Friday 9 February 2018

நான் மதுரை மீனாட்சி அம்மன் பேசுகிறேன்.

நான் மதுரை மீனாட்சி அம்மன் பேசுகிறேன்.
அம்பாள் எந்த காலத்துல பேசுனான்னு எங்கிட்டேயே கேக்காதீங்க,கேள்வி கேக்குறது சுலபம் பதில் சொல்றது தான் ரொம்ப கஷ்டம். எனக்கு சக்தி இருந்தா இப்படி தீப்பிடிச்சு எரியுமான்னு கேக்கிறீங்க சரியான கேள்வி தான் கேக்கிறீங்க ஆனா தப்பான ஆளுங்க கிட்ட கேக்கிறீங்க. நா எப்பாவது எனக்கு சக்தி இருக்குன்னு சொன்னேனா, உழைக்காம ஊரான் காசுலேயே உடம்ப வளர்க்குற ஒரு கூட்டம் அவன் பொழைப்பு நடத்துறதுக்கு ஏதோ கதைய சொல்லி வச்சிருக்கான் அத நம்பி நாட்ட ஆண்ட அரசருங்க எல்லாம் மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணுவோம்னு இல்லாம கோவிலா கட்டி வச்சிருக்காங்க.
நா வெறும் கல்லுதான், நா மட்டுமில்ல என்ன மாதிரி இருக்க எல்லாமே வெறும் கல்லுதான், நாங்களும் துணி துவைக்கிற கல்லுமாதிரியும் மாவாட்டுற கல்லுமாதிரியும் தான், அதுகளாவது துணி துவைக்கிறதுக்கும் மாவாட்டுறதுக்கும் பயன்படுது, நாங்க ஒன்னுத்துக்கும் லாயக்கு இல்லமா வெட்டியா உக்காந்து இருக்கோம்.எங்களுக்கு சக்தி இருந்திருந்தா, எங்களுக்கு எல்லாம் சக்தி இருக்குன்னு சொன்ன தேவநாத பாப்பான் கருவறைக்குள்ளே அந்த அசிங்கத்தப் பண்ணி இருப்பானா, சங்கர்ராமன கோவிலுக்குள்ளே வச்சு கொல பண்ணியிருப்பாங்களா, நாங்க தான் அத தடுக்காம இருந்திருப்பமா.
எனக்கு கோபம் வந்ததால தான் தீப்புடிச்சுச்சுன்னு சொல்றாங்க, கல்லுக்கு எப்படிங்க கோவம் வரும் அப்படியே வந்தாலும் அங்க இருக்க கடைகள ஏங்க எரிக்கணும், எல்லோரையும் ஏமாத்திக்கிட்டு ஒரு கூட்டம் கருவறைக்குள்ள நிக்கிதே அதுங்க மேலேயில்ல கோவம் வரணும்.வள்ளலாரையும் நந்தனாரையும் கண்ணு முன்னாலேயே கொலை செஞ்சப்ப வராத கோவம் இனிமேயா வரப்போகுது.
மத்த மதத்துக்காரங்களும் கடை வச்சுருக்கனாலதான் கடையெல்லாம் எரிஞ்சு போச்சுன்னு சொல்லுறாங்க ஒருத்தங்க, அது அவங்களோட தனிப்பட்ட கருத்து எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, மத்த மதத்துக்காரங்களும் கடை வச்சிருக்கதால உங்க ஆளுங்க வயிறு தானே எரியும் எப்படிங்க கடை எரியும்.
அறநிலையத்துறையோட நிர்வாகம் சரியில்ல அதுனால தான் இதுமாதிரியெல்லாம் நடக்குது அதுனாலே இனிமே நாங்களே பாத்துக்குறோம் எங்க கிட்டயே கோவில் நிர்வாகத்த கொடுத்துருங்க அப்படின்னு ஒருத்தரு சொல்றாரு நாங்கன்னு அவரு சொல்றது உடம்புல குறுக்க ஒரு நூலு போட்டுருப்பாங்கள்ள அவங்கள சொல்றாருன்னு நெனைக்கிறேன், காலங்காலமா கோவில் சொத்தையும் பணத்தையும் சுரண்டி தொப்பைய வளர்த்தது போதாதா இனிமேலயும் சுரண்டிப் பொழைக்கணுமா, இது மீனாட்சியம்மன் ஆன என்னோட தனிப்பட்ட கருத்து இதுக்கும் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.
மறுபடியும் சொல்றேன் நா வெறும் கல்லு தான் கடையில புடிச்ச தீ கருவறையில புடிச்சிருந்தா நானும் எரிஞ்சு போயிருப்பேன் நீங்களாவது அய்யோ அம்மான்னு கத்துவீங்க என்னாலே அது கூட முடியாது கருவறையில நிக்கிறவனுக எல்லாம் என்னைய அம்போன்னு விட்டுட்டு துண்டக்காணோம் துணியக்காணோம்னு தொப்பைய தூக்கிட்டு ஓடிப் போயிருப்பானுக. அதுனாலதான் சொல்றேன் எனக்கு சக்தி இருக்கு நான் உங்கள காப்பாத்துவேன் அப்படின்னு என்னைய நம்பிக்கிட்டு இருக்காம உங்க அறிவை பயன்படுத்தி முன்னேறுற வழிய பாருங்க அவ்வளவு தான் நா சொல்லுவேன் அதுக்கு மேல உங்க விருப்பம்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...