எது நடக்காது என்றிருந்தேனோ
கடைசியில் அது நடந்தே விட்டது
அது
ஒரு தனி அறை
அங்கே நானும் கொரோனாவும் மட்டும்
விட்டுவிடுமாறு
கைகூப்பி கெஞ்சினேன்
நீதான் என்னைப் பிடித்தாய் என்றது
எங்கே எப்போது நிகழ்ந்ததெனக் கேட்டேன்
மதுக்கடை வாசலில் தான் என்றது அது
மதுக்கடை வாசலில் தான் என்றது அது
முகக் கவசம் அணிந்திருந்தேனே நானென்றேன்
இடுப்பு வேட்டியே உன் பேச்சைக் கேட்காதே
இடுப்பு வேட்டியே உன் பேச்சைக் கேட்காதே
முகக் கவசம் மட்டும் எப்படி என்றது
குடிக்காமல் இருக்க முடியாதென்றேன்
குடித்தாலும் நீண்டநாள் இருக்க முடியாதென்றதது
தப்பிக்க வழி என்ன கேட்டது நான்
நோயெதிர்ப்பு ஆற்றல் உடலிலிருந்தால்
சாத்தியமென்றது அது
கடவுள் என்னைக் காப்பார் என்றேன்
அமைதியாய் இருந்த அந்தக் குறும்புக் கோரோனா
அறை அதிரச் சிரித்துவிட்டு
அறை அதிரச் சிரித்துவிட்டு
யார் அந்தக் கடவுள் என்றது
அறையை விட்டு தப்பிக்க எண்ணி
கதவைத் திறக்க வேகமாய் ஓடினேன்
அப்போதுதான் அது நிகழ்ந்தது
கட்டிலிலிருந்து தூக்கத்தில் விழுந்த நான்
கண்களைக் கசக்கி மெல்லமாய் எழுந்தேன்.
கண்களைக் கசக்கி மெல்லமாய் எழுந்தேன்.
No comments:
Post a Comment