Monday 6 August 2018

கமலகாசன் அவர்களே....

சாதியை ஒழிக்க பள்ளி விண்ணப்பப் படிவத்தில் சாதி மதப்பெயரை குறிப்பிடாதீர்கள்,சாதிச்சான்றிதழ் பெறுவதை கைவிடுங்கள். – கமலகாசன்
------------------------------------------------------------------------------------------------
கமலகாசன் அவர்களே....
நீங்கள் என்னதான் மறைத்தாலும் வெளியில் வந்து குதித்து ஆடும் உங்கள் உச்சிக் குடுமியை எதுவும் செய்ய முடியாது உங்களால். உங்கள் பூணூலை கழற்றிவிட்டு நீங்கள் வேண்டுமானால் முற்போக்கு வேடம் போடலாம் ஆனால் உங்கள் உடல் முழுவதும் நரம்புகளாக ஓடும் பூணூல்களை மறைக்க முடியாது உங்களால். பள்ளிகளில் சாதி மதப்பெயர் குறிப்பிடப்படுவதும் சாதிச்சான்றிதழ் பெறப்படுவதும் எதனால் என்று தெரியாத அளவிற்கு நீங்கள் ஒன்றும் ஒன்றுமே தெரியாத அப்பாவி இல்லை.உங்களை ஒன்றுமே தெரியாத அப்பாவி என்று நம்பி ஏமாறும் அளவிற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
பள்ளிகளில் குறிப்பிடப்படும் சாதி மதப்பெயர்களாலும் சாதிச்சான்றிதழாலும் தான் சாதி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றதொரு பொய்யான தோற்றத்தை நிறுவ முயலுகிறீர்கள்.நால்வகை வர்ணத்தைச் சொல்லி சூத்திரன் என்று எங்களை அடிமைப்படுத்தி எங்கள் கல்வி உரிமையை பறித்து காலம் காலமாக உங்கள் கூட்டம் செய்த கொடுமையில் இருந்து எங்களை மீட்டு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உயர் நிலையை அடைவதற்கு செய்யப்பட்ட ஏற்பாடே இடஒதுக்கீடு,உலக மகா அறிவாளியான உங்களுக்கு அது தெரியாதது அல்ல. இருந்த போதும் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே உங்கள் கூட்டத்தாரின் நோக்கம் அதை நேரடியாகச் சொல்ல துணிவில்லாமல் உங்கள் பசப்பு மொழிகளால் நாக்கில் தேன் தடவி இடஒதுக்கீட்டையும் அதனால் கிடைக்கும் பலனையும் கைவிடுங்கள் என்று எங்களிடம் கோரிக்கை வைக்கிறீர்கள்.
நாங்களாகவா விரும்பி ஏற்றுக்கொண்டோம் சாதிகளை உங்கள் கூட்டம் திணித்தது தானே இது. எங்கள் கல்வி உரிமையை நீங்கள் தடுக்காது இருந்திருந்தால் இடஒதுக்கீடு என்பதே எங்களுக்கு தேவை இல்லாததாக இருந்திருக்கும்.நாங்கள் உயர் கல்வி கற்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நாங்கள் உயர் பதவிகளில் இருப்பது உங்கள் கண்களை உறுத்துகிறது போலும்.சாதியக் கட்டமைப்பு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணமே பார்ப்பனீயம் தான், பார்ப்பனீயம் ஒழிந்தால் தான் சாதிகள் ஒழியும் இதைச் சொல்வதற்கு அறிவு நாணயம் இருக்கிறதா உங்களிடம்.
பூணூல்களை அறுத்து எறியுங்கள், அனைவரும் அர்ச்சகராக அனுமதியுங்கள் எல்லோரையும் உங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உங்கள் கூட்டத்திடம் சொல்வதற்கு துணிச்சல் இருக்கிறதா உங்களிடம். இதை முதலில் செய்து சாதியை ஒழிக்கச் சொல்லுங்கள் உங்கள் கூட்டத்திடம். நால்வர்ணத்தையும் நாலாயிரம் சாதிகளையும் உருவாக்கிய உங்கள் கூட்டத்தில் இருந்து சாதி ஒழிப்பை ஆரம்பியுங்கள் அதுவே நியாயமும் நேர்மையும் ஆகும்.
கமலகாசன் அவர்களே, நீங்கள் முற்போக்குப் பார்ப்பான் பாரதியின் புதிய பதிப்பு தான் என்பது எங்களுக்குத் தெரியும். உங்களை எல்லாம் எப்படிக் கையாள வேண்டுமென்று எங்களுக்கு ஈரோட்டுக் கிழவன் சொல்லித்தந்து விட்டுப் போயிருக்கிறார். வைதீகம் பேசும் பார்ப்பானைக் கூட நம்புவோம் ஆனால் உம்மைப் போன்ற முற்போக்கு பேசும் பார்ப்பானை நம்புவதற்கு நாங்கள் தயாராக இல்லை.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...