Thursday 15 March 2018

லோக குரு

லோக குரு என்றார்கள்
நானும் நம்பினேன்
வாழும் தெய்வம் என்றார்கள்
நானும் நம்பினேன்
அனைத்தும் அவரென்றார்கள்
நானும் நம்பினேன்
முதுமை வந்தாலும்
மரணம் வராதென
நானும் நம்பினேன்
தேவலோக விமானம் வரும்
அதில் தேவர்கள் இருப்பர்
கூடவே தேவதைகளும் இருப்பர்
கழுத்தில் மாலை சூட்டி
பூ மழை பொழிந்து
தேவலோகம் அழைத்துச் செல்வர்
என்றெல்லாம் நம்பினேன்
ஆனால்
எப்போதும்
நோய் வந்தே சாகின்றன
கடவுளின் அவதாரங்களும்
இறைத் தூதர்களும்
வாழும் தெய்வங்களும்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...