சிரியாவின் குழந்தைகளே - உங்கள் புன்னகையைப் பறித்தது யார் ?
மணல்வீடு கட்டி விளையாட வேண்டிய நீ
மரித்துக்கிடக்கிறாய் மணல் வெளியில்
மரித்துக்கிடக்கிறாய் மணல் வெளியில்
தீவிரவாதத்தின் தீராப்பசிக்கு
உணவாகிப் போனாய் நீ
உணவாகிப் போனாய் நீ
பிறந்த நாட்டின் உள்நாட்டுப்போர் பற்றி
ஏதேனும் தெரியுமா உனக்கு
ஏதேனும் தெரியுமா உனக்கு
மரணம் என்ற சொல்லை உச்சரிக்க அறியுமா
உன் மழலை நாக்கு
உன் மழலை நாக்கு
வல்லாதிக்க நாடுகளின் ஆதிக்கத் திமிருக்கு
ஐயோ நீ பலியானாய்
ஐயோ நீ பலியானாய்
இந்தப் பிஞ்சுகளின் உயிர் பருக
எப்படித்தான் மனது வந்ததோ
கொடுமை கொடுமை
எப்படித்தான் மனது வந்ததோ
கொடுமை கொடுமை
உயிர் பிரியும் நேரத்தில் எப்படித் துடித்திருப்பாய்
நினைக்கும்போதே கண்ணில் நீர் நிறைகிறது
நினைக்கும்போதே கண்ணில் நீர் நிறைகிறது
நீ மரணித்து
எங்களைக் காட்டுமிராண்டிகள் எனச்
சொல்லாமல் சொல்லிவிட்டாய்
எங்களைக் காட்டுமிராண்டிகள் எனச்
சொல்லாமல் சொல்லிவிட்டாய்
மனிதகுலத்தின் மனிதநேயத்தின் மீது
காறி உமிழ்ந்துவிட்டாய்
காறி உமிழ்ந்துவிட்டாய்
செருப்பணிந்த உன் கால்களினால்
உலகத்தின் முகத்தில் ஓங்கி உதைத்துவிட்டாய்
உலகத்தின் முகத்தில் ஓங்கி உதைத்துவிட்டாய்
உனைக் காப்பாற்ற வக்கில்லாத
மனித சமூகமும் கடவுள்களும்
மண்ணோடு மண்ணாகப் போகட்டுமென்று
சாபமிட்டுவிடு என் செல்லமே.
மனித சமூகமும் கடவுள்களும்
மண்ணோடு மண்ணாகப் போகட்டுமென்று
சாபமிட்டுவிடு என் செல்லமே.
No comments:
Post a Comment