Saturday 7 October 2017

அனிதா நீயொரு பெருநெருப்பு

அனிதா
நீயொரு பெருநெருப்பு

ஆயிரமாயிரம் தீப்பந்தங்களை
ஏற்றி வைத்த தீச்சுடர் நீ

நீ
மனுநீதியால் மரித்துப்போன
சமூகநீதி

கோழையல்ல
நீ
போராளி

இறந்தும் போராட
போராளிகளால் மட்டுமே முடியும்
தீலிபனையும் உன்னையும் போல

எழுதியோ பேசியோ
சொல்ல முடியாத ஏதோவொன்றை
மறைந்து போய் எங்களுக்குச் சொல்லிவிட்டாய்

மாட்டிற்காகக் கூடிய நாங்கள்
நீட்டிற்காகக் கூடாமல் போனோமோ

திரையரங்க இருட்டிற்குள்
மண்டியிட்டு மதியிழந்தோமோ

தாயே எங்களை மன்னித்து விடு
உன்னை இழந்ததற்காக
நாங்கள் கண்ணீர் விடுகின்றோம்

நீ ஏற்றி வைத்த பெருநெருப்பை
எம் நெஞ்சங்களில் ஏந்துகின்றோம்
மனுநீதி அழித்து
சமூகநீதி காப்பதற்காய்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...