Tuesday 2 January 2018

.............. ஆகிய நான்

.............. ஆகிய நான்
அகிம்சை நிரம்பிய
என்
ஒவ்வொரு எழுத்திலும்
இரத்த வாடை வீசுகிறது.
தோழமையென்று
தோளில் கைபோடும்
என் தலைக்குள்ளே
சாதிப் பெருமை அப்படியே இருக்கிறது.
உனது
கல்லாமை அறியாமை
வறுமையை எருவாக்கி
என் வெள்ளாமை நடக்கிறது.
வாய்மை பேசி நடிக்கும்
என் நாக்கின் அடியில்
பொய்மை இருக்கிறது.
பகுத்தறிவு பேசும்
உன் அறிவாண்மை கண்டு
சீற்றம் வருகிறது.
ஆண் திமிரை அடக்கும்
உன் பெண்மையின் மீது
ஆத்திரம் வருகிறது.
தோளில் ஏறக் காத்திருக்கும்
என் பொறுமை
உன் நிமிர்வின் மீது
பொறாமை கொள்கிறது.
இறையாண்மை பேசும்
என் கைகளின் மறைவில்
கொலை வாளும் இருக்கிறது.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...