Thursday 26 April 2018

ஒன்னு முட்டாப் பீசு, இன்னொன்னு மொரட்டுப் பீசு

--------------------------------------------------------------------------------
ஒன்னு முட்டாப் பீசு, இன்னொன்னு மொரட்டுப் பீசு
--------------------------------------------------------------------------------
நான் பல நேரங்களில் நினைப்பதுண்டு எப்படி ஒரு கட்சியில் இருக்கும் எல்லோரும் ஒன்னு முட்டாப் பீசாகவோ இல்லைனா மொரட்டுப் பீசாகவோ அல்லது இரண்டும் சேர்ந்த கலவையாகவோ இருக்கிறார்கள் என்று. ஒருவேளை அந்த கட்சியில் இருப்பதால் அப்படி இருக்கிறார்களா அல்லது அப்படிபட்டவர்களைத்தான் கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்களா என்பது தெரியவில்லை. முட்டாள் தனத்தையும் முரட்டுத்தனத்தையும் சோதித்த பிறகே கட்சியில் உறுப்பினராக சேர்த்துக்கொள்வார்கள் போலிருக்கிறது. அவரவர் முட்டாள் தனத்திற்கும் முரட்டுத்தனதிற்கும் ஏற்றபடி கட்சியல் பதவியும் பொறுப்பும் கொடுப்பார்கள் போலிருக்கிறது.
புராண காலத்திலேயே மரபணு விஞ்ஞானம் இருந்தது என்று கர்ணன் பிறப்பையும் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்று விநாயர் உருவத்தையும் எடுத்துக்காட்டாக கூறிய ஒருவரை மதக்கலவரத்தில் இறந்துபோனவர்களை காரில் அடிபட்டு சாகும் நாய் குட்டியோடு ஒப்பிட்ட ஒருவரை பிரதமராக வைத்திருக்கும் ஒரு கட்சியில் உள்ள மற்றவர்கள் முட்டாப் பீசாகவோ இல்லைனா மொரட்டுப் பீசாகவோ அல்லது இரண்டும் சேர்ந்த கலவையாகவோ இருப்பதில் வியப்பொன்றுமில்லை. அந்த கட்சியின் தலைவரே அந்த கட்சியின் மாநிலத் தலைவரை மிகப்பெரிய ஊழல்வாதி என்று சொன்ன நிகழ்வுகள் உண்டு.
சூரிய விரதம் இருந்தால் சூரியனின் வெப்பம் குறைந்து மழை பெய்யும் என்றும் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுத்தால் சூரியன் கோபப்படுவார் என்று சொன்னவர்கள் இந்த கட்சியில் உள்ள முட்டாப் பீசுகள் தான்.இதே போன்று சில நாட்களுக்கு முன்னால் மகாபாரத காலத்திலேயே இணையதளமும் செயற்கைக்கோளும் இருந்தது என்று சொல்லியது ஒரு முட்டாப் பீசு.
மாட்டு மூத்திரம் குடித்தால் புற்றுநோய் சரியாகிவிடும் என்று ஒரு முட்டாப் பீசு சொன்னதை நன்கு உள்வாங்கிய தொண்டன் ஒருவன் மாட்டு மூத்திரத்திற்கே இவ்வளவு சக்தி என்றால் மாட்டைப் புணர்ந்தால் எவ்வளவு சக்தி கிடைக்கும் என்று நினைத்து மாட்டை வன்புணர்வு செய்துவிட்டான் தலைவர்களே முட்டாப் பீசாகவும் மொரட்டுப் பீசாகவும் இருக்கும்போது தொண்டனும் அப்படித்தானே இருப்பான்.
இதுமட்டுமில்லாமல் கட்சியில் உள்ள மொரட்டு பீசுகள் பாலியல் வன்புணர்விலும் ஈடுபட்டு வருகின்றன. அவ்வப்போது மதக்கலவரத்தை தூண்டும் விதமாகப் பேசி வெட்டு குத்து கொலை என கொண்டுவந்து விடுகின்றன. இப்படிப்பட்ட முட்டாப் பீசுகளும் மொரட்டுப் பீசுகளும் சூழ்ந்த நாட்டில் நாம் வாழ்வது நமக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய தண்டனை.
இப்படிப்பட்டதுகள் தேசிய அளவில் மட்டுமல்ல இங்கேயும் இருக்கின்றன. அதுல ஒன்னு முட்டாப் பீசு இன்னொன்னு மொரட்டுப் பீசு.
மொரட்டுப் பீசோட வேலை எல்லோரையும் தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசி அதன் மூலமா வன்முறைய தூண்டி ஏதாவது கலவரத்த உண்டாக்க முடியுமான்னு பார்க்கிறதுதான், அடிக்கணும் உதைக்கணும் வெட்டனும் குத்தனும் உடைக்கணும்னு பேசுறது தான் இந்த மொரட்டுப் பீசு செய்யுறது. அது மட்டுமில்லாம ஆபாசமாகவும் கொச்சையாகவும் பேசுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறது இந்த மொரட்டு பீசு.
எதிர்ப்பு நிறைய வந்த உடனே எனக்குத் தெரியாம என்னோட அட்மின் இப்படி பண்ணிட்டாருன்னு சொல்லிட்டு தப்பித்துக்கொள்ளும். ஏதோ வெறி நாய் கொலைக்குதேன்னு எல்லாரும் கண்டும் காணாம இருக்காங்க. எங்கேயாவது முட்டுச் சந்துல தனியா மாட்டும்போது ஊரே சேர்ந்து மொத்தும்னு நெனைக்கிறேன்.
2000 ரூபாய் நோட்டுல சிப்பு இருக்குனு சொல்லிச்சு இங்க இருக்கிற முட்டாப் பீசு. இத உண்மைன்னு நம்பி இத எல்லாருக்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருந்ததுகள் சங்கி மங்கிகள். சமஸ்கிருதம் படிச்சா அறிவு வளரும்னு சொல்லுச்சு ஆனா ஏற்கனவே இந்த மொழி செத்த மொழி ஆயிருச்சு அத படிச்சா அறிவு வளர்றது இருக்கட்டும் அந்த மொழியே வளரலையே.
பிராமணர்கள் நடத்தும் நிறுவனத்துல இருந்து திராவிடர்கள் வெளியேறணும்னு சொல்லுச்சு இந்த முட்டாப் பீசு. புரோட்டாக் கடையில புரோட்டா போடுறவர் புரோட்டா மாஸ்டர் அவரு முதலாளி கிடையாது, நீங்க புரோட்டா மாஸ்டர்னா நாங்க சப்ளையர் அவ்வளவு தான். நீங்களே ஆடு மாடு ஓட்டிக்கிட்டு பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிங்க நீங்கதான் இங்கே இருந்து ஓடனும்.
இந்தியாவுல நோபல் பரிசு வாங்குனது எல்லாமே பிராமணர்கள்தான்னு சொன்னதும் இதே முட்டாப் பீசு தான். 2000 வருசமா எங்கள படிக்கவே விடல நீங்க மட்டுந்தானே படிச்சீங்க 2000 வருசமா படிச்சும் 4 பேரோ 5 பேரோ தான் வாங்கி இருக்கீங்க நாங்க இப்பதானே படிக்க ஆரம்பிச்சுருக்கோம். இனிமே தெரியும் யாரு வாங்குவாங்கன்னு.
2 நாளைக்கு முன்னாலே பெண் நிருபர்களையும் செய்தியாளர்களையும் அசிங்கமா இந்த முட்டாப் பீசு பேசியிருந்துச்சு ஒருவேளை அவங்களோட குலப்பெருமையத் தான் சொன்னுச்சு போல. அரசர்கள் ஜமீன்தார்கள் வெள்ளைக்காரர்கள் கிட்ட இருந்து சொத்து நிலம் வசதி வாய்ப்பு வேலை இதெல்லாம் எப்படி வாங்குனாங்கன்னு நமக்கு தெரியாதா என்ன.
இது இப்ப சொல்றத இதுக்கு சாப்பாடு சப்ளை பண்ண ஹோட்டல் முதலாளி ரெம்ப வருசத்துக்கு முன்னாலேயே சொல்லியிருக்கு வேலைக்கு போற பெண்கள் எல்லாம் பத்தினி இல்லைன்னு, அந்த ஆளும் முட்டாத்தனமும் மொரட்டுத்தனமும் சேர்ந்த கலவை தான். காக்கா பிரியாணி தின்னா காக்கா குரல்தானே வரும்கிற மாதிரி அந்த ஆளோட .........ய தின்னா அந்த ஆளோட புத்திதானே வரும் இதுக்கும். அது நான் எழுதுனது இல்ல எனக்கு வந்த பதிவ படிக்காம பார்வர்டு பண்ணிட்டேன்னு பதிவ நீக்கீட்டு மன்னிப்பு கடிதம் எழுதிவச்சிட்டு எங்கேயோ ஓடிப் போயிருச்சு இந்த முட்டாப் பீசு.
எங்கேயாவது பன்னியப் பாத்தா இந்த முட்டாப் பீசுதான் ஞாபகத்துக்கு வருது. எனக்கும் மட்டும்தான் அப்படி வருதா.

நிர்மலாதேவி ஒரு தூண்டில்-மாட்டிக்கொள்ளும் தூண்டில்களும் தப்பித்துக்கொள்ளும் தூண்டில்காரர்களும்.

நிர்மலாதேவி ஒரு தூண்டில்
----------------------------------------------
மாட்டிக்கொள்ளும் தூண்டில்களும் தப்பித்துக்கொள்ளும் தூண்டில்காரர்களும்.
-----------------------------------------------------------------------------------------
தூண்டில்காரர்களுக்கு மீன்கள் தான் இலக்கு, அதற்கு அவர்கள் பயன்படுத்தும் கருவியே இந்த தூண்டில்கள். மீன்களை கொன்ற பழி எப்போதும் தூண்டில்களையே வந்து சேரும். பழி வந்து சேரலாம் என்று தெரிந்தும் ஏன் தூண்டில்கள் மீன்களை கொல்லவேண்டும், தூண்டில்காரர்களிடமிருந்து பெற்ற இனி பெறப்போகும் சலுகைகளுக்காகவும் நம்மை எப்படியும் தூண்டில்காரர்கள் காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையிலும் தான்.
தூண்டில்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை தூண்டில்காரர்கள் ஆகப் பெரிய நயவஞ்சகர்கள் என்பது. இவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிய வரும்போது தூண்டில்களை விட்டுவிட்டு தப்பித்துக்கொள்வார்கள் முடியாதபட்சத்தில் தடயம் தெரியாமல் தூண்டில்களை முறித்து விடுவார்கள்.
நான் சொல்ல வருவது ஓரளவுக்கு புரிந்திருக்கும். ஆம் இப்போது நிர்மலாதேவி என்கிற தூண்டிலைப் பிடித்துள்ளார்கள். தூண்டில்காரர்கள் யார் என்ற விசாரணை தொடங்கி உள்ளது. அதாவது higher official எனப்படுகிற மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள அந்த நபர் யார் என்ற தேடல் துவங்கி உள்ளது.
நிர்மலா தேவி தன்னிடம் இந்த வேலையைச் சொன்ன, தான் இதுவரை higher official என்று நம்பிக் கொண்டிருக்கிற இரண்டு அல்லது மூன்று நபர்களின் பெயரைச் சொல்லுவார். ஆனால் அவர்களும் இவரைப்போன்ற தூண்டில்களாகவே இருப்பர். இப்படியாக எல்லாத் தூண்டில்களும் தாங்கள் தூண்டில்காரகள் என நம்பிக்கொண்டிருந்தவர்களின் பெயரைச் சொல்லும்.ஆனால் இதில் யாருமே தூண்டில்காரர்களாக இருக்க மாட்டார்கள்.
இறுதியாக ஒருவர் ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரைச் சொல்லுவார் அந்த நபர் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிற மிகுந்த செல்வாக்கு மிகுந்த அரசியல் பின்புலம் கொண்டவராக இருக்கும்போது விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகராது நின்ற இடத்தில் நின்று கொண்டே வட்டமடிக்கும் இது எப்போதுவரை என்றால் நாம் விழித்துக்கொண்டிருக்கும் வரை நாம் உறங்க ஆரம்பித்ததும் அதுவரை வட்டமடித்துக் கொண்டிருந்த விசாரணை கால்களை நன்றாக நீட்டி கைகளை தலைக்கு வைத்து நன்றாக குறட்டைவிட்டு உறங்கி விடும்.
நாம் தீடிரென்று விழித்துக்கொண்டு குரல் எழுப்பினால் இப்படி ஒரு செய்தி வரும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிர்மலாதேவி மனநிலை சரியில்லாதவர் அவர் பல்கலைக்கழகத்திற்கும் உயரதிகாரிகளுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்திகளை பரப்பி இருக்கிறார் என்று. வேறு ஏதேனும் அசம்பாவிதம் கூட அவருக்கு நேரலாம். ஆக இப்படியாக விசாரணை முடித்து வைக்கப்படும்.
மக்களே நாமெல்லாம் பார்க்காத நீதி விசாரணையா
க.ம.மணிவண்ணன்
18/04/2018

மன்னிக்காதே மகளே ஆசிஃபா

மன்னிக்காதே மகளே ஆசிஃபா
கடவுள் இருக்கிறார் என உனக்கும் சொல்லப்பட்டிருக்கும், அழைத்த குரலுக்கு ஓடி வருவார் என உனக்கும் சொல்லப்பட்டிருக்கும், அநீதி நடக்கும் போதெல்லாம் அதைத் தடுக்க ஆண்டவன் வருவான் என உனக்கும் சொல்லப்பட்டிருக்கும். கடவுளை வழிபட நீயும் பழக்கப்பட்டிருப்பாய். உனக்கு நேர்ந்த கொடுமையின் போது கடவுளை அழைத்திருப்பாய் கதறிக் கதறி. கடவுள் வந்து காப்பாற்றுவார் என கடைசி வரை நம்பி இருப்பாய். நீ கதறி அழும்போது ஏனென்று கேட்க வராத அந்த கடவுள்கள் முகத்தில் காறித்துப்பு. மகளே ஆசிஃபா அந்த கேடுகெட்ட கடவுள்களை ஒரு போதும் மன்னிக்காதே.
ஒழுக்கத்தை போதிப்பதில்லை மகளே எந்த மதமும், நன்னடத்தையையும் நன்னெறியையும் சொல்லித்தருவதில்லை மகளே எந்த மதமும், பெண்ணைப் போகப் பொருளாகவும், அடிமையாகவும், வெறும் பாலுறுப்பாகவும் மட்டுமே பார்க்கச் சொல்லித் தரும் எல்லா மதங்களின் மீதும் மத நூல்களின் மீதும் காறித்துப்பு. மகளே ஆசிஃபா இந்த அயோக்கிய மதங்களையும் மத நூல்களையும் ஒரு போதும் மன்னிக்காதே.
உனக்கு நேர்ந்த வன்கொடுமை என்னவென்று அறிவாயா மகளே. இந்த முகத்தைப் பார்த்துமா அந்த கயவர்களுக்கு எழுந்தது காமவெறி. இதிலும் மத அரசியல் கலந்திருக்கிறது மகளே. இந்த கயவர்கள் தான் தூய ராமராஜ்யம் அமைக்கப் பாடுபடும் காட்டுமிராண்டிகள். இந்த கயவர்களுக்கு ஆதரவு மதவாத பி.ஜே.பி யின் தேசபக்தி பரிவாரங்கள். இந்த கொலைகார காமவெறி பிடித்த மதவாதிகள் முகங்களிலும் இவர்களை ஆதரிக்கும் மதவாத கட்சியினர் முகங்களிலும் காறித்துப்பு. மகளே ஆசிஃபா இந்த கயவர்களையும் அவர்களை ஆதரிக்கும் காட்டுமிராண்டிகளையும் ஒரு போதும் மன்னிக்காதே.
பெண்களுக்கு வன்கொடுமை நிகழும்போதெல்லாம் வகுப்பெடுக்க வருவார்கள் கலாச்சார காவலர்கள். பெண், எங்கே போக வேண்டும்,எப்போது போகவேண்டும், யாருடன் போகவேண்டும்,என்ன உடுத்த வேண்டும் என்று அறிவுரை சொல்லுகிற ஒழுக்க சிகாமணிகள். அவர்கள் முகங்களிலும் காறித்துப்பு. மகளே ஆசிஃபா இந்த கலாச்சார காவலர்களையும் ஒரு போதும் மன்னிக்காதே.
உன்னைப்போல் ஒரு மகளை வைத்துக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழ மட்டுமே முடிகிற, வேறெதுவும் செய்ய இயலாத இந்த அப்பனின் முகத்திலும் காறித்துப்பு. மகளே ஆசிஃபா இந்த அப்பனையும் ஒரு போதும் மன்னிக்காதே.
க.ம.மணிவண்ணன்

மோடிக்காக எழுதப்பட்ட வழியனுப்பு கவிதை

மோடிக்காக எழுதப்பட்ட வழியனுப்பு கவிதை
-----------------------------------------------------------------------
இராவணர்கள் சொல்லுகிறோம்
இன்று போ
நாளை வராதே
அனுமனே
உன் இராமனிடம் போய்ச்சொல்
இது இராவணர்கள் பூமியென்று
காவி எங்களுக்கு தீட்டு
ஓட ஓட விரட்டியது
கருப்பு
குறுந்தாடி
உனை விரட்டியது பார்
வெண்தாடி
தமிழன்னைக்குப் பயந்து
தலைதெறிக்க ஓடினாள்
பாரத் மாத்தா
மான் கீ பாத்
ஏனோ
மனசுக்குள் அழுதது
இராமன் மட்டுமல்ல
அனுமனும் பயந்தே ஓடுகிறான்
இராமசாமி பூமியில்
பறந்தே போனது
இராமபக்த அனுமன்
இராவணர்களுக்குப் பயந்து
க.ம.மணிவண்ணன்

சீட்டு வாங்கலையோ சீட்டு, சீட்டு வாங்கலையோ சீட்டு

சீட்டு வாங்கலையோ சீட்டு, சீட்டு வாங்கலையோ சீட்டு
அம்மா சீட்டு வாங்கலையோ சீட்டு, ஐயா சீட்டு வாங்கலையோ சீட்டு. போனா வராது பொழுது போனா கெடைக்காது. 1 ஆம் வகுப்பு சீட்டு 1½ லட்ச ரூபாய்தான், சீட்டு வாங்கலையோ சீட்டு.
ஆம், கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் 1 ஆம் வகுப்பு சீட்டை ஒரு மாணவனுக்கு ஒதுக்கித்தருவற்கு அவரது தந்தையிடம் 1½ லட்ச ரூபாய் லஞ்சமாக கேட்டிருக்கிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது பெற்றவர் என்பதும் அப்போதைய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தேசிய விருதை வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1½ லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு 1 ஆம் வகுப்பு சீட்டை ஒதுக்கும் அளவிற்கு அப்படி என்ன மகத்துவமானது அந்தப் பள்ளி. அந்தப் பள்ளியில் உயர்தரமான கல்வி வழங்குவார்களாம். உயர்தரமான கல்வி என்றதும் நல்லொழுக்கத்தையும் நன்னெறியையும் நன்னடத்தையையும் அறத்தையும் போதிப்பார்களோவென்று யாரும் தவறாக எண்ணி விட வேண்டாம். அங்கு பயிலும் மாணவர்களை அனைத்து பாடங்களிலும் உயர்மதிப்பெண் பெறவைப்பதே உயர்தரமான கல்வியாம். உயர்ந்த வாழ்வியல் நெறிகளை சொல்லித்தராத கல்வி எப்படி உயர்தரமான கல்வியாக இருக்கும் என்பதுதான் விடை தெரியாத கேள்வி.
சரி, இப்போது விசயத்திற்கு வருவோம். லஞ்சம் கொடுக்க விரும்பாத மாணவனின் தந்தை சி.பி.ஐ அதிகாரிகளிடம் புகார் செய்ததால் அதிகாரிகளின் திட்டப்படி லஞ்சப்பணம் கொடுக்கப்படும்போது அதைப் பெற்றுக்கொண்ட பள்ளி முதல்வர் பிடிபட்டுள்ளார்.
அவர் இதுபோல், எத்தனை மாணவர்களின் பெற்றோர்களிடம் லஞ்சப்பணம் பெற்றுள்ளார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டபோது, தன்னைப்போல எந்தெந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர்கள் எவ்வளவு லஞ்சப்பணம் பெறுகிறார்கள் என்ற தகவலையும் தந்திருக்கிறார்.
1 ஆம் வகுப்பில் 1½ லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுக்கும் ஒரு மாணவன் உயர் கல்விக்காக லட்சம் லட்சமாக லஞ்சம் கொடுக்கும் ஒரு மாணவன் தான் செலவு செய்த பணத்தை எப்படி நேர்வழியில் சம்பாதிப்பான். முறை தவறிதானே பொருள் ஈட்டுவான். மாணவர்கள் நெறி தவறி வாழ்வதற்குத்தான் வழிகாட்டுகிறார்களா இந்த கல்வியாளர்கள். இது போன்று தவறிழைத்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை என்ன இனி கொடுக்கப்படப்போகும் தண்டனைதான் என்ன.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்தார், அவர் பெரிய பதவியில் இருந்ததால் பெரிய அளவில் லஞ்சம் பெற்றார் ஆகையினால் அவர் பெரிய திருடர். இவர் சிறிய பதவியில் இருப்பதால் சிறிய அளவில் லஞ்சம் பெற்றுள்ளார் ஆகையினால் இவர் சிறிய திருடர். இவர்களை மரியாதையுடன் திருடர் என்றே குறிப்பிட வேண்டும் ஏனென்றால் இவர்கள் அதிகம் படித்த அறிவாளிகள் அல்லவா. இவர்களைப் போன்று பெரு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பல திருடர்கள் பள்ளி முதல்வர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது கேந்திரியா பள்ளிகளில்.
ஆக அவரவர்கள் வாழ்கையில் அவரவர் அளவில் திருட்டுத்தனம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள், இவர்களை நம்பித்தான் இப்படியானதொரு கேடுகெட்ட கல்விச்சூழலில் நமது பிள்ளைகளை நாம் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம் நல்லொழுக்கத்தையும் நன்னெறியையும் நன்னடத்தையையும் அறத்தையும் பள்ளியிலிருந்து கற்று வருவார்கள் என்று எண்ணி.
க.ம.மணிவண்ணன்
11/04/18

ஒரு விவசாயியின் ஆதங்கக் குரல்.

ஒரு விவசாயியின் ஆதங்கக் குரல்.
தண்ணீரோடு இணைந்த எம் வாழ்க்கை இனி கண்ணீரோடுதான் தொடரும் போலிருக்கிறது.
வயலை உழுது விதைவிதைத்து நாற்றுநட்டு நீருக்காக வானத்தை அண்ணாந்து பார்ப்பதும் ஆற்று நீருக்காக ஏங்கித் தவிப்பதுவுமே தொடர் கதையாக இருக்கிறது எங்கள் வாழ்வில்.
வாழ்க்கையோடு பரமபதம் விளையாடிக்கொண்டிருக்கும் எங்களுக்கு உங்களின் வார்த்தை விளையாட்டுகள் என்றுமே புரியப்போவது இல்லை.உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புகள் தற்குறிகளான எங்களுக்குத்தான் புரியவில்லை நாட்டை ஆளும் அறிவாளிகளான உங்களுக்குமா புரியவில்லை. உண்மையிலேயே புரியவில்லையா இல்லை யாருக்குமே புரியாத விதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறதா.
வாழ்க்கையின் கூட்டல் கழித்தல் கணக்குகளுக்கே விடை தெரியாமல் விழி பிதுங்கிப் போய் இருக்கும் பாமரர்களாகிய எங்களுக்கு உங்களின் டி.எம்.சி கணக்கு மட்டும் புரிந்துவிடவா போகிறது.
நாங்கள் அறிந்ததெல்லாம் விவசாயமும் காவிரியும் தான், காவிரி எங்களுக்கு வெறும் நதி அல்ல, அது எங்கள் வாழ்கையின் ஆதாரம் அது எங்கள் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த சொந்தம். காவிரி எங்கள் உணர்வோடும் உயிரோடும் கலந்தவள், அவளை எங்களிடம் வர விடுங்கள்.
காவிரியாலே வாழ்ந்தோம் வாழ்கிறோம், இனி கிடைத்தால் வாழுவோம் இல்லையென்றால் எங்களோடு சேர்ந்து எங்கள் விவசாயமும் மாய்ந்து போகும். என் பாட்டன் காவிரியால் விவசாயம் பார்த்தான், நான் காவிரியை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறேன், என் பிள்ளை காவிரியைப் பாடப்புத்தகத்தில் மட்டும்தான் பார்ப்பான் போலிருக்கிறது.
அரசியலாளர்களே உங்கள் வாக்கு அரசியலுக்காக எங்கள் வாழ்க்கையை பலிகடாவாக்கி விடாதீர்கள். காவிரியை எங்களுக்கு மீட்டுத்தாருங்கள், அவள் எங்களை கைவிடமாட்டாள் வாழ்வளிப்பாள். உலகம் உள்ளவரை நாங்களும் உங்களுக்கு உணவளிப்போம்.
நடந்தாய் வாழி காவிரி
இப்படிக்கு,
தமிழக விவசாயி

Friday 6 April 2018

தீண்டாமையைப் பின்பற்றுபவன்தான் நானும்

தீண்டாமையைப் பின்பற்றுபவன்தான்
நானும்
கடவுள்,மதம்
சாதியின் மீது
மூடப் பழக்க
வழக்கங்களின் மீது
சாஸ்திர,சடங்கு
சம்பிரதாயங்களின் மீது
புகை,மதுப்
பழக்கங்களின் மீது
தீண்டாமையைப் பின்பற்றுபவன்தான்
நானும்

சம்பூகனின் பிள்ளைகள் நாங்கள்

சம்பூகனின்
பிள்ளைகள் நாங்கள்
காத்திருக்கிறோம்
உன் தலைக்காக
வீரன் என்றால்
நேரில் வந்து மோது
பயம் இருந்தால்
தலை தெறிக்க ஓடு
ராம ராஜ்யம் ஒரு சுடுகாடு
ராமசாமி இருக்கிறார் எங்களோடு

நீங்களே சொல்லுங்கள் - உங்களுக்கு வேண்டுமா ராமராஜ்ஜியம்

நீங்களே சொல்லுங்கள் - உங்களுக்கு வேண்டுமா ராமராஜ்ஜியம்
அயோத்தியை ஆண்டு கொண்டிருந்தான் ராமன் வேதங்களில் சொல்லப்பட்ட விதிகளின் படியும் பார்ப்பனர்களின் வழிகாட்டுதல் படியும்.
அரண்மனையில் வீற்றிருந்தான் ராமன், அரண்மனை வாசலில் பெரும் சத்தம் ராமா வெளியே வா, ராமா வெளியே வா என்று. நாடாளும் மன்னனையும் ஒருமையில் அழைக்க யாரால் முடியும் ஆம் அது பார்ப்பானே தான்.
குரல் கேட்டு பயத்துடன் வெளியில் ஓடி வந்தான் ராமன், இறந்து போன தன் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தான் பார்ப்பான். என்ன நடந்தது என்று பதட்டத்தோடு கேட்கிறான் ராமன், உன் ஆட்சி சரியில்லை அதனால் தான் என் பிள்ளை இறந்து விட்டது என்கிறான் பார்ப்பான். புரியும்படி சொல்லுங்கள் என்று கெஞ்சுகிறான் ராமன்.
சம்பூகன் என்றொரு சூத்திரன் காட்டில் தவம் செய்து கொண்டிருக்கிறான் நாங்கள் வகுத்து வைத்த நீதியை மீறி அதனால் தான் என் பிள்ளை இறந்தது என்கிறான் பார்ப்பான். அவன் தவம் செய்வதற்கும் உன் பிள்ளை இறந்ததற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கவில்லை அந்த முட்டாள் ராமன் காரணம் பார்பனர்கள் மேல் அவனுக்கிருந்த அளவு கடந்த பாசம்.
கோபத்தோடு விரைகிறான் ராமன் காட்டை நோக்கி, தவம் செய்யும் சம்பூகனை காண்கிறான் அங்கே, எடுத்தான் வாளை கொய்தான் தலையை சமூக நீதியைக் கொன்றான் அயோக்கிய ராமன். படித்தால் நாக்கை வெட்ட வேண்டும், கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும், மனதில் இருத்தினால் நெஞ்சை பிளக்க வேண்டும் என்ற பார்ப்பன நீதியை நிலை நாட்டினான் கொலைகார ராமன்.
தவம் என்பதை நாம் கல்வியின் குறியீடாகவே பார்க்க வேண்டும், கல்வி கற்ற சூத்திரனின் தலையை வெட்டிக் கொன்றான் ராமன். சம்பூகனின் பிள்ளைகளே ராம ராஜ்ஜியம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் . இப்போது இருப்பதும் ராமராஜ்ஜியத்தின் நீட்சி தான். நீட் என்பதும் ராமன் நிலைநாட்டிய பார்ப்பன நீதியின் நீட்சிதான். அனிதாவும் சம்பூகனின் நீட்சி தான்.
சம்பூகனின் பிள்ளைகளே தலை இழக்க உங்களுக்கு சம்மதமா, நீங்களே சொல்லுங்கள் உங்களுக்கு வேண்டுமா ராமராஜ்ஜியம்.
க.ம.மணிவண்ணன்
22/03/18

பழனி முருகன் என்கிற பால தண்டாயுதபாணி பரிதாபத்துடன் எழுதுவது

பழனி முருகன் என்கிற பால தண்டாயுதபாணி பரிதாபத்துடன் எழுதுவது,
மக்களே உங்க கஷ்டத்த எல்லாம் எங்கிட்டத்தான் வந்து பொலம்புறீங்க, என் கஷ்டத்த உங்க கிட்ட பொலம்பாம நா யாருகிட்ட போயி பொலம்புறது.
மக்களே உங்க எல்லோருக்கும் என்ன நல்லா தெரிஞ்சிருக்கும் தெரியாதவங்களுக்காக என்ன பத்தி நா சொல்றேன், நா சிவனுக்கும் பார்வதிக்கும் பொறந்த ரெண்டாவது புள்ள, மூத்தவரு எங்க அண்ணன் பிள்ளையாரு, நா எப்படி பொறந்தேன்னு சொல்றதுக்கே எனக்கு நா கூசுது, எங்க அண்ணே பொறந்த கத அதவிட அசிங்கம் அதுனால அத விட்டுருவோம் மக்களே.
நா எதுக்கு பழனிக்கு வந்தேங்கிறத சுருக்கமா ஒங்களுக்கு சொல்றேன் மக்களே, ஒரு நாளு நாரதரு ஒரு பழத்த கொண்டு வந்து இது ஞானப் பழம்னாரு அந்த பழத்த வாங்குறதுக்கு எனக்கும் எங்க அண்ணனுக்கும் போட்டி. அண்ணே ஏமாத்தி பழத்த வாங்கிட்டாரு, நானும் கோபமாகி போட்டுக்கிட்டு இருந்த எல்லாத்தையும் கழட்டிப்போட்டுட்டு வெறும் கோமணத்தோடயும் கையில ஒரு குச்சியோடயும் மல மேல வந்து நின்னுட்டேன் அப்புறம் ஒளவையார் வந்து பாட்டுப் பாடி குடும்பத்தோட சேர்த்து வச்சதெல்லாம் தனிக்கதை.
சரி இப்ப முக்கியமான விசயத்துக்கு வருவோம் மக்களே, ரெம்ப வருசத்துக்கு முன்னால எனக்கு நவபாஷனத்துல ஒரு சிலை செஞ்சு வச்சுருந்தாங்க, நவபாஷனத்துல ஏதோ மருத்துவ குணம் இருக்குதுன்னு சொல்லி கர்ப்ப கிரகத்துல இருந்த திருட்டு பயலுக கொஞ்சம் கொஞ்சமா சுரண்ட ஆரம்பிச்சிட்டானுக, நீ எதுவும் பண்ணலயா முருகான்னு என்ன கேக்காதீங்க மக்களே, திருச்செந்தூர்ல வைரவேல திருடுனப்பவும் இப்படித்தான் பேசாம பொத்திக்கிட்டு நின்னேன், ஏன்னா என்னால எதுவுமே பண்ண முடியாது மக்களே.
நவபாஷனத்த சொரண்டுனது எல்லாருக்கும் தெரிஞ்சதும் கர்ப்பக் கிரகத்துல இருந்த சிலைய வேற ஒரு அறையில கொண்டு போயி வச்சுட்டானுக, அதுக்குப் பதிலா தங்கத்தோட வேற நான்கு உலோகங்கள சேர்த்து ஐம்பொன் சிலை செஞ்சு கர்ப்பக் கிரகத்துல கொண்டாந்து வச்சுட்டானுக மக்களே.
அந்த சிலையையும் வெளிநாட்டுக்கு கடத்துறதுக்கு ஒரு கும்பல் திட்டம் போடுறதா தகவல் கெடச்சு போலீஸ் வந்து விசாரிக்கும்போதுதான் தெரியுது சிலை 200 கிலோ இருக்கிறதுக்குப் பதிலா 221 கிலோ இருக்குறது, இன்னும் தீவிரமா விசாரிக்கும்போதுதான் தெரியுது மக்களே 10% தங்கத்த எடுத்துட்டு அதுக்கு பதிலா வேற ஒரு உலோகத்த சேர்த்து சிலை செஞ்சிருக்காய்ங்கங்கிற வெவரம்.
சிலை செஞ்சது 2013 – 2014 ல இப்பதான் சிலை செஞ்ச ஸ்தபதிய கைது பண்ணி சிறையில அடச்சிருக்காங்க, இதுல 1 கோடியே 31 லட்சம் மோசடி நடந்திருக்கிறதா சொல்லிக்கிறாங்க, தெய்வம் நின்னு தான் கொல்லும்னு சொல்லிறாதீங்க மக்களே, நின்னும் கொல்லாது உக்காந்தும் கொல்லாது, இதுல கண்டிப்பா பெரிய ஆளுங்கல்லாம் சம்பந்தப்பட்டு இருப்பாங்க அதுனால கேசு நடந்து தீர்ப்பு வர்றதே சந்தேகம் தான் மக்களே.
முப்பாட்டன் முருகனுக்கு நடந்த கொடுமைய பாருங்க மக்களே, நானே என்ன காப்பத்திக்கிறதுக்கு வழி தெரியாம அல்லாடிக்கிட்டு இருக்கேன், எங்க கட்டியிருக்கிற கோமணத்தையும் களவாடியிருவாய்ங்களோன்னு பயமா இருக்கு, இது தெரியாம நீங்க வேற மாலைய போட்டுக்கிட்டு பாதயாத்திரயா வந்துற்றீங்க என்னைய பாக்க நா ஒங்களயெல்லாம் காப்பதுவேன்னு நம்பி, இதுல அரோகரா அரோகரான்னு கோஷம் வேற.
நவபாஷனத்த சொரண்டுனது தங்கத்த திருடனதெல்லாம் யாருன்னு பாத்தீங்கன்னா எல்லாருமே கடவுள் நம்பிக்கை உள்ளவனாத்தான் இருப்பாய்ங்க மக்களே. படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோயிலுன்னு சொல்லுவாங்கள்ள அது மாதிரி தான்.
என் நெலமைய நெனச்சா பரிதாபமா இருக்குன்னா காலம்காலமா ஏமாளியா இருக்க உங்க நெலமைய நெனச்சா ரொம்ப பாவமா இருக்கு மக்களே, வேற என்ன சொல்ல.
இப்படிக்கு,
முப்பாட்டன் முருகன் என்கிற பால தண்டாயுதபாணி
பால தண்டாயுதபாணி கோவில்
பழனி

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...