Monday 25 February 2019

புண்படுத்தி விட்டதா ?!

புண்படுத்தி விட்டதா ?!
------------------------------------
சம்பூகன் ஏகலைவன்......
கல்வி பறித்த உங்களை
வெமுலா வரைந்த ஓவியம்
புண்படுத்தி விட்டதா ?!
ஆசிபா நந்தினி......
கொன்றொழித்த உங்களை
அனிதா வரைந்த ஓவியம்
புண்படுத்தி விட்டதா ?!
கௌரிலங்கேஷ் கல்புர்கி......
உயிர் குடித்த உங்களை
அண்ணல் வரைந்த ஓவியம்
புண்படுத்தி விட்டதா ?!
ராஜாக்கள் சேகர்கள்......
பார்பனத்திமிர் பிடித்த உங்களை
பெரியார் வரைந்த ஓவியம்
புண்படுத்தி விட்டதா ?!
புண்பட்ட மனதோடு வாழ்ந்து தொலையாதே
ஆகட்டும் சீக்கிரம் இப்போதே செத்துப் போ.
க.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...