Saturday 30 November 2019

கோவில்களும், ஐ.ஐ.டிகளும்

கோவில்களும், ஐ.ஐ.டிகளும்
---------------------------------------------
பார்ப்பனியம் எங்கெல்லாம் தனது அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் நிலை நிறுத்தியுள்ளதோ அங்கெல்லாம் அது வன்முறை செய்யும். உளவியல் ரீதியாக வன்முறை நிகழ்த்தும். இழிவாகப் பேசும், மரியாதைக் குறைவாக நடத்தும், தகுதி திறமை இல்லையென்று கேலி செய்யும், எதிர்த்தால் திருட்டுப் பட்டம் கட்டும், தீட்ஷித தர்ஷன்களின் மூலமாக உடல் ரீதியாகத் தாக்குதல் நடத்தும், ஐஐடி சுதர்சன்களைக் கொண்டு தற்கொலைக்குத் தூண்டும். தன்னுடைய நலனுக்காக காஞ்சி சங்கரன்களை வைத்துக் கொலையும் செய்யும். காயத்திரிகளையும் கஸ்தூரிகளையும் ஆபாசமாகப் பேசவைத்து பிரச்சனைகளை மடைமாற்றம் செய்யும்.
காஞ்சி சங்கரன்களையும், ஹெச் ராஜாக்களையும், எஸ்.வி சேகர்களையும் எதுவுமே செய்யாத சட்டமும் நீதியும் சுதர்சனையும் தர்ஷனையும் மட்டுமா ஏதாவது செய்துவிடப் போகிறது. மீசை முறுக்கி ஆண்ட பரம்பரை பெருமை பேசித் திரிபவைகள் எல்லாம் இந்நேரம் பார்பனியத்தின் காலில் விழுந்து சரணாகதி அடைந்திருக்கும் வேண்டுமானால் எஜமான விசுவாசத்திற்காக வன்முறையை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு பார்பனியத்தை காப்பாற்றும்.
பார்பனியத்தின் கொடுமைகளை பெரியாரியமும் அம்பேத்கரியமும் சொற்களால் அறைந்து சொன்னபோதெல்லாம் செவிகளை மூடி அறிவுக்கண்களை திறவாமல் வைத்திருந்த நமக்கு தீட்சிதப் பார்ப்பான் கன்னத்தில் அறைந்து பார்ப்பனீயம் எதுவென்பதைச் சொல்லிவிட்டான். இனியாவது நம் செவிகளும் அறிவுக்கண்களும் திறக்குமா.
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...