Friday 6 April 2018

பழனி முருகன் என்கிற பால தண்டாயுதபாணி பரிதாபத்துடன் எழுதுவது

பழனி முருகன் என்கிற பால தண்டாயுதபாணி பரிதாபத்துடன் எழுதுவது,
மக்களே உங்க கஷ்டத்த எல்லாம் எங்கிட்டத்தான் வந்து பொலம்புறீங்க, என் கஷ்டத்த உங்க கிட்ட பொலம்பாம நா யாருகிட்ட போயி பொலம்புறது.
மக்களே உங்க எல்லோருக்கும் என்ன நல்லா தெரிஞ்சிருக்கும் தெரியாதவங்களுக்காக என்ன பத்தி நா சொல்றேன், நா சிவனுக்கும் பார்வதிக்கும் பொறந்த ரெண்டாவது புள்ள, மூத்தவரு எங்க அண்ணன் பிள்ளையாரு, நா எப்படி பொறந்தேன்னு சொல்றதுக்கே எனக்கு நா கூசுது, எங்க அண்ணே பொறந்த கத அதவிட அசிங்கம் அதுனால அத விட்டுருவோம் மக்களே.
நா எதுக்கு பழனிக்கு வந்தேங்கிறத சுருக்கமா ஒங்களுக்கு சொல்றேன் மக்களே, ஒரு நாளு நாரதரு ஒரு பழத்த கொண்டு வந்து இது ஞானப் பழம்னாரு அந்த பழத்த வாங்குறதுக்கு எனக்கும் எங்க அண்ணனுக்கும் போட்டி. அண்ணே ஏமாத்தி பழத்த வாங்கிட்டாரு, நானும் கோபமாகி போட்டுக்கிட்டு இருந்த எல்லாத்தையும் கழட்டிப்போட்டுட்டு வெறும் கோமணத்தோடயும் கையில ஒரு குச்சியோடயும் மல மேல வந்து நின்னுட்டேன் அப்புறம் ஒளவையார் வந்து பாட்டுப் பாடி குடும்பத்தோட சேர்த்து வச்சதெல்லாம் தனிக்கதை.
சரி இப்ப முக்கியமான விசயத்துக்கு வருவோம் மக்களே, ரெம்ப வருசத்துக்கு முன்னால எனக்கு நவபாஷனத்துல ஒரு சிலை செஞ்சு வச்சுருந்தாங்க, நவபாஷனத்துல ஏதோ மருத்துவ குணம் இருக்குதுன்னு சொல்லி கர்ப்ப கிரகத்துல இருந்த திருட்டு பயலுக கொஞ்சம் கொஞ்சமா சுரண்ட ஆரம்பிச்சிட்டானுக, நீ எதுவும் பண்ணலயா முருகான்னு என்ன கேக்காதீங்க மக்களே, திருச்செந்தூர்ல வைரவேல திருடுனப்பவும் இப்படித்தான் பேசாம பொத்திக்கிட்டு நின்னேன், ஏன்னா என்னால எதுவுமே பண்ண முடியாது மக்களே.
நவபாஷனத்த சொரண்டுனது எல்லாருக்கும் தெரிஞ்சதும் கர்ப்பக் கிரகத்துல இருந்த சிலைய வேற ஒரு அறையில கொண்டு போயி வச்சுட்டானுக, அதுக்குப் பதிலா தங்கத்தோட வேற நான்கு உலோகங்கள சேர்த்து ஐம்பொன் சிலை செஞ்சு கர்ப்பக் கிரகத்துல கொண்டாந்து வச்சுட்டானுக மக்களே.
அந்த சிலையையும் வெளிநாட்டுக்கு கடத்துறதுக்கு ஒரு கும்பல் திட்டம் போடுறதா தகவல் கெடச்சு போலீஸ் வந்து விசாரிக்கும்போதுதான் தெரியுது சிலை 200 கிலோ இருக்கிறதுக்குப் பதிலா 221 கிலோ இருக்குறது, இன்னும் தீவிரமா விசாரிக்கும்போதுதான் தெரியுது மக்களே 10% தங்கத்த எடுத்துட்டு அதுக்கு பதிலா வேற ஒரு உலோகத்த சேர்த்து சிலை செஞ்சிருக்காய்ங்கங்கிற வெவரம்.
சிலை செஞ்சது 2013 – 2014 ல இப்பதான் சிலை செஞ்ச ஸ்தபதிய கைது பண்ணி சிறையில அடச்சிருக்காங்க, இதுல 1 கோடியே 31 லட்சம் மோசடி நடந்திருக்கிறதா சொல்லிக்கிறாங்க, தெய்வம் நின்னு தான் கொல்லும்னு சொல்லிறாதீங்க மக்களே, நின்னும் கொல்லாது உக்காந்தும் கொல்லாது, இதுல கண்டிப்பா பெரிய ஆளுங்கல்லாம் சம்பந்தப்பட்டு இருப்பாங்க அதுனால கேசு நடந்து தீர்ப்பு வர்றதே சந்தேகம் தான் மக்களே.
முப்பாட்டன் முருகனுக்கு நடந்த கொடுமைய பாருங்க மக்களே, நானே என்ன காப்பத்திக்கிறதுக்கு வழி தெரியாம அல்லாடிக்கிட்டு இருக்கேன், எங்க கட்டியிருக்கிற கோமணத்தையும் களவாடியிருவாய்ங்களோன்னு பயமா இருக்கு, இது தெரியாம நீங்க வேற மாலைய போட்டுக்கிட்டு பாதயாத்திரயா வந்துற்றீங்க என்னைய பாக்க நா ஒங்களயெல்லாம் காப்பதுவேன்னு நம்பி, இதுல அரோகரா அரோகரான்னு கோஷம் வேற.
நவபாஷனத்த சொரண்டுனது தங்கத்த திருடனதெல்லாம் யாருன்னு பாத்தீங்கன்னா எல்லாருமே கடவுள் நம்பிக்கை உள்ளவனாத்தான் இருப்பாய்ங்க மக்களே. படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோயிலுன்னு சொல்லுவாங்கள்ள அது மாதிரி தான்.
என் நெலமைய நெனச்சா பரிதாபமா இருக்குன்னா காலம்காலமா ஏமாளியா இருக்க உங்க நெலமைய நெனச்சா ரொம்ப பாவமா இருக்கு மக்களே, வேற என்ன சொல்ல.
இப்படிக்கு,
முப்பாட்டன் முருகன் என்கிற பால தண்டாயுதபாணி
பால தண்டாயுதபாணி கோவில்
பழனி

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...