Monday 25 February 2019

மொழிப்போர் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிப்போர் வீரர்களுக்கு வீர வணக்கம்

மொழிப்போர் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிப்போர் வீரர்களுக்கு வீர வணக்கம்.
-----------------------------------------------------------------------------------
1) 1937 - 38 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது,கிரிமினல் திருத்தச் சட்டத்தை போராட்ட வீரர்கள் மீது ராஜாஜி ஏவினார் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?
2) 1938 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அன்றைய முதலமைச்சர் ராஜாஜி வீட்டின் முன்பு அணி அணியாக மறியல் போராட்டம் நடத்தி கைதானார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
3) 1939 இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு கொண்டு சிறையிலே மரணமடைந்த மாவீரன் நடராசனை 'ஒரு படிப்பு வாசனை இல்லாத அரிஜன்' என்று சட்டசபையில் சாதியைச் சொல்லி கேலி பேசியவர் ராஜாஜி என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
4) 1939 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு கைதியாகவே மரணமடைந்த மாவீரன் நடராசனை முன்கூட்டியே விடுதலை செய்து விட்டதாகத் துணிந்து பொய் சொன்னவர் தான் ராஜாஜி என்பது உங்களுக்குத் தெரியுமா?
5) 1939 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குகொண்டு மாவீரன் நடராசனைத் தொடர்ந்து மாவீரன் தாளமுத்துவும் சிறையிலே மரணமடைந்தார், இவர்களை கூலிக்கு அமர்த்தப்பட்ட அடியாட்கள் என்று ராஜாஜி விமர்சித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
6) 1965 மொழிப்போரில் அய்யம்பாளையம் வீரப்பன், கீழப்பழவூர் சின்னச்சாமி, கீரனூர் முத்து, கோடம்பாக்கம் சிவலிங்கம், மாயவரம் சாரங்கபாணி, சத்தியமங்கலம் முத்து, விருகம்பாக்கம் அரங்கநாதன் போன்றோர் தங்கள் உடலில் தீவைத்துக் கொண்டு தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! என்று முழக்கமிட்டபடியே இறந்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
7) மொழிப் போராட்டத்தை அடக்க போராடிய மாணவர்கள் மீது பக்தவத்சலத்தின் காங்கிரசு அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதிலே பலர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாயினர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
8) தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிப் போர் வீரர்களை முதலமைச்சர் பக்தவத்சலம் வறுமையில் இறந்து போனார்கள் என்றும் வயிற்று வலியின் காரணமாக இறந்தார்கள் என்றும் காதல் தோல்வியாலும் கடன் தொல்லையாலும் இறந்தார்கள் என்றும் நாகூசாமல் சட்டப் பேரவையில் இழிவுபடுத்தினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...