Saturday 2 June 2018

கருத்துகள்

தமிழகத்தில் மூடப்பட்ட 810 டாஸ்மாக் கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
890 அரசு பள்ளிகள் மூடப்படும்- தமிழக அரசு தீவிர பரிசீலனை
-------------------------------------------------------------------------------------------------------------------
இலை மலர்ந்ததால் தமிழகம் ஈழம் ஆனது.
-------------------------------------------------------------------------------------------------------------------
காவியின் மீது மட்டுமல்ல காக்கியின் மீதும் வெறுப்பாகவே இருக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------
சூத்திரர்களுக்கு வேதம் ஆகாது என்றால் வேதாந்தா மட்டும் எப்படி ஆகும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் இதழ்களின் ஓரத்தில் ஒழுகி வழியும் எங்கள் குருதிகளைத் துடைத்துக்கொண்டு ஒன்றுமே தெரியாதது போல் பேசும் உங்களது பேச்சுகளைக் கேட்க அருவெறுப்பாய் இருக்கிறது.
ச்சீ வாயை மூடுங்களடா கொலைகாரர்களா.
#அரசு கொலைகாரர்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------
உங்களிடமிருந்து வரும் எங்கள் மனிதக் கறிகளின் கவுச்சி உங்கள் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் பிடித்துப்போய் விட்டதா.
#அரசு கொலைகாரர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------
உங்களின் ஒவ்வொரு பிடிச்சோற்றிலும் கலந்தே இருக்கப் போகும் எங்கள் குருதிகளின் வாடையை என்ன செய்யப்போவதாய் உத்தேசம் அநியாயமார்களே.
#அரசு கொலைகாரர்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------------
குருதி வாடை கலந்த உங்கள் முத்தங்களுக்கு முகம் சுழித்ததே இல்லையா உங்கள் குழந்தைகள்.
#அரசு கொலைகாரர்கள்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...