Monday 25 February 2019

காந்தியின் படுகொலையும் - பார்ப்பனிய பாசிச இந்துத்துவ வெறியும்

காந்தியின் படுகொலையும் - பார்ப்பனிய பாசிச இந்துத்துவ வெறியும்
------------------------------------------------------------------------------------------------------------
1) விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை காந்தியின் படுகொலைதான் என்பதும், இந்த படுகொலையைச் செய்தவன் நாதுராம் கோட்சே என்ற பார்ப்பனன் என்பதும், இவன் இந்து மகாசபை மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டிலும் உறுப்பினராக இருந்தவன் என்பதும், இவனது எரியூட்டப்பட்ட உடலின் சாம்பல் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் வைத்து வணங்கப்படுகிறது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
2) காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு பார்ப்பனன் என்ற செய்தியை பார்ப்பன ஏடுகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து செய்திகள் வெளியிட்டன என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
3) காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சே பார்ப்பான் தனது படுகொலைக்கு ஆதரவாக கிருஷ்ணனின் கீதை உபதேசத்தை நீதிமன்றத்தில் எடுத்துக் காட்டினான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
4) காந்தி இறந்த 1948 ம் ஆண்டு ஜனவரி 30 ம் நாள் வெள்ளிக்கிழமை காலையிலேயே ஆர்எஸ்எஸின் வானொலியில் இன்று ஒரு நல்ல தகவல் வரும் என்று ஒரு செய்தி ஒலிபரப்பானது. அதன்பின் காந்தி கொல்லப்பட்ட பின் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?( காந்தியின் தனிச் செயலாளராக பணிபுரிந்த ப்யாரேலால் நையர் எழுதிய "மகாத்மா காந்தி: கடைசி கட்டம்" (பக்கம் எண் 70))
5) காந்தி படுகொலையில் முக்கியத் தொடர்புடைய சாவர்க்காரை அந்த வழக்கிலிருந்து விடுவிக்க முக்கிய காரணமாக இருந்ததும் ஆர்எஸ்எஸ் மீதிருந்த தடையை நீக்கியதும் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த படேல்தான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
6) 1994 ஜனவரி 28ஆம் தேதி, பிரண்ட்லைன் பத்திரிகைக்கு பேட்டியளித்த நாதுராம் கோட்ஸேவின் சகோதரர் கோபால் கோட்ஸேவிடம்(காந்தி படுகொலையில் சிறைத் தண்டனை பெற்றவர்) நாதுராமுடனான ஆர்எஸ்எஸ் தொடர்பை அத்வானி மறுத்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு அவர், 'அத்வானி கோழைத்தனமாக பேசுகிறார். 'சென்று காந்தியை கொன்றுவிட்டு வா' என்று நாதுராமுக்கு ஆர்.எஸ்.எஸ் உத்தரவிடவில்லை என்று அவர் கூறுகிறாரா?' நாதுராமுக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் எதவித தொடர்பும் இல்லை என்று மறுத்துவிடமுடியாது. ஆனால் இந்து மகாசபை நாதுராமுடனான தொடர்பை மறுக்கவில்லை. நாதுராம் 1944ஆம் ஆண்டிலேயே இந்து மகாசபைக்கு வேலை செய்ய தொடங்கிவிட்டார்.'' என்று பதிலளித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
7) 2016 செப்டம்பர் எட்டாம் தேதியன்று எகனாமிக் டைம்ஸிற்கு பேட்டியளித்த கோட்ஸேவின் குடும்ப உறுப்பினர்கள், "கோட்ஸே ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு ஒருபோதும் விலகவுமில்லை அங்கிருந்து வெளியேற்றப்படவும் இல்லை" என்று கூறினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
8) ராம ராஜ்ஜியத்தையும் வர்ணாசிரமத்தையும் ஆதரித்து வந்த காந்தியிடம் ஏற்பட்ட சிறு மனமாற்றத்தை தாங்க முடியாமலேயே அவரை பார்ப்பன பாசிச இந்துத்துவ மதவெறி கொன்று விட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
9) பார்ப்பனருக்கு சம்பந்தியாகவே இருந்தாலும் (காந்தி ராஜாஜியின் சம்பந்தி) தனக்கு ஒத்துவராவிட்டால் அவர்களை பார்ப்பனிய பாசிச வெறி கொன்று விடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
10) தங்களை எதிர்த்த காந்தியை ஆங்கிலேயர்கள் உயிருடன் வைத்திருந்தனர் என்பதும் தங்களை காந்தி எதிர்ப்பார் என்று கருதியதாலேயே பார்ப்பனிய இந்துத்துவ பாசிச வெறி அவரைக் கொன்றது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
11) காந்தியை கொல்ல முயன்ற பார்ப்பன பாசிச இந்துத்துவ வெறி 5 முறை முயன்று தோல்வி அடைந்து 6 வது முயற்சியில் அவரைக் கொன்று விட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
12) காந்தி சுடப்பட்டபோது அவர் ஹேராம் என்று சொல்லவேயில்லை என அந்நிகழ்வு நடந்தபோது அங்கு இருந்த காந்தியின் தனிச்செயலர் கல்யாணம்(தமிழகத்தை சேர்ந்தவர்) கூறியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் ஜனவரி 30
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...