Wednesday 21 February 2018

இது பெரியாரின் மண் தான்

இது பெரியாரின் மண் தான்.
1. காந்தி கொலையுண்டு இறந்தபோது, கொலை செய்தவன் கோட்சே என்ற பார்ப்பனன் என்ற காரணத்தால் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கலவரமும் பார்ப்பனர்களின் மீது தாக்குதலும் நடந்தது. அவ்வாறு தமிழகத்திலும் நடைபெறாமல் தவிர்ப்பதற்காக யார் சொன்னால் தமிழகம் கேட்குமோ அவரை வானொலியில் பேசச் செய்தார்கள்,அவரும் பேசினார் அவர்தான் பெரியார்.அவரது பேச்சினால் தமிழகத்தில் எந்த கலவரமும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
2. குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வர முயற்சி செய்த இராஜாஜி பெரியாருக்கு பயந்தே அத்திட்டத்தை கைவிட்டார் – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
3. எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டாலும் பெரியார் எதிர்த்த இந்தியை இன்று வரை தமிழகம் எதிர்க்கவே செய்கிறது – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
4. மண்டல் கமிஷன் பரிந்துரையை திரு.வி.பி.சிங் செயற்படுத்த முனைந்தபோது அதை எதிர்த்து வடமாநில உயர்சாதி மாணவர்கள் போராட்டம் செய்தார்கள்,ஆனால் அதுபோன்ற நிகழ்வு தமிழகத்தில் இல்லை – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
5. நீட் தேர்வை மற்ற மாநிலங்கள் ஏற்ற போதிலும் தமிழகம் மட்டும் எதிர்த்து போராடுகிறது – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
6. ஒரு சாமியாருக்கு தண்டனை வழங்கப்பட்டதற்காக மிகப்பெரிய கலவரமே வெடித்தது வட மாநிலத்தில் ஆனால் இங்கு சங்கராச்சாரியே கைது செய்யப்பட்டாலும் யாரும் கண்டு கொள்வதில்லை – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
7. கலவரத்தை உண்டாக்க மத வெறியர்கள் ஒவ்வொரு முறை முயற்சி செய்யும்போதும் அவர்களது திட்டத்தை நீர்த்துப்போக செய்து விடுகிறார்கள் தமிழக மக்கள் – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
8. சாதிப் பெயரை தன் பெயரோடு இணைப்பதை தவிர்த்து தன் பெயரை மட்டுமே அடையாளப்படுத்துகிறார்கள் தமிழக மக்கள் – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
9. சாதி மத கலவரங்கள் சிறு நெருப்பாக எரிய ஆரம்பிக்கும்போதே அதை அணைக்கின்ற நீராக இங்கு பெரியாரியம் இருக்கின்றது – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
10. நாட்டை ஆளுகின்ற, 19 மாநிலங்களில் ஆட்சி செய்கிற ஒரு தேசிய மதவாத கட்சியின் தேசியச் செயலாளர் சாரண சாரணியர் இயக்கத் தலைவர் தேர்தலில் வெறும் 46 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோற்றுப் போனார்,சட்ட மன்றத் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர் நோட்டாவைக் காட்டிலும் குறைவாக வெறும் 1368 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வி அடைந்தார் – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
11. இறந்து 40 ஆண்டுகள் ஆன பிறகும் ஏற்றுக்கொண்டோருக்கு பெரும் உற்சாகத்தையும் எதிரிகளுக்கு பெரும் அச்சத்தையும் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார் பெரியார் - ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
க.ம.மணிவண்ணன்
15/02/2018

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...