Thursday 23 July 2020

மதப் பசியெடுத்தால் மனித உயிர் தின்னும்


இந்தியப் பசுக்களும்
சைவம்தான் உண்ணும்
மதப் பசியெடுத்தால்
மனித உயிர் தின்னும்.
தும்பிக்கை நீட்டி பிச்சையெடுத்தது
நேற்று சாமி சிலை சுமந்துவந்த
அந்த வாடகை யானை.
எதிர்காலம் சொல்லும்
கிளிகளின் எதிர்காலம் ஜோசியக்காரனின்
நெல் மணிகளில்.
அமாவாசைக்கு
வடை தின்ன அழைக்கப்படும்
அந்தக் காகம்தான்
பாட்டியிடம் என்றோ திருடிய
ஒரு வடைக்காக
இன்னும் அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எப்போதும் பலன் சொல்லும்
சமையலறைப் பல்லி
கொதிக்கும் பாலில் விழுந்தது
அந்தோ பரிதாபம்.

எத்தனை முறை குறுக்கே போனாலும்
குறைவதே இல்லை
பூனை வளர்க்கும் நடிகையின் செல்வம்.
கழுதையின் முகத்திலேயே
நாள்தோறும் விழித்தாலும்
பழைய துணியையே
துவைத்துக் கொண்டிருக்கிறார்
அந்த சலவைத் தொழிலாளி.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...