Monday 9 October 2017

வெளிநாட்டு வாழ்க்கை

பத்து ஆண்டு வெளிநாட்டில் இருந்து விட்டு
ஊருக்கு வந்து விட்டவனைப் பார்த்து
சொல்லி வைத்தாற்போல் 
எல்லோரும் கேட்கிறார்கள்
ஏன் வந்துட்டிங்க
திரும்ப போகலையா என்று
எல்லோரையும் விட்டுவிட்டு
நீங்களும்
இரண்டு ஆண்டுகள் போய்
வெளிநாட்டில் இருந்தால் தெரியும்
ஏன் நாங்கள் ஊருக்கே வந்து விட்டோமென்று.


ஊருக்கு வந்து
என்ன செய்வது என்று
முடிவெடுக்க முடியாத நிலையிலேயே
தொடர்கிறது வெளிநாட்டு வாழ்க்கை.


இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை
இரண்டு மாத விடுப்பில்
வெளிநாட்டிலிருந்து வருபவனை
எரிச்சலூட்டும் கேள்வி
திரும்ப எப்ப பயணம்?

வெளிநாடு போக
பணம் தந்து அனுப்பி வைப்பவர்கள்
உள்நாட்டிலேயே 
தொழில் செய்கிறேன் என்றால்
பணம் தருவதில்லை

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...