Sunday 28 January 2018

சங்கர மடத்திற்குச் சில கேள்விகள்

சங்கர மடத்திற்குச் சில கேள்விகள்
1) அண்மையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மேடையிலேயே தனி        மேடை அமைத்து சங்கராச்சாரியை அமர வைத்தது ஏன்? எல்லோரயும் விட, பார்ப்பானாகவே இருந்தாலும் அவர்களையும் விட சங்கராச்சாரிகள் உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காகவா?
2) தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காதது, தமிழ் நீஷ பாஷை என்ற சங்கராச்சாரிகளுடைய எண்ணத்தின் வெளிப்பாடா?
3) கடவுள் வாழ்த்து பாடப்படும்போது சங்கராச்சாரிகள் எழுந்து நிற்கும் வழக்கமில்லை – தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் கடவுள் வாழ்த்துக்கும் வேறுபாடு அறியாதா சங்கர மடம்?
4) தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கும் மரபு இல்லை – தண்டத்தை மடத்திலேயே போட்டு விட்டு நேபாளம் சென்றவரை திரும்ப மடத்திற்கு அழைத்து வந்தது என்ன மரபு? ஆடிட்டர் சங்கரராமன் கொலை எந்த மரபின் கீழ் வருகிறது? இன்னும் சில கேள்விகள் உள்ளது பலான விடயத்தைப் பற்றி பொது வெளியில் கேட்பதற்கு நான் நேசிக்கும் என் தமிழ் மரபு தடுக்கிறது.
5) தமிழ்வாழ்த்துப் பாடும்போது எழுந்து நின்று மரியாதை செய்யாமல் தியானம் செய்யும் சங்கராச்சாரி, தியானம் செய்ய வேண்டிய நேரத்தில் என்ன செய்து கொண்டு இருந்தார்?
6) நாட்டுப்பண் பாடப்படும்போது மட்டும் எழுந்து நிற்பது ஏன்? இந்து என்ற மதமும் இந்தியா என்ற நாடும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்படாமல் போயிருந்தால், பிழைப்பதற்கு வழி இல்லாமல் போயிருக்குமே என்ற எச்ச்சரிக்கை உணர்வா?
7) வைரமுத்து ஆண்டாள் நிகழ்வுக்கு எதிர் வினை ஆற்றும் பொருட்டு தமிழை அவமானப்படுத்துவதற்காக சங்கர மடமும் எச்.ராஜாவும் சேர்ந்து புரிந்திட்ட பார்ப்பனக் கூட்டு அரசியலா?
8) தமிழை அவமதித்ததற்காகச் சங்கராச்சாரிகளும் எச்.ராஜாவும் எப்போது மன்னிப்பு கேட்கப் போகிறீர்கள்?
இப்படிக்கு,
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...