அனிதா
நீயொரு பெருநெருப்பு
நீயொரு பெருநெருப்பு
ஆயிரமாயிரம் தீப்பந்தங்களை
ஏற்றி வைத்த தீச்சுடர் நீ
ஏற்றி வைத்த தீச்சுடர் நீ
நீ
மனுநீதியால் மரித்துப்போன
சமூகநீதி
மனுநீதியால் மரித்துப்போன
சமூகநீதி
கோழையல்ல
நீ
போராளி
நீ
போராளி
இறந்தும் போராட
போராளிகளால் மட்டுமே முடியும்
தீலிபனையும் உன்னையும் போல
போராளிகளால் மட்டுமே முடியும்
தீலிபனையும் உன்னையும் போல
எழுதியோ பேசியோ
சொல்ல முடியாத ஏதோவொன்றை
மறைந்து போய் எங்களுக்குச் சொல்லிவிட்டாய்
சொல்ல முடியாத ஏதோவொன்றை
மறைந்து போய் எங்களுக்குச் சொல்லிவிட்டாய்
மாட்டிற்காகக் கூடிய நாங்கள்
நீட்டிற்காகக் கூடாமல் போனோமோ
நீட்டிற்காகக் கூடாமல் போனோமோ
திரையரங்க இருட்டிற்குள்
மண்டியிட்டு மதியிழந்தோமோ
மண்டியிட்டு மதியிழந்தோமோ
தாயே எங்களை மன்னித்து விடு
உன்னை இழந்ததற்காக
நாங்கள் கண்ணீர் விடுகின்றோம்
உன்னை இழந்ததற்காக
நாங்கள் கண்ணீர் விடுகின்றோம்
நீ ஏற்றி வைத்த பெருநெருப்பை
எம் நெஞ்சங்களில் ஏந்துகின்றோம்
மனுநீதி அழித்து
சமூகநீதி காப்பதற்காய்
எம் நெஞ்சங்களில் ஏந்துகின்றோம்
மனுநீதி அழித்து
சமூகநீதி காப்பதற்காய்
No comments:
Post a Comment