தேவகுமாரன் இறங்கி வருவாரென அண்ணாந்து இருந்தபோதுதான், என் கடைசிக் கோவணமும் களவு போனது.
தயவுசெய்து விட்டுவிடு, என்னை நானே பார்த்துக் கொள்கிறேன்.
கொஞ்சம் வழி விடுங்கள், நான் வேகமாகச் செல்ல வேண்டும்.
கதவை மூடிக்கொண்டு உள்ளே என்ன வேலை.
இல்லை வேண்டாம், நான் மிகவும் பயந்த சுபாவம்.
----------------------------------------
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை கைவிடுவதுமில்லை.தயவுசெய்து விட்டுவிடு, என்னை நானே பார்த்துக் கொள்கிறேன்.
-----------------------------------------
நல்ல மேய்ப்பனின் ஆடுகள் எல்லாம் குழம்புச் சட்டியில் வெந்து கொண்டிருக்கின்றன.
--------------------------------------------
என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்.கொஞ்சம் வழி விடுங்கள், நான் வேகமாகச் செல்ல வேண்டும்.
---------------------------------------------
தட்டுங்கள் திறக்கப்படும்.கதவை மூடிக்கொண்டு உள்ளே என்ன வேலை.
-------------------------------------------------
உன்னுடன் இருந்து நான் செய்யும் காரியங்கள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும்.இல்லை வேண்டாம், நான் மிகவும் பயந்த சுபாவம்.
-------------------------------------------
தோழர் இயேசு, மீண்டும் இங்கு வரும்போது எந்த ஜாதியில் சேருவீர்கள்?
No comments:
Post a Comment