Thursday 15 March 2018

உங்கள் சாமிகளும் எமக்கு வேண்டாம் உங்கள் மதங்களும் எமக்கு வேண்டாம்

உங்கள் சாமிகளும் எமக்கு வேண்டாம்
உங்கள் மதங்களும் எமக்கு வேண்டாம்
பஞ்சமனென்றாய்
தாழ்ந்தவனென்றாய்
சூத்திரனென்றாய்
இழிபிறப்பென்றாய்
தொட்டால் தீட்டென்றாய்
பார்த்தாலே பாவமென்றாய்
ஏகலைவன் விரலொடித்தாய்
சம்புகனின் தலை பறித்தாய்
தீண்டத்தகாதவனென்றாய்
சேரியிலே வாழவைத்தாய்
வெட்டுவேன் நாக்கையென்றாய்
ஈயம் காதில் ஊற்றுவேனென்றாய்
தகுதி திறமை இல்லையென்றாய்
இடஒதுக்கீடு எதற்கென்றாய்
காதலிக்கக் கூடாதென்றாய்
கழுத்தறுத்துக் கதற வைத்தாய்
உயிர் பறித்தாய்
உடைமைகளை எரித்தாய்
மலம் தின்ன வைத்தாய்
சிறுநீர் பருக வைத்தாய்
கோயிலுக்குள் வராதேயென்றாய்
தேர் இழுக்கத் தடையென்றாய்
நீ பற்ற வைத்த சாதித்தீயில்
கொழுந்துவிட்டு எரிந்தன குடிசைகள்
நாங்கள் கதறியழும்போது
ஏனென்று கேட்காத
உங்கள் சாமிகளும் எமக்கு வேண்டாம்
உங்கள் மதங்களும் எமக்கு வேண்டாம்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...