Monday 15 January 2018

பிரபல ரவுடி எச்.ராஜாவுக்கு

பிரபல ரவுடி எச்.ராஜாவுக்கு மணிவண்ணன் எழுதுவது,
வேட்டிய மடிச்சுக்கட்டுனா நானும் ரவுடிதான்னு சொல்லி இருந்தீங்க, மடிச்சுக் கட்டலைனாலும் நீங்கள்லாம் ரவுடிதான்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். சாணக்கியன் காலத்துல இருந்து கோட்சே,சங்கராச்சாரி வரை அதைத் தானே செய்யுறீங்க. கொலையையும் செஞ்சுப்புட்டு இது சாணக்கியத்தனம், கீதையில கிருஷ்ணன் அப்படித்தான் சொல்லியிருக்கான்னு வெக்கமில்லாம வேற சொல்லிக்கிறீங்க.
நீங்கள் ஒவ்வொரு தடவை பேசும்போதும், ஆய்வுகளையும் வரலாறுகளையும் மேற்கோள் காட்டிச் சொல்லப்படும் கருத்துக்களோடு மோதாமல், கருத்துச் சொன்னவர தடித்த வார்த்தைகள்ள தரைக்குறைவாகவும் வன்முறைய தூண்டுகிற விதமாகவும் பேசுறீங்க. அது பெரியார்ல ஆரம்பிச்சு இப்போ வைரமுத்துல வந்து நிக்குது. ஒவ்வொரு முறையும் நாங்க உங்க கருத்தோடதான் மோதியிருக்கோமே தவிர உங்களோட இல்ல, அதுக்குக் காரணம் பெரியார் எங்களுக்குச் சொல்லித்தந்த பகுத்தறிவுதான்.
ஆனால் உங்களுக்குப் போதிக்கப்பட்டதும் நீங்கள் போதிப்பதும் அடிக்கணும்,குத்தனும்,கொல்லணும் என்கிற வன்முறை தான். உங்களோடு முரண்படுகிறவர்களை எல்லாம் கொன்று ஒழிப்பது தான் உங்கள் வழக்கமாக இருந்து வருகிறது. சமணர்களையும் பவுத்தர்களையும் கழுவுலேற்றிக் கொன்றது தானே உங்கள் வரலாறு.
தேவதாசி என்பது உங்கள் மதமும் உங்கள் முன்னோர்களும் தெய்வீகம் என்று கொண்டாடியது தானே. தேவதாசி முறையை ஒழிக்க டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் போராடியபோது அதை ஒழிக்கக் கூடாது, அது புண்ணியம் தேவதாசிகள் சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்று வாதாடியவர் தானே உங்கள் சத்யமூர்த்தி அய்யர். தேவதாசி முறை உன்னதமானது உயர்வானது என்று உங்கள் சொர்ணமால்யா பேசியது நினைவில் இல்லையா. இப்போது மட்டுமென்ன அந்த வார்த்தையைக் கேட்டு அப்படி ஒரு கோபம்.
இவ்வளவு காலமாய் நீங்கள் பற்ற வைத்த நெருப்பு இப்போது புகைய ஆரம்பித்திருக்கிறது. போராட்டம் நடத்த வீதிக்கு வந்து இருக்கிறீர்கள் கூட்டத்தோடு, இதுவரை எந்தப் போராட்டத்திலுமே கலந்து கொள்ளாத நீங்கள்.
மறுபடியும் ஆரம்பமாயிருக்கிறது ஆரிய திராவிடப் போர். ஆரியர்கள் வென்ற காலமெல்லாம் மலையேறிப் போய் விட்டது. இது எங்கள் காலம் திராவிடர்களின் காலம் அதை நினைவில் கொள்ளுங்கள்.
இப்படிக்கு,
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...