலாம்
பொருளாதார பின்னடைவு
எப்போது சரியாகுமென சொல்லியிருக்கலாம்
வீழ்ந்துவரும் வேலைவாய்ப்பு
எப்போது பெருகுமென சொல்லியிருக்கலாம்
நலிந்து வரும் சிறுவணிகம்
எப்போது நிமிருமென சொல்லியிருக்கலாம்
பெட்ரோல் டீசல் விலை
எப்போது குறையுமென சொல்லியிருக்கலாம்
எதையுமே சொல்லாமல்
மீண்டும் பிரதமராவார் மோடியென சொல்லிவிட்டு
விண்ணுலகம் சென்றார் தேவமைந்தன்
மோடியின் சவாலை ஏற்று
உடல் தகுதி காணொளி வெளியிட
ஆர்வமாய் இருக்கிறாராம் உலக இரட்சகர்
ஆமென்

கருத்துகள்

காலா போன்ற கதைகளை தவிர்ப்பது ரஜினிக்கு நல்லது. - ஆடிட்டர் குருமூர்த்தி
உன்னைப் போன்ற ஆட்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
--------------------------------------------------------------------------------------------------------------------------
காங்கிரஸ் கட்சி எதிர் கட்சியாக இருப்பது பி.ஜே.பி யின் அதிர்ஷ்டம் - அமித்ஷா
பி.ஜே.பி ஆளும் கட்சியாக இருப்பது எங்களின் துரதிர்ஷ்டம் - மக்கள்
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்களும் மாணவர்களும் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு பயிற்சி அளிக்க வெளிநாட்டிலிருந்து வல்லுனர்கள் வரவழைக்கப் படுவார்கள் - செங்கோட்டையன்
உங்களுக்கும் உங்க கூட்டாளிகளுக்கும் ஆங்கிலத்துல சரளமா பேச வருமா ஆபிசர்
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மோடி மீண்டும் பிரதமராவார் என இயேசு என்னிடம் சொன்னார்-பால் தினகரன்.
தமிழிசைதான் தமிழ்நாட்டோட அடுத்த முதல்வர்ன்னு இயேசு சொன்னாரே அத சொல்லாம விட்டுட்டிங்க.
---------------------------------------------------------------------------------------------------------------------------
மோடியின் நான்காண்டு சாதனைகளை ராகுலிடம் சொல்லத் தேவையில்லை -அமித்ஷா
Mr.அமித்ஷா, அடிச்சுக்கூட கேப்பானுக அப்பவும் சொல்லிறாதிய.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தாஜ்மஹாலின் பெயரை ராம் மஹால் என மாற்ற வேண்டும் - சுரேந்தர் சிங், பா.ஜ.க எம்.எல்.ஏ
சுரேந்தர் சிங் என்ற உன்னுடைய பெயரை ஹர்பஜன்சிங் என மாற்ற வேண்டும்.

‘100க்கு 130 மதிப்பெண்கள்’ - இன்ப அதிர்ச்சியில் பீகார் மாணவர்கள்: பிளஸ் 2 தேர்வில் அடுத்த முறைகேடு அம்பலம்

‘100க்கு 130 மதிப்பெண்கள்’ - இன்ப அதிர்ச்சியில் பீகார் மாணவர்கள்: பிளஸ் 2 தேர்வில் அடுத்த முறைகேடு அம்பலம்.
------------------------------------------------------------------------------------------------
நீட் தேர்வில் நாடுதழுவிய அளவில் முதலிடம் பிடித்த மாணவி கல்பனா குமாரி, பீகாரில் நடந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் போதிய வருகைப்பதிவு இல்லாதபோதும் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டார், இதே தேர்வில், மொத்த மதிபெண்களை விடவும் கூடுதலான மதிப்பெண் பல மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.
நீட் தேர்வில் பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி என்ற மாணவி 720க்கு 691 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் பின்தங்கி இருந்த மாநிலமான பீகாரில் இருந்து மாணவி ஒருவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஆனால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 75 சதவீத வருகைப்பதிவு தேவை என்ற நிலையில், அது இல்லாமலேயே கல்பனா குமாரிக்கு தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. கல்பனா குமாரி நீட் தேர்வில் மட்டுமின்றி பீகார் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 12-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.
இந்நிலையில் பீகார் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 12-ம் வகுப்பு தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த தேர்வில் மொத்த மதிப்பெண்களை விடவும் மாணவர்கள் கூடுதலாக மதிப்பெண் பெற்றுள்ளனர். 100 சதவீதத்திற்கு 130 சதவீத மதிப்பெண்கள் சில மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இயற்பியலில் 65 மதிப்பெண்கள் தேர்வுக்கும், 35 மதிப்பெண்கள் செய்முறை தேர்வுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் ஆர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த பீம் குமார் என்ற மாணவருக்கு செய்முறை தேர்வில் மொத்த மதிப்பெண்ணான 35க்கும் அதிகமாக 38 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதுபோலவே வேதியியலில் சந்தீப் ராஜ் என்ற மாணவருக்கு செய்முறை தேர்வில் மொத்த மதிப்பெண்ணான 35 விடவும் அதிகமாக 39 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோலவே எழுத்து தேர்விலும் தனித்தனியாக போடப்பட்ட மதிப்பெண்களை கூட்டி பார்த்தால் வரும் மதிப்பெண்களை விடவும் கூடுதலாக ‘இலவச’ மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளளன.
வேறு சில மாணவர்களுக்கு எந்த கேள்விக்கும் பதில் அளிக்காத நிலையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. கணிதத்தில் மூன்று விடையில் ஒன்றை தேர்வு செய்யும் அப்ஜெக்டிவ் தேர்வு மொத்தம் 35 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் கிழக்கு சாம்ரான் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தீப் ராஜ் என்ற மாணவர் 40 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதைவிட கொடுமையாக, வைஷாலி என்ற மாணவி உடல் நிலை சரியில்லாததால் உயிரியல் தேர்வை எழுதவில்லை. அந்த தேர்வில் வைஷாலிக்கு 20 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் பெற்ற 18 மதிப்பெண்ணையும் சேர்த்து, உயிரியில் தேர்வில் அவர் 38 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுபோலவே ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்களிலும் மதிப்பெண் ‘மழை’ பொழிந்துள்ளது. இதனால் பீகார் மாணவர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பாரிசாலன் - ஒரு கைப்புள்ள

உடையார்னு சொன்னது அவனுக காதுல உடைய்யான்னு கேட்டுருக்கும் போல வாய உடைச்சிட்டானுக.
------------------------------------------------------------------------------------------------------------------------------
உடையார் என்றும் பாராமல் 
வாயை உடைத்தது யார்.
----------------------------------------------------------------------------------------------------------------------
வாயி பான்பராக் போட்டது மாதிரி செவந்ததுமே தெரிஞ்சிருக்கவேணாம் குத்துனது வடநாட்டுக்காரன்தான்னு
---------------------------------------------------------------------------------------------------------------------
ரத்தம் கோங்ரா சட்னி மாதிரி வந்தா குத்துனது தெலுங்கு, டொமேடோ சாஸ் மாதிரி வந்தா குத்துனது மார்வாடி.
----------------------------------------------------------------------------------------------------------------------
பாரிசாலனுக்காக...
ராஜராஜ சோழனின் கொள்ளுப்பேரா
உன்னைப் பிடிக்காதவர்கள் இத்தனை பேரா
நீ ஒரு உடையார்
உன் வாயை உடைத்தவர்கள் யார் யார் ?
உன் பேச்சு எப்போதுமே டக்கால்டி
அதை கேட்டுவிட்டுதான் உதைத்தானா அந்த இலுமிநாட்டி
கட்டதுரையிடம் அடி வாங்கிய கைப்புள்ள
நீ என்றுமே எங்களுக்கு எளிய தமிழ்ப் புள்ள
ஆண்ட பரம்பரை நீ
அடி வாங்கி வரலாமா
வாங்கிய அடியை மாற்றிச் சொல்லலாம்
வாங்கியது யாரிடமென்பதை மாற்றிச் சொல்லலாமா
போர் வீரா ஒன்றைப் புரிந்துகொள்
குத்தியதும் வெற்றிலை போட்டதுபோல்
வாய் சிவந்தால் குத்தியவன் தமிழ்நாடு
பான்பராக் பீடா போட்டதுபோல்
வாய் சிவந்தால் குத்தியவன் வடநாடு
பாரிசாலா நினைவில் கொள்
தமிழ் மக்கள் கொண்டாடுவது
உன்போன்ற கைப்புள்ளைகளைத்தான்
கட்டதுரைகளை அல்ல.

நீட் - அக்காவும் இரு தங்கைகளும்

கண்களே
கண்ணீரைச் சேமித்தே வைத்திருங்கள்
அனிதா பிரதீபாவோடு
முடிந்துவிடப்போவதில்லை போலிருக்கிறது
நீங்கள் சிந்தும் கண்ணீர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
நீட்
அனிதா
பிரதீபா
சுபஸ்ரீ
-----------------------------------------------------------------------------------------------------------
அக்காவும் இரு தங்கைகளும்
----------------------------------------------
அக்கா
நாங்கள் உன் தங்கைகள்
நீங்கள் என் தங்கைககளா !?
ஆமாம்
நீ எங்கள் அக்கா
நாங்கள் உன் தங்கைகள்
எதற்காக இங்கு வந்தீர் ?
நீ எதற்காக எப்படி இங்கு வந்தாயோ
அதற்காக அப்படியே நாங்களும் வந்தோம்
சொன்னால் புரியாதென்று
சொல்லாமல் சொல்லிவிட்டு வந்தேனே
நானே கடைசியாக இருக்கட்டுமென்று
மாறவே இல்லையா இன்னும் ?
மாறவில்லை
மாற்றவில்லை எதையும்
சமூகநீதி கொன்ற கொலைகாரர்கள்
மக்கள் ?
சிலநாட்கள் போராடினார்கள் நீ சென்ற பிறகு
வசதி படைத்தவர்களுக்கு
போராட்டம் தேவையற்றதாகிவிட்டது
வசதியற்றவர்களுக்கு
வாழ்வதே போராட்டமாகிவிட்டது
அழாதே அக்கா
நாங்களும்
சொல்லாமல் சொல்லிவிட்டே வந்திருக்கிறோம்
நாங்களே கடைசியாக இருக்கட்டுமென்று

நீட் சோகங்கள்

மீண்டும் ஒரு அனிதா
செஞ்சியை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி பத்தாம் வகுப்பில் 495 மதிப்பெண்களும், +2 தேர்வில் 1125 மதிப்பெண்களும் பெற்றவர். சென்ற ஆண்டு நடைபெற்ற நீட் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த போதும் மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர இயலவில்லை, அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்ற முனைப்பில் இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி உள்ளார் ஆனால் அவரால் தேர்ச்சி பெற இயலவில்லை அதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------------------------

கல்வியில் மிகவும் பின்தங்கிய வடமாநிலங்களில் இருந்து எப்படி அதிக விழுக்காடு மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார்கள்.ஏதாவது முறைகேடு இருக்குமா.
-------------------------------------------------------------------------------------------------------------------------
நீட் தேர்வில் தேசிய அளவில் 12 ஆவது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்த மாணவி கீர்த்தனா சொல்கிறார் " என் தந்தையும் தாயும் மருத்துவர்கள், நான் 11 ஆம் வகுப்பிலிருந்தே தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தேன்"
அப்படியானால் இனி மருத்துவர்களின் பிள்ளைகள்தான் மருத்துவராக முடியுமா, செருப்பு தைப்பவரின் பிள்ளை செருப்புத்தான் தைக்க வேண்டுமா.

வலதுசாரி பாசிசத்தின் குரல்தான் ரஜினியின் குரல்

போராட்டங்களின் மீதும் போராட்டக்காரர்களின் மீதுமான ரஜினியின் கோபத்தை முதலமைச்சராக ஆசைப்படும் ஒரு நடிகரின் கோபமாக நாம் புரிந்து கொள்வது நமது புரிதலின்மையையே காட்டும். ரஜினியின் கோபத்தை வலதுசாரி பாசிசவாதியின் கோபமாகப் புரிந்து கொள்வதே சரியான புரிதல் ஆகும்.
எல்லா நாடுகளுமே வலதுசாரிகள் ஆகிய அரசு, மதகுருமார்கள், நிலப்பிரபுக்கள், பெருமுதலாளிகள், பணக்கரார்கள் மற்றும் இவர்களை காப்பாற்றும் ராணுவம் காவல்துறை என ஒரு பக்கமும் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள், தொழிலாளிகள் எனும் இடதுசாரிகள் ஒரு பக்கமும் என கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
வலதுசாரிகளால் சுரண்டப்படும் விளிம்புநிலை மக்கள் அமைதியாக எந்த போராட்டமும் செய்யாமல் இருக்கும் வரைதான் இந்த கட்டமைப்பு சிதையாமல் இருக்கும், வலதுசாரிகளும் தங்கள் சுகபோக வாழ்வைத் தொடர முடியும். போராட்டங்கள் நடைபெற்றால் அது அரசு முதற்கொண்டு பணக்காரர்கள் வரையிலான அனைத்து வலதுசாரிகளையும் பாதிக்கும். அதனால் தான் வலதுசாரி பாசிசவாதிகள் போராட்டங்களின் மீதும் போராட்டக்காரர்களின் மீதும் வெறுப்பும் கோபமும் கொள்கிறார்கள்.
வலதுசாரிகளுக்குள் சிறு சிறு பிணக்குகள் இருக்கலாம் ஆனால் போராட்டத்தையும் போராட்டக்காரர்களையும் ஒடுக்க வேண்டும் என்பதில் ஒரே புள்ளியில் இணைவார்கள். தமிழக அரசை இதுவரை விமர்சித்து வந்த ரஜினி இப்போது அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதையும் ஜெயலலிதாவின் அரசு அடக்குமுறையை பாராட்டுவதையும், ரஜினியின் கருத்துக்கு ஆளும் தமிழக அரசு பாராட்டு தெரிவிப்பதையும் உற்றுநோக்கினால் வலதுசாரி பாசிசத்தின் உண்மையான குணத்தை புரிந்து கொள்ளலாம்.
உலகத்தில் நடைபெற்ற புரட்சிகள் எல்லாம் ஒரே நாளில் நடைபெற்றதல்ல சிறுசிறு போராட்டங்களாக தொடங்கி புரட்சியாக வடிவம் பெற்றவை. அனைத்து புரட்சிகளுமே அரசர் முதற்கொண்டு பணக்காரர்கள் வரையிலான வலதுசாரி பாசிசவாதிகளுக்கு எதிராக எழுந்தவையே. அதனால்தான் வலதுசாரி சிந்தாந்தவாதிகள் சிறுசிறு போராட்டங்களாக ஆரம்பிக்கும்போதே அதை ஒடுக்கிவிட வேண்டும் என்பதில் பெரு முனைப்பாக உள்ளனர். வலதுசாரிகளின் ஒரு அங்கமாக இருக்கும் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ரஜினி பெருமுதலாளிகளையும் அரசு அடக்குமுறைகளையும் அதை செயற்படுத்தும் காவல்துறையையும் கொண்டாடுவதில் வியப்பொன்றுமில்லை.
ரஜினியின் பேட்டியை நன்கு கவனித்தவர்களுக்கு ஒன்று நன்றாக விளங்கும், அவரது உடல்மொழியும்,பேச்சுத்தொனியும்,திமிரும் கோபமும் பாசிசவாதிகளுக்கே உரித்தானது. அமைதியாக இருந்தவரை தியானம் அறிந்த மிகப்பெரிய ஞானி என்று போற்றப்பட்ட அவரது முகம் பொதுவெளியில் அதிகமாகப் பேசத்தொடங்கியதும் கிழிந்து தொங்கி பாசிச முகம் வெளியே தெரிந்துவிட்டது.
இது ஏதோவொரு ரஜினியின் குரல் மட்டுமல்ல இதே போன்ற ரஜினிக்கள் உங்கள் வீட்டிற்கு அருகிலும் தெருவிலும் ஊரிலும் இருப்பார்கள், அவர்கள் மேல்தட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் வலதுசாரி சிந்தாந்தவாதிகள். இவர்களுக்கும் போராட்டங்களையும் போராட்டக்காரர்களையும் பிடிக்காது. ரஜினியின் குரலை ஒத்ததாகவே இருக்கும் இவர்களின் குரலும்.
ரஜினி பொதுவெளியில் பேசிவிட்டார் ஆனால் இவர்கள் அதே கருத்தை வீட்டிற்குள் பேசிக்கொண்டிருப்பார்கள், எங்கேயாவது போராட்டம் நடந்தால் இவர்களுக்கு வேறு வேலையே இல்லை என்று முணுமுணுப்பார்கள். இவர்களும் ரஜினியைப் போன்றே வலதுசாரி சிந்தந்தவாதிகள் தான்.
க.ம.மணிவண்ணன்
02/06/2018

Saturday 2 June 2018

சாதியின் பெயரால் அவமதிக்கப்பட்ட குடியரசுத்தலைவர்

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் என்ற இடத்தில் உள்ள பிரம்மன் கோவிலுக்கு இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தன் மனைவியுடன் சாமி கும்பிட சென்றபோது கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சாதியின் பெயரால் அவமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்தியாவின் முதல் குடிமகனுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண குடிமகனின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி அவர் குடியரசுத்தலைவராக இருந்தாலும் மனுநீதியின் படி, இந்து சனாதன தர்மத்தின்படி அவர் சற்சூத்திரர் பஞ்சமர் தீண்டத்தகாதவர்,அவருக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை விட வலிமையானதாக இருக்கிறது மனுநீதியும் இந்து சனாதன தர்மமும்.
நியாயமார்களே இதற்குப் பிறகும் சொல்லப் போகிறீர்களா யாருங்க இப்பல்லாம் சாதி பாக்குற என்று.
க.ம.மணிவண்ணன்

ரஜினி

காந்தியிடம் இருந்தது ரஜினியிடமும் இருக்கிறது -தமிழருவி மணியன்
என்ன இவரு வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரி இரட்டை அர்த்த வசனம்லாம் பேசுறாரு
------------------------------------------------------------------------------------------------------------------------------
ரஜினி ஒரு தற்குறி
//எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாக மாறிவிடும்//
மக்களின் போராட்டங்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்வதற்காக,பொழுதுபோக்கிற்காக அல்ல.மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றிகளை ஈட்டித்தந்த உரிமைகளை பெற்றுத் தந்த பெரியாரின் பூமி இது.
எங்கே எப்படி எதற்காக யாருக்காக யாருக்கு எதிராகப் போராட வேண்டுமென்று பாடம் சொல்லித்தந்த பெரியாரின் மண்ணில், போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாத போராட்ட வரலாறே அறியாத ஒரு தற்குறி போராட்டத்தைப் பற்றி நமக்கு வகுப்பெடுக்கும் காலச்சூழலில் நாம் இருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல வெட்கப்படவேண்டிய விடயமுமாகும்.
இந்த தற்குறியையும் தலைவனாக தூக்கிக்கொண்டாடும் ஒரு கூட்டம் இருப்பதுதான் வேதனையின் உச்சகட்டம்.
க.ம.மணிவண்ணன்

ரஜினி

வேங்க மவன் ஒத்தையில நிக்கேன்னு சொன்னாப்புடி,வீட்ட சுத்தி போலீசா நிக்கி.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
பன்னிங்க தான் கூட்டமா வரும்னு முன்னால சொன்னாப்புல,ஆனா இப்ப கூட்டத்தோடதான் வர்றாப்புல.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கெட்ட பய சார் இந்த...
நீ கெட்ட பய இல்ல,கேடுகெட்ட பய.
-----------------------------------------------------------------------------------------------------------------------
நா ஒரு தடவ சொன்னா...
அத அப்பறம் சொல்லலாம் மொதல்ல நீ யாருன்னு சொல்லு.
----------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்டவன் சொல்றான்...
ஆண்டவன்னு சொல்லாத ஆள்றவன்னு சொல்லு.
---------------------------------------------------------------------------------------------------------------------
என் வழி தனி வழி.
தெரியுமே,வலதுசாரி பாசிச வழி.
---------------------------------------------------------------------------------------------------------------------
"நான் எப்ப வருவேன்,எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது.ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்"
வரக்கூடாத எடத்துக்கு வரக்கூடாத நேரத்துல வந்திருக்கிற

ராஜராஜன் சிலை எங்கே

கொஞ்ச நாளைக்கு முன்னால ராஜராஜன் சிலை எங்கேன்னு கோவமா பதிவு போட்டிருந்தாரு போராளி ஒருத்தரு
இப்பதான் தெரியுது அறுபது வருசத்துக்கு முன்னாலயே ஸ்ரீனிவாச கோபாலாச்சாரியார்னு ஒரு பாப்பான் தஞ்சாவூர் பெரிய கோயில்ல இருந்து ராஜராஜன் சிலைய திருடி குஜராத்ல இருக்கிற தனியார் அருங்காட்சியகத்துல கொண்டு போய் வித்துருக்கான்னு, அந்த ராஜராஜன் பாப்பானுகளுக்கு எவ்வளவு நல்லது பண்ணான் அவன இப்படி பண்ணிட்டீங்களேடா.
திருடுன பாப்பானுகள கேக்குறத விட்டுட்டு எங்ககிட்ட ஏன்யா கேக்குறீங்க ராஜராஜன் சிலை எங்கேன்னு.
இனிமே அவரு சிலை எங்கே, இவரு சிலை எங்கேன்னு கேக்குறதா இருந்தா பாப்பானுக கிட்ட கேளுங்கய்யா எங்கே சிலைன்னு,சும்மா சும்மா எங்ககிட்டயே வந்து கேக்காம.

ரஜினிக்காக

யாருங்க நீங்க
காவிரிக்காக கதறுனமே
வந்தீங்களா நீங்க
கதிராமங்கலம் நெடுவாசல்
கேட்டீங்களா நீங்க
நீட்டுக்காக ஏதாவது
சொன்னீங்களா நீங்க
கூடங்குளம் தூத்துக்குடி
பாத்தீங்களா நீங்க
இப்ப எதுக்கு வந்தீங்க
மசுரு புடுங்க நீங்க
தெரியாமதான் கேக்குறேன்
யாருங்க நீங்க
க.ம.மணிவண்ணன்

ரஜினி

ஜெயலலிதா விஷக் கிருமிகளை அடக்கி வைத்திருந்தார் - ரஜினி
உங்களயும் உங்க ஃபிரண்டு கமலயும் சொல்றீங்களா
-------------------------------------------------------------------------------------------------------------
என்னைப் பார்த்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.- ரசினி.
யாருயா இந்த கோமாளி ?
யாருன்னு தெரியலய்யா சொல்லச் சொல்ல கேக்காம நானும் ரௌடி தான்னு ஜீப்புல வாலன்டியரா ஏறி வந்துட்டான்
---------------------------------------------------------------------------------------------------------------
நானும் பெரிய ரவுடிதான்னு ஊருக்குள்ள ஃபார்ம் ஆகிட்டேன்யா, என்னயும் கொஞ்சம் பேச விடுங்கய்யா - ரசினி
---------------------------------------------------------------------------------------------------------------
யாரு நீங்க என ரசினியைக் கேட்டார் தூத்துக்குடிக்காரர்.
தூத்துக்குடியில உப்பு காய்சுவாங்கன்னு தெரியும், ஆனா சோத்துல நெறைய உப்பு போட்டு சாப்புடுவாங்கன்னு இப்பதான் தெரியும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
நீ யாரு?
தெரியாமதான் கேக்குறோம் ரஜினி, ஆமா எங்களுக்கு நீ யாரு?
-----------------------------------------------------------------------------------------------------------------------

கால் மேல கால் போட்டா என்ன தப்பு ? - பெரியார்

கால் மேல கால் போட்டா என்ன தப்பு ? - பெரியார்
ஒருமுறை ஒரு பொது மேடையில் பெரியாரும் வேறு சிலரும் அமர்ந்திருக்கின்றார்கள். அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு நபர் மேடைக்கு எதிரில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டிருந்தார். மேடையில் அமர்ந்திருந்த ஒருவர், பெரியாரிடம், ' அந்த நபரைப் பாருங்கள்! திமிர் பிடித்தவர் . பெரியவர்கள் மேடையில் அமர்ந்திருக்கும் போது, மரியாதை தெரியாமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறாள் ! என்றார் .
அதற்குப் பெரியார் , அவர் காலின் மீது தானே அவரது காலைப் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார். அதில், உமது மரியாதை எங்கே குறைந்து போயிற்று ? என்றார் .
'ஒருத்தர் அவரோட காலை அவரோட கால் மேல போடுவதில் என்ன தப்பு. அவர் காலை என் மேல போட்டாத்தான் தப்பு’ என்றார் பெரியார்.

கருத்துகள்

தமிழ்நாட்டுக்கு வந்தால் தோசைகிடைக்குமா?? -
பிரதமர் மோடி.
தோசக்கல்லும் தோசக்கரண்டியும் இருக்கு பரவாயில்லையா??
-----------------------------------------------------------------------------------------------------------------------
சக்கர வியாதிய வச்சுகிட்டு அந்த அம்மா ஆஸ்பத்திரியில இருக்கும்போதே லட்டு ரசகுல்லா குலோப்ஜாமூன்னு இனிப்பா சாப்பிட்டுக்கிட்டு இருந்துருக்கு, அப்ப அந்த அம்மா தற்கொலதான் பண்ணிக்கிருச்சு போல என்றார் டீக்கடையில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த அந்த நடுப்பாகனூர் நடேசன்
-------------------------------------------------------------------------------------------------------------------------
எஸ்.வி.சேகரை கண்டதும் சுட உத்தரவு - துணை வட்டாட்சியர்கள் ( எல்லா வட்டங்களும்)
---------------------------------------------------------------------------------------------------------------------
எஸ்.வி.சேகரைக் கண்டதும் போலீஸ் தலை தெறிக்க ஓட்டம் - தலைப்புச் செய்தி,பஞ்சயாத்து டிவி
----------------------------------------------------------------------------------------------------------------------
குருதிகளை உருக்கி செய்யப்பட்டிருக்கிறது ஸ்டெர்லைட் ஆலைக்கான பூட்டு.
------------------------------------------------------------------------------------------------------------------
"எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற பின் தமிழகத்தில் 23 ஆயிரம் போராட்டங்கள்" நடைபெற்றுள்ளன.!
- அமைச்சர், ஆர்.பி.உதயகுமார்-
நம்ம எந்த லட்சணத்துல ஆட்சி செய்றோம்னு கொஞ்சமாவது இது இருக்கா

ஒரு யானை பாகனைக் கொன்ற கதை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மீது ஒருவர் செருப்பு வீசியதால் தான் சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்து பாகனை கொன்று விட்டது - மன்னார்குடி ஜீயர்
கீழே உள்ள கதையை நடிகர் வடிவேல் மாடுலேஷனில் படிக்கவும். இது ஒரு உண்மைக் கதை (கதை வசனம் - மன்னார்குடி ஜீயர்)
ஒரு நாளு, ஒருத்தரு ஸ்ரீரங்கம் கோவில் கருவறையில படுத்துக்கிடந்த ரங்கநாதர் மேல செருப்ப வீசிட்டாரு, படுத்துக்கிடந்த ரங்கநாதரு எந்திருச்சு வந்து யாருடா எம்மேல செருப்ப எறிஞ்சதுன்னு கேக்குறதுக்குள்ள செருப்ப எறிஞ்சவரு கோவில விட்டு வெளில போயிட்டாரு, ரங்கநாதருக்கு துக்கம் தாங்கல உடனே சமயபுரத்துல இருக்க அவரு தங்கச்சி மாரியம்மாகிட்ட நடந்தத போன்ல சொல்லி ஓன்னு கதறி அழுதுருக்காரு, அதுக்கு அவரு தங்கச்சி ஏன்னே உம்மேல செருப்ப எரிஞ்சவன நீ சும்மாவா விட்ட அப்படின்னு கேட்டுருக்கு, அதுக்கு ரங்கநாதரு நா நல்லா சாப்புட்டுட்டு கால நீட்டி கைய தலைக்கு முட்டுக்குடுத்துக்கிட்டு மொரட்டுத்தனமா தூங்கிக்கிட்டு இருந்தேன் அந்த நேரமா பார்த்து படுபாவி என் மூஞ்சில செருப்ப எறிஞ்சுட்டுப் போயிட்டான்னு சொல்லி கண்ணீர் விட்டுருக்காரு, இதக்கேட்ட மாரியம்மாவுக்கு மனசு தாங்கல, அழுதுகிட்டே பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த கோவில் யானைகிட்ட சொல்லியிருக்கு, இதக் கேட்டதும் யானைக்கு கோவம் வந்திருச்சு நம்ம அம்மாவோட அண்ண மேல யாரோ செருப்ப எறிஞ்சிட்டாங்களேன்னு,உடனே அது கோவத்துல பக்கத்துல அப்பாவியா நின்னுக்கிட்டு இருந்த யானைப் பாகன கீழ தூக்கிப்போட்டு மிதிச்சு கொன்னுருச்சு.

கருத்துகள்

ஒருத்தரு செத்ததுக்காக பஸ்ஸ எரிக்கிறாங்களே, அவரு பொறந்தப்ப அவரோட அப்பா பஸ் ஏதாவது வாங்கிக் குடுத்தாரான்னு அப்பாவியாக கேட்டபடியே அமைதியாக நடந்து சென்றார் அந்த அரியலூர் பேருந்து பயணி.
---------------------------------------------------------------------------------------------------------------
அரசு செய்த படுகொலைகளுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு
பின்குறிப்பு: இனி வரும் காலங்களில் அரசு செய்யும் இதுபோன்ற படுகொலைகளுக்கான நிவாரணத் தொகை இன்னும் அதிகரிக்கும்.
---------------------------------------------------------------------------------------------------------------
நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு எங்களையும் அழைக்க வேண்டும்-தமிழிசை
நோன்பு கஞ்சி குடிக்க மாட்டேன், மாட்டு மூத்திரம் மட்டும் தான் குடிப்பேன்னு எச்ச ராஜா சொன்னாரு.
--------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் 1வருடமாக தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர்-பொன்னார்
ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி தெரியுது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி சம்பவம் பிரதமர் மோடி மனவேதனை- #அமித்ஷா
துக்கம் தொண்டைய அடச்சதுனாலதான் இதப்பத்தி ஒன்னுமே சொல்லாம இருக்காப்புல போல.

கருத்துகள்

தமிழகத்தில் மூடப்பட்ட 810 டாஸ்மாக் கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
890 அரசு பள்ளிகள் மூடப்படும்- தமிழக அரசு தீவிர பரிசீலனை
-------------------------------------------------------------------------------------------------------------------
இலை மலர்ந்ததால் தமிழகம் ஈழம் ஆனது.
-------------------------------------------------------------------------------------------------------------------
காவியின் மீது மட்டுமல்ல காக்கியின் மீதும் வெறுப்பாகவே இருக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------
சூத்திரர்களுக்கு வேதம் ஆகாது என்றால் வேதாந்தா மட்டும் எப்படி ஆகும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் இதழ்களின் ஓரத்தில் ஒழுகி வழியும் எங்கள் குருதிகளைத் துடைத்துக்கொண்டு ஒன்றுமே தெரியாதது போல் பேசும் உங்களது பேச்சுகளைக் கேட்க அருவெறுப்பாய் இருக்கிறது.
ச்சீ வாயை மூடுங்களடா கொலைகாரர்களா.
#அரசு கொலைகாரர்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------
உங்களிடமிருந்து வரும் எங்கள் மனிதக் கறிகளின் கவுச்சி உங்கள் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் பிடித்துப்போய் விட்டதா.
#அரசு கொலைகாரர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------
உங்களின் ஒவ்வொரு பிடிச்சோற்றிலும் கலந்தே இருக்கப் போகும் எங்கள் குருதிகளின் வாடையை என்ன செய்யப்போவதாய் உத்தேசம் அநியாயமார்களே.
#அரசு கொலைகாரர்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------------
குருதி வாடை கலந்த உங்கள் முத்தங்களுக்கு முகம் சுழித்ததே இல்லையா உங்கள் குழந்தைகள்.
#அரசு கொலைகாரர்கள்

மாபெரும் கொலைகாரர்களே

மாபெரும் கொலைகாரர்களே,
எங்கள் வாசலுக்கு வந்தீர்கள், காலில் விழுந்து கையெடுத்து கும்பிட்டு எங்கள் வாக்குகளை பிச்சையாகக் கேட்டீர்கள், வாக்குறுதி தந்தீர்கள் தேனாறும் பாலாறும் ஓடுமென்றீர்கள், குடிசைகளெல்லாம் கோபுரமாகுமென்றீர்கள், வாழ்க்கைத்தரம் உயருமென்றீர்கள், உங்கள் பொய் வாக்குறுதிகளை நாங்கள் நம்பவில்லை. நல் உணவு உடை இருப்பிடத்தை நாங்களே பெற்றுக்கொள்வதற்கு வழி அமைத்து தருவீர்கள் என்று நம்பினோம், வாக்களித்தோம். ஆட்சியில் அமர்ந்தீர்கள் உங்கள் வாழ்க்கைத்தரம் மென்மேலும் உயர்ந்தது ஆனால் எங்கள் வாழ்கைத்தரம் அப்படியேதான் இருக்கிறது.
எங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்தீர்கள் விளைநிலங்களை பிடுங்கி பெருநிறுவன முதலாளிகளுக்கு தாரை வார்த்தீர்கள். எங்கள் வாழ்க்கை போராட்டங்களுக்கு நடுவே தினந்தோறும் உங்களோடு போராடுவதையே எங்கள் வாழ்க்கையாக மாற்றினீர்கள். எங்கள் போராட்டத்தை அலட்சியம் செய்தீர்கள் கேலி செய்தீர்கள். போராட்டம் தீவிரமானால் உங்கள் அடக்குமுறையால் எங்களை ஒடுக்கினீர்கள்.
நாங்கள் வாழ்வதற்கே தகுதியற்றவர்களா இந்த மண்ணில், உயிர் வாழ்வதற்கே நாங்கள் போராட வேண்டுமா, சுவாசிக்கும் காற்றில் நச்சை கலக்கிறது அது எங்கள் உயிரை வாங்குகிறது உடனே ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள் என்றோம் தொடர்ந்து போராடினோம், பெருநிறுவன முதலாளிகளிடமிருந்து பெற்ற பிச்சைக்காக எங்கள் பக்கம் உங்கள் துப்பாக்கிகளை திருப்பி குண்டுகளை எம் உடலில் விதைத்துள்ளீர்கள், அறிந்துகொள்ளுங்கள் அதிலிருந்து புரட்சிதான் முளைக்கும். நீங்கள் பல ஆயிரம் போராளிகளை உருவாக்கி இருக்கிறீர்கள்.
துப்பாக்கிச்சூடு தவிர்க்க இயலாததென திமிராய்ப் பேசுகிறீர்கள், நீங்கள் கொன்று குவித்த உயிர்களுக்கு விலைபேசி இருக்கிறீர்கள் இப்போது.
குறித்து வைத்துக் கொள்ளுங்கள் கொலையாளிகளே, கல்லறைகளின் மீது கட்டமைக்கப்பட்ட மாபெரும் பேரரசுகள் எல்லாம் மண்ணோடு மண்ணாக மக்கிப் போனதுதான் வரலாறு இதற்கு உங்கள் அரசு மட்டுமென்ன விதிவிலக்கா, நாங்கள் சிந்திய குருதிகள் உங்கள் கரங்களில் கறைகளாகவே இருக்கும் அதற்கு நீங்கள் பதில் சொல்லியே தீரவேண்டும், சொந்த மக்களையே கொன்று குவித்தவர்கள் ஆட்சியை இழந்து அழிந்துதான் போயிருக்கிறார்கள், உங்கள் ஆட்சியும் அழிந்து மண்ணோடு மண்ணாகும் வெகு விரைவில். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எங்கள் குருதி குடித்த ஆட்சியாளர்களின் நிலைதான் வந்து சேரும் உங்களுக்கும் உங்கள் ஆட்சிக்கும்.
க.ம.மணிவண்ணன்
23/05/18

கருத்துகள்

குமாரசாமியை முதல்வராக ஏற்க முடியாது :- தமிழிசை
எடப்பாடியாவும் தான் எங்களால முதல்வரா ஏத்துக்க முடியல, என்ன செய்ய.
--------------------------------------------------------------------------------------------------------------
890 அரசு பள்ளிகள் மூடப்படும்- தமிழக அரசு தீவிர பரிசீலனை
அப்படியே குலக்கல்வித் திட்டத்தையும் கொண்டுவந்துருங்கடா பார்ப்பன இராஜாஜியின் பேரனுகளா.
------------------------------------------------------------------------------------------------------------------
E.P.S , O.P.S. மருது சகோதரர்கள் போல - தெர்மாகோல் ராஜு
மக்களையா சுட்டுக்கொன்றார்கள் மருது சகோதரர்கள் ?
------------------------------------------------------------------------------------------------------------------------
பகத்சிங்குகளை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஜெனரல் டயர்கள்.
#ஸ்டெர்லைட் போராட்டம்
---------------------------------------------------------------------------------------------------------------------
ஜாலியன்வாலாபாக் கொலைகாரன் டயரின் வாரிசுகள் தான் இந்த டயர் நக்கிகள்.
#ஸ்டெர்லைட் போராட்டம்
-----------------------------------------------------------------------------------------------------------------------
துப்பாக்கிக் குண்டுகளை விதைத்தால் புரட்சி தான் முளைக்கும் என்பது அடிமைகளுக்குப் புரிவதே இல்லை.

எடியூரப்பா அழுகை

ஒரு மனுசன் அங்க கண்ணீர் விட்டு கதறி அழுகுறாரு, நீங்க என்னடான்னா சந்தோசமா சிரிச்சிக்கிட்டு கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.
-----------------------------------------------------------------------------------------------------------------


மொள்ளமாரி முடிச்சவிக்கி கேப்மாரி இவனுகளுக்கெல்லாம் அழுகையே வராதுன்னு எங்க பாட்டி சொல்லுச்சு.
ஆனா இவனுக மட்டும் எப்படி கண்ணீர் விட்டு கதறி அழுகுறானுக.
#கர்நாடகா பரிதாபங்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------
விபீஷணர்கள் யாரும் இல்லாததால் போர்களத்தில் நின்று தேம்பித் தேம்பி அழுதுவிட்டு
போர் செய்யாமல் புறமுதுகு காட்டி ஓடினான் ராமன்.
#கர்நாடகா பரிதாபங்கள்
------------------------------------------------------------------------------------------------------------------------

கிண்டல் கருத்துகள்

அனைவருக்கும் இலவச பசு மாடு வழங்கப்படும் - எடியூரப்பா
எதுக்கு, உங்களுக்கு ஓட்டுப் போட்டதுக்காக எல்லாரும் மாட்டு மூத்திரம் குடிக்கிறதுக்கா.
----------------------------------------------------------------------------------------------------------
எல்லாப் போராட்டங்களும் வன்முறையில் முடிகின்றன - கமல்.
இல்லை, வன்முறையால் முடித்து வைக்கப்படுகின்றன அரசுகளால்.
---------------------------------------------------------------------------------------------------------------
கயல்விழிக்கு ஈழ உணர்வு அதிகமாக இருந்ததால் மணந்தேன் - சீமான்
மாதவனுக்கும் பூஜாவுக்கும் தமிழுணர்வு அதிகமாக இருந்ததாலேயே படத்தில் நடிக்க வைத்தேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------
பிரபாகரன் மறுபிறப்பெடுத்து சீமான் ஆக பிறந்துள்ளார்- பாரதிராஜா
நல்லவருதான், என்ன கொஞ்சம் உள்ள போனவுடனேயே உளற ஆரம்பிச்சிருவாப்புல. பாரதியார பொசுக்குனு பாதிரியார்னு சொல்லிருவாப்புல
--------------------------------------------------------------------------------------------------------------------
பிரபாகரன் மறுபிறப்பெடுத்து சீமான் ஆக பிறந்துள்ளார்- பாரதிராஜா.
மீண்டும் ஒருமுறை இறந்தார் பிரபாகரன் அவமானம் தாங்காமல்.
-----------------------------------------------------------------------------------------------------------------

மானம் கெட்ட தமிழனே என்றழைக்கும் நன்றி கெட்ட தமிழனே

நன்றாகக் கேள் எதற்காக பெரியார் சிலையென்று, கல்வி மறுக்கப்பட்ட நாங்கள் இன்று கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உயர்ந்த நிலையை அடைந்திருப்பதற்கு காரணம் இட ஒதுக்கீடு, அதை பெற்றுத்தந்தது பெரியாரின் இடைவிடாத போராட்டம். அந்த நன்றியை மறந்த தமிழர்கள் இல்லை நாங்கள், ஏ நன்றி கெட்ட தமிழனே நீ கேள் எதற்காக பெரியார் சிலையென்று.
அவரவர் சாதித் தொழிலையே பள்ளிகளில் கற்க வேண்டுமென குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டுவந்த போது, மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் செய்தவர் பெரியார் அதனாலேயே குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் அவரவர் சாதித் தொழிலையே அனைவரும் செய்ய வேண்டியதிருந்திருக்கும் மருத்துவராகவோ பொறியாளராகவோ உயரயதிகாரியாகவோ வாய்ப்பு இருந்திருக்காது. பெரியாரின் உழைப்பை மறந்த தமிழர்கள் இல்லை நாங்கள், ஏ நன்றி கெட்ட தமிழனே நீ கேள் எதற்காக பெரியார் சிலையென்று.
அனைவரும் கோவிலுக்குள் செல்வதற்காகவும் அர்சகராக ஆவதற்கும் போராடியவர் பெரியார், எங்கள் சுயமரியாதைக்காகவும், இழிவு நீங்கவும், தீண்டாமை நீங்கவும், சாதி மதம் ஒழியவும் தன் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் பெரியார், அந்த பெரும் பணியை மறந்த சிறியார்கள் இல்லை நாங்கள், ஏ நன்றி கெட்ட தமிழனே நீ கேள் எதற்காக பெரியார் சிலையென்று.
நால்வர்ணத்தைக் கடைபிடித்த, சனாதன தர்மத்தை நிலைநாட்டிய மனுநீதியின்படி ஆட்சி செய்த பார்பன அடிமைத் தமிழ் அரசர்கள் திருக்குறளை வள்ளுவரைப் போற்றவில்லை, திருக்குறள் மாநாடு நடத்தி தமிழ்நாடெங்கும் திருக்குறளைக் கொண்டாட வைத்தவர் பெரியார். அந்த பெரியாரை மறந்த தமிழர்கள் இல்லை நாங்கள். ஏ நன்றி கெட்ட தமிழனே நீ கேள் எதற்காக பெரியார் சிலையென்று.
க.ம.மணிவண்ணன்
17/05/18

கருத்துகள்

150 தொகுதிகளில் ரஜினிக்கு செல்வாக்கு ; உளவுத்துறை அறிக்கை @ தினமலர்
மிச்சமுள்ள தொகுதிகளில் கமலுக்கு செல்வாக்கு - சிறுவர் மலர்
--------------------------------------------------------------------------------------------------------
அரசியல் ஆதாயத்துக்காக மஜதவை காங்கிரஸ் பயன்படுத்துவது அசிங்கமானது-அமித்ஷா
அசிங்கத்தப் பத்தி
அசிங்கமே பேசுகிறதே
ஆச்சரியக்குறி
-----------------------------------------------------------------------------------------------------------
மத வெறியனுக்கும் புடிக்கல
சாதி வெறியனுக்கும் புடிக்கல
இன வெறியனுக்கும் புடிக்கல
மொழி வெறியனுக்கும் புடிக்கல
யார ?
வேற யார? பெரியாரதான்.
----------------------------------------------------------------------------------------------------------
பிஜேபிக்கு பணிந்து செல்ல நான் ஒன்றும் தமிழக அரசு அல்ல - குமாரசாமி
பரவாயில்லயே நம்ம புகழ் உலகம் பூரா பரவி இருக்கும் போலருக்கே

கிண்டல் கருத்துகள்

ஆமைக்கறி உண்டதாக நகைச்சுவைக்கு கூறினேன். - சீமான்
நீங்க சொல்ற எல்லாத்தையுமே காமெடியாத்தான் எடுத்துக்குறோம், தொடர்ந்து சிரிப்பு காட்டிக்கிட்டே இருங்க ப்ளீஸ்.
 -------------------------------------------------------------------------------------------------------
புறவாசல் வழியாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயல்வது நியாயமற்றது -எடியூரப்பா!
மணிப்பூரையும் கோவாவையும் மறந்துட்டாப்ல போல.
--------------------------------------------------------------------------------------------------------
பாமக சாதி கட்சி இல்லை .
-அன்புமணி ராமதாஸ் .
ஆமா அது சாதி ஒழிப்புக் கட்சி, குடிசைகள எரிச்சே நெறைய சாதிகள ஒழிச்சுருக்கு.
-----------------------------------------------------------------------------------------------------------
கட்சி தொடங்கிய நடிகர்கள் இதுவரை மக்களுக்காக என்ன செய்தார்கள்..?
#முதல்வர்_பழனிசாமி கேள்வி
என்ன ஒரு தைரியம் எம்ஜியாரயே இந்த வாங்கு வாங்குறாரு.
-----------------------------------------------------------------------------------------------------------
ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்த்து போட்டியிட திமுக,அதிமுகவுக்கு தைரியம் இருக்கா..? -தனுஷ்.
சத்தம் காது கிழியுது, தம்பி சங்கு ஊத ஆரம்பிச்சுட்டாப்புல எப்படியும் சீக்கிரமே முடிச்சுருவாப்புல.

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...