அனிதா
நீயொரு பெருநெருப்பு ஆயிரமாயிரம் தீப்பந்தங்களை ஏற்றி வைத்த தீச்சுடர் நீ நீ மனுநீதியால் மரித்துப்போன சமூகநீதி கோழையல்ல நீ போராளி இறந்தும் போராட போராளிகளால் மட்டுமே முடியும் தீலிபனையும் உன்னையும் போல எழுதியோ பேசியோ சொல்ல முடியாத ஏதோவொன்றை மறைந்து போய் எங்களுக்குச் சொல்லிவிட்டாய் மாட்டிற்காகக் கூடிய நாங்கள் நீட்டிற்காகக் கூடாமல் போனோமோ திரையரங்க இருட்டிற்குள் மண்டியிட்டு மதியிழந்தோமோ தாயே எங்களை மன்னித்து விடு உன்னை இழந்ததற்காக நாங்கள் கண்ணீர் விடுகின்றோம் நீ ஏற்றி வைத்த பெருநெருப்பை எம் நெஞ்சங்களில் ஏந்துகின்றோம் மனுநீதி அழித்து சமூகநீதி காப்பதற்காய் |
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு - தந்தை பெரியார் ---- மனிதநேயம் தழைக்கட்டும்
Saturday, 7 October 2017
அனிதா நீயொரு பெருநெருப்பு
Subscribe to:
Post Comments (Atom)
குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே
குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...
-
நான் விரும்பும் சமூகம் எதுவென்று தெரியுமா உங்களுக்கு? அது தந்தைப் பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் காண விரும்பிய சமூகநீதிச் சமூகம், காரல் ம...
-
ஜாதி வெறியும் ஆணவப்படுகொலைகளும் -------------------------------------------------------------------- தெலங்கானாவில் ஒரு ஆணவப் படுகொலை நடந்த...
-
அன்பான உறவுகளே நான் சில மதங்களுக்கு முன்னால் சொன்ன ஆமைக்கதை, ஆஸ்திரேலியா கப்பலில் வடை சுட்ட கதைகளை கேட்டு கைதட்டி விசிலடித்து சில்லறையை சி...
No comments:
Post a Comment