Tuesday 1 January 2019

என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்

என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்
---------------------------------------------------------------
நன்றி மறந்தவர்களே ஓராயிரம் முறை கேளுங்கள் என்ன செய்து கிழித்துவிட்டார் பெரியார். நாம் படித்ததும் படிப்பதும் இடஒதுக்கீட்டாலே வேலை பெற்றதும் பெறப்போவதும் இடஒதுக்கீட்டாலே. இடஒதுக்கீடு கிடைத்தது யாராலே அது பகுத்தறிவுப் பகலவனாம் பெரியாராலே. புதிய அரசியல் சட்டத்தில் வகுப்புவாரி இடஒதுக்கீடு ஒழிக்கப்பட்டது. பெரியாரல் போராட்டங்கள் நடத்தப்பட்டது, இடஓதுக்கீட்டீற்காக முதன்முதலாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. ஆனால் நாம் நன்றி மறந்து சத்தம் போட்டு கேட்கிறோம் என்ன செய்து கிழித்துவிட்டார் பெரியார் என்று.
முதல்வராக ராஜாஜி பதவி ஏறினார், பதவியேற்றதும் 6000 பள்ளிகளை இழுத்துமூடினார். குலக்கல்வியை புகுத்துவதற்கு திட்டமிட்டார். அவரவர் சாதித் தொழிலை பள்ளிகளில் படிக்க வேண்டுமென உத்தரவிட்டார். குலக்கல்வி எல்லோராலும் எதிர்க்கப்பட்டது மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. போராட்டங்களைப் பெரியார் வழிநடத்தினார்.அதனைக்கண்டு ராஜாஜி நடுநடுங்கினார்.போராட்டங்களை அரசு ஒடுக்க நினைத்தது அதனால் போராளிகளை அது கைது செய்தது. துப்பாக்கிச் சூடு கூட நடத்தப்பட்டது போராளிகள் உயிர் அங்கே பறிக்கப்பட்டது, தோழர்களின் உடல் முழுதும் காயமுற்றது பல பேரின் கைகால் அங்கே பறிபோனது.போராட்டம் மிகவும் தீவிரமானது ராஜாஜிக்கு அது பெரிய கலக்கமானது. உடல் நலம் சரியில்லையென ராஜாஜி பதவி விலகினார் காமராசர் முதல்வராக பதவி ஏறினார்.குலக்கல்வித் திட்டம் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது பல உயிர்களைப் பலிகொடுத்துத்தான் குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது. வரலாறு தெரியாத வசவாளர்களே சத்தம் போட்டு கேளுங்கள் பெரியார் என்ன செய்து கிழித்துவிட்டார் என்று.
க.ம.மணிவண்ணன்



No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...