பள்ளிகளும் – பாதபூஜையும்
--------------------------------------------
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கி வரும் சூழலில் சில பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வு பெறவேண்டும் என்பதற்காக மாணவர்களைக் கொண்டு அவர்களின் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாதபூஜை நடைபெற்று வருகிறது. இந்த அர்த்தமற்ற சடங்குகளின் மூலமாக பள்ளி நிர்வாகம் மாணவர்களின் மனதில் விதைக்க நினைப்பது என்ன?
--------------------------------------------
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கி வரும் சூழலில் சில பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வு பெறவேண்டும் என்பதற்காக மாணவர்களைக் கொண்டு அவர்களின் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாதபூஜை நடைபெற்று வருகிறது. இந்த அர்த்தமற்ற சடங்குகளின் மூலமாக பள்ளி நிர்வாகம் மாணவர்களின் மனதில் விதைக்க நினைப்பது என்ன?
1) ஆசிரியர்களும் பெற்றோர்களும் மரியாதைக்குரியவர்கள் என்பதை மாற்றி வழிபாட்டுக்குரியவர்கள் என்ற எண்ணத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த முனைகிறார்களா?
2) பூஜை,சடங்கு,யாகம் இவற்றின் மூலம் உழைக்காமலேயே எளிதில் வெற்றி பெறலாம் என்ற மூடநம்பிகையை மாணவர்கள் மனதில் ஏற்படுத்த முயலுகிறார்களா?
3) அறிவியலையும் பகுத்தறிவையும் மதச்சார்பின்மையும் போதிக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் அதை விடுத்து ஒரு குறிப்பிட்ட மதம்சார்ந்த அர்த்தமற்ற சடங்குகளை வலிந்து திணிப்பது, மாணவர்கள் மனதில் மதமும் மதம்சார்ந்த சடங்குகளும் மிகவும் புனிதமானது என்ற முட்டாள்த் தனத்தை புகுத்துவதற்கு செய்யப்படும் முயற்சியா?
க.ம.மணிவண்ணன்
No comments:
Post a Comment