Thursday 23 July 2020

குடியும் கொரோனாவும்


எது நடக்காது என்றிருந்தேனோ
கடைசியில் அது நடந்தே விட்டது

அது ஒரு தனி அறை
அங்கே நானும் கொரோனாவும் மட்டும்

விட்டுவிடுமாறு கைகூப்பி கெஞ்சினேன்
நீதான் என்னைப் பிடித்தாய் என்றது

எங்கே எப்போது நிகழ்ந்ததெனக் கேட்டேன்
மதுக்கடை வாசலில் தான் என்றது அது
முகக் கவசம் அணிந்திருந்தேனே நானென்றேன்
இடுப்பு வேட்டியே உன் பேச்சைக் கேட்காதே
முகக் கவசம் மட்டும் எப்படி என்றது

குடிக்காமல் இருக்க முடியாதென்றேன்
குடித்தாலும் நீண்டநாள் இருக்க முடியாதென்றதது

தப்பிக்க வழி என்ன கேட்டது நான்
நோயெதிர்ப்பு ஆற்றல் உடலிலிருந்தால்
சாத்தியமென்றது அது

கடவுள் என்னைக் காப்பார் என்றேன்
அமைதியாய் இருந்த அந்தக் குறும்புக் கோரோனா
அறை அதிரச் சிரித்துவிட்டு
யார் அந்தக் கடவுள் என்றது

அறையை விட்டு தப்பிக்க எண்ணி
கதவைத் திறக்க வேகமாய் ஓடினேன்
அப்போதுதான் அது நிகழ்ந்தது
கட்டிலிலிருந்து தூக்கத்தில் விழுந்த நான்
கண்களைக் கசக்கி மெல்லமாய் எழுந்தேன்.


No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...