அறிவாளிகளும்
பலசாலிகளும்
எப்படியும் தோற்றுப்போகிறார்கள்
தங்கள் குழந்தைகளிடம்.
பலசாலிகளும்
எப்படியும் தோற்றுப்போகிறார்கள்
தங்கள் குழந்தைகளிடம்.
விடை தெரியாத
குழந்தைகளின் கேள்விகளுக்கு
வாயை மூடு என்று சொல்வது மட்டுமே
தப்பிக்கும் வழியாக இருக்கிறது.
குழந்தைகளின் கேள்விகளுக்கு
வாயை மூடு என்று சொல்வது மட்டுமே
தப்பிக்கும் வழியாக இருக்கிறது.
பெற்றோரை முட்டாளாக்கும்
கேள்விகளுடன் தான்
எல்லாக் குழந்தைகளும்
அலைகின்றன.
கேள்விகளுடன் தான்
எல்லாக் குழந்தைகளும்
அலைகின்றன.
அம்மாவிடம் அடி வாங்கி
அழும் குழந்தைகள் எல்லாமே
அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டுதான்
அழுகின்றன.
அழும் குழந்தைகள் எல்லாமே
அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டுதான்
அழுகின்றன.
தைரியசாலிகளையும்
பயந்தாங்கொள்ளி ஆக்கி விடுகிறது
குழந்தைகளின்
உடல் நலக்குறைவு.
பயந்தாங்கொள்ளி ஆக்கி விடுகிறது
குழந்தைகளின்
உடல் நலக்குறைவு.
எந்த முரட்டு அப்பாக்களின்
பாச்சாவும் பலிப்பதில்லை
தன் குழந்தைகளிடம் மட்டும்.
பாச்சாவும் பலிப்பதில்லை
தன் குழந்தைகளிடம் மட்டும்.
எல்லாக் குழந்தைகளும்
ஏதுமில்லாமல் தான் பிறக்கின்றன
இப்போது வரை
திருநீறு பூசாமல்
சிலுவை அணியாமல்
குல்லா போடாமல்.
ஏதுமில்லாமல் தான் பிறக்கின்றன
இப்போது வரை
திருநீறு பூசாமல்
சிலுவை அணியாமல்
குல்லா போடாமல்.
No comments:
Post a Comment