Monday 9 October 2017

குழந்தைகள்

அறிவாளிகளும்
பலசாலிகளும்
எப்படியும் தோற்றுப்போகிறார்கள்
தங்கள் குழந்தைகளிடம்.

விடை தெரியாத
குழந்தைகளின் கேள்விகளுக்கு
வாயை மூடு என்று சொல்வது மட்டுமே
தப்பிக்கும் வழியாக இருக்கிறது.

பெற்றோரை முட்டாளாக்கும்
கேள்விகளுடன் தான்
எல்லாக் குழந்தைகளும்
அலைகின்றன.

அம்மாவிடம் அடி வாங்கி
அழும் குழந்தைகள் எல்லாமே
அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டுதான்
அழுகின்றன.

தைரியசாலிகளையும்
பயந்தாங்கொள்ளி ஆக்கி விடுகிறது
குழந்தைகளின்
உடல் நலக்குறைவு.

எந்த முரட்டு அப்பாக்களின்
பாச்சாவும் பலிப்பதில்லை
தன் குழந்தைகளிடம் மட்டும்.

எல்லாக் குழந்தைகளும்
ஏதுமில்லாமல் தான் பிறக்கின்றன
இப்போது வரை

திருநீறு பூசாமல்
சிலுவை அணியாமல்
குல்லா போடாமல்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...