Monday 25 February 2019

“தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்”

நமது தமிழ்ப் புத்தாண்டு தைத் திங்களில் மிதமான பனியும் மிதமான வெயிலும் நிலவும் இதமான காலத்தில் தொடங்குகிறது, நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளுக்குத் தான் கொளுத்தும் வெயில் காலமாம் சித்திரையில் ஆண்டு தொடங்கும் போலிருக்கிறது. நமது புத்தாண்டு எந்தவித புராண ஆபாசங்களை அடிப்படையாக கொண்டதல்ல, உலகத்திற்கு அறத்தைச் சொல்லித்தந்த திருவள்ளுவரின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது.
இந்த நாள் தமிழர் திருநாள், காலமெல்லாம் உழைத்த உழைப்பினால் விளைந்த வெற்றியை அறுவடை செய்து சர்க்கரைப் பொங்கலும் கரும்புமாய் இனிப்போடு கொண்டாடி மகிழும் நாள், இயற்கையை போற்றும் நாள். இரண்டாம் நாள், உதவி புரிந்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாள் மட்டுமல்ல வள்ளுவனின் அறிவைப் போற்றும் திருவள்ளுவர் திருநாள். மூன்றாம் நாள் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் உறவையும் நட்பையும் பேணுகின்ற நாள்.
நாடு,இன,மொழி,மத வேறுபாடின்றி எல்லோரும் கொண்டாடத் தகுந்தது இந்தத் தமிழர் திருநாள், ஏனென்றால் எந்த மத மூடக்கருத்துகளுக்கும் தொடர்பில்லாதது இந்தத் திருநாள்.
உழைப்பையும் இயற்கையையும் போற்றுகின்ற, செய்நன்றி பாராட்டுகின்ற,அறிவையும் அன்பையும் கொண்டாடுகின்ற இந்தத் திருநாள் நமக்குச் சொந்தமானது என்ற திமிருடன் சொல்வோம் “தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்”.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...