Saturday 3 February 2018

சந்திர கிரகணம் – அறிவியலும் மூட நம்பிக்கையும்

சந்திர கிரகணம் – அறிவியலும் மூட நம்பிக்கையும்
(i) இன்று வானில் தோன்றிய நிலவுக்கு சில சிறப்புகள் உண்டு.
1) ப்ளூ மூன் – ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வரக்கூடிய முழு நிலவுக்கு ப்ளூ மூன் என்று பெயர், இது நீல நிறமாகத் தோன்றாது. இந்த ஜனவரி மாதத்தில் 1 ஆம் தேதி முதல் முறையும் இன்று 31 ஆம் தேதி இரண்டாவது முறையாகவும் முழு நிலவு வந்துள்ளது.
2) சூப்பர் மூன் – நிலவானது நீள் வட்டப்பாதையில் சுற்றி வருவதால் மாதத்தில் ஒரு நாள் புவியிலிருந்து வெகு தூரத்திலும்,ஒரு நாள் வெகு அருகிலும் இருக்கும்,இன்று புவிக்கு அருகில் நிலவு வருவதால் வழக்கத்தை விட 15 விழுக்காடு பெரியதாகவும் 30 விழுக்காடு வெளிச்சமாகவும் இருக்கும். இதனால் சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது.
3) இன்று சந்திர கிரகணம் ஆகும்.
இந்த மூன்று நிகழ்வும் சேர்ந்து வருவது 152 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் நிகழ்ந்துள்ளது என்றும் இனி 2028 ஆம் ஆண்டு தான் நிகழும் என்றும் கூறப்படுகிறது.
(ii)சந்திர கிரகணம் எதனால் ஏற்படுகிறது?
சூரியன்,பூமி,சந்திரன் ஒரே வரிசையில் இருந்தாலும் ஒரே நேர்கோட்டில் இருப்பதில்லை அவ்வாறு நேர்கோட்டில் இருக்கும்போதே சந்திர கிரகணம் ஏற்படுகிறது.சூரியனின் ஒளியானது பூமியில் விழும்போது பூமியின் நிழல் நிலவின் மீது படிவதால் நிலவானது ஒளியிழந்து இருளாக காணப்படுகிறது.சந்திர கிரகணம் முழு நிலவு நாள் அன்றே தோன்றும்,ஆனால் எல்லா முழு நிலவு நாட்களிலும் தோன்றாது.
(iii)செந்நிறமாகத் தோன்றுவது ஏன்?
முழுக் கிரகணத்தின் போது நிலவு செந்நிறமாக காட்சி அளிக்கும்.சூரிய ஒளியானது பூமியின் காற்று மண்டலத்தில் உள்ள தூசுக்களால் ஒளிச் சிதறல் அடைகிறது,ஒளிச் சிதறல் அடையும் போது நீலம்,பச்சை போன்ற நிறங்கள் காற்று மண்டலத்தால் கவரப்படுகிறது,ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்கள் மட்டும் வளைந்து சென்று நிலவின் மீது படிகிறது,இதுவே செந்நிறமாக தோன்றுவதற்குக் காரணம்.
(iv)கிரகணம் பற்றிய மூட நம்பிக்கைகள்
ராகு கேது ஆகிய பாம்புகள் நிலவை விழுங்கி விடுவதாக மூட நம்பிக்கை நிறைந்த கதைகள் சொல்லப்படுகிறது, கிரகண நேரத்தில் நீர் அருந்தக் கூடாது, உணவு உண்ணக்கூடாது,கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக்கூடாது போன்றவை முழுக்க முழுக்க மூட நம்பிக்கையே. கோவில்கள் கூட கிரகண நேரத்தில் மூடப்படுகின்றன.
அறிவியல் அறிவோம்,மூட நம்பிக்கை தவிர்ப்போம்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...