Monday 25 February 2019

மனு (அ)தர்மம் - சில வரலாற்று உண்மைகள்

மனு (அ)தர்மம் - சில வரலாற்று உண்மைகள்
----------------------------------------------------------------------
1) மனுதர்மம் தான், வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் 1772 ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் சட்டமாகவே இருந்தது. கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களுக்கு மனுதர்மத்தின் அடிப்படையிலேயே நீதிமன்றங்களில் தண்டனைகள் வழங்கப்பட்டன. லண்டனில் இருந்த உச்சநீதிமன்றமான ‘பிரிவி கவுன்சில்’ வரை இந்தியர்களின் வழக்கில் இதுதான் பின்பற்றப்பட்டது என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?
2) ‘பிராமணன்’ கொலை செய்தால், உச்சிக் குடுமியிலிருந்து, மயிரை மட்டும் வெட்டினால் போதும். அதுவே ‘சூத்திரன்’ கொலை செய்தால் தலையையே வெட்ட வேண்டும் என்று வெள்ளைக்கார நீதிபதிகளுக்கு மனுதர்மத்திலிருநது் எடுத்துக்கூற நீதிமன்றங்களிலேயே பார்ப்பனர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள் என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?
3) மனுதர்மத்தை நீதிபதிகளே நேரடியாக அறிந்திட 1801 இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கமே ஹென்றி தாமஸ் கோல் புரூச் என்பவரை நியமித்து, ‘மனுதர்மத்தை’ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
4) 1860 ஆம் ஆண்டில்தான் கிரிமினல் குற்றங்களுக்கு மனுதர்ம அடிப்படையில் தண்டனை வழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால், குடும்பம், மதம், வாரிசுரிமை, சாதி, சொத்துப் பிரச்சினை போன்ற சிவில் வழக்குகளில் ‘மனுதர்ம’த்தின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட்டன என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
5) சுதந்திரத்துக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டு அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகுதான் ‘மனுதர்மத்துக்கு பதிலாக சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் முறை வந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
6) மனுதர்மமே காலம் காலமாக சட்டமாக இருந்த காரணத்தினால்தான் சூத்திரர்களான தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுததப்பட்ட மக்களும் கல்வி மறுக்கப்பட்டு படிக்காதவர்களாக தற்குறிகளாக இருந்தனர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
7) ‘மனுதர்மம்’ சட்டப்படி இன்னும் தடை செய்யப்படவில்லை. அரசியல் சட்டத்தில் இந்துக்களுக்கான சட்டங்களில் இந்த ‘மனுதர்மம்’ தான் மூல நூலாக ஏற்கப்பட்டுள்ளது. நமது சமுதாயத் தலைவர்களான தந்தை பெரியாரும்(டிசம்பர் 4, 1927), அண்ணல் அம்பேத்கரும்(டிசம்பர் 25, 1927), இந்த மனுதர்மத்தை எதிர்த்து - எரித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
‘எரிந்து பொசுங்கட்டும் மனு(அ)தர்மம்’
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...