Monday 9 October 2017

கவிதைகள்

தினமும்
வாசலுக்கு வந்து
சாப்பிட்டுப் போகும்
சின்ன நாய்க்குட்டி
அடிபட்டு இறந்து போயிற்றாம்
தோத்தோ தோத்தோ என்று கேட்கும்
என் இரண்டு வயது மகனிடம்
எப்படிச் சொல்லிப் புரியவைப்பேன்
அது இறந்து போன சோகத்தை.

நீங்கள் 
கவிதை எழுதுவீர்களாமே என்று 
சந்தேகத்தோடு கேட்டார்கள்
வதந்திகளை 
நம்பாதீர்கள் என்று
கண்டிப்பாகச்
சொல்லிவிட்டேன்.


No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...