பெரிய நிறுவனங்களிலும்
உடைந்து போன நாற்காலிகளே
கொடுக்கப்படுகின்றன
வாட்ச்மேன்கள் அமருவதற்கு.
ஏடிஎம்மில்
பணமெடுக்கத் தெரியாதவர்களும்
அதை விரும்புகிறார்கள்
ஏன் என்றால்
அவை அவர்களை
அவமானப்படுத்துவதில்லை
திட்டுவதில்லை
அலட்சியம் செய்வதில்லை
அலைக்கழிப்பதில்லை.
ஒரு ரூபாய்காக
நடத்துனரிடம் சண்டை போடும்
இந்த பாழாய்ப்போன மனது
கோடி கோடியாக
கொள்ளை அடிப்பவர்களிடம் மட்டும்
அமைதியாகி விடுகிறது.
நகைக்கடைகளில்
கேட்டதை அப்படியே
கொடுத்துவிட்டு வரும்
இந்த பாழாய்ப்போன மனது
தெருவில் கீரை விற்பவரிடம் மட்டும்
பேரம் பேசுகிறது.
உடைந்து போன நாற்காலிகளே
கொடுக்கப்படுகின்றன
வாட்ச்மேன்கள் அமருவதற்கு.
ஏடிஎம்மில்
பணமெடுக்கத் தெரியாதவர்களும்
அதை விரும்புகிறார்கள்
ஏன் என்றால்
அவை அவர்களை
அவமானப்படுத்துவதில்லை
திட்டுவதில்லை
அலட்சியம் செய்வதில்லை
அலைக்கழிப்பதில்லை.
ஒரு ரூபாய்காக
நடத்துனரிடம் சண்டை போடும்
இந்த பாழாய்ப்போன மனது
கோடி கோடியாக
கொள்ளை அடிப்பவர்களிடம் மட்டும்
அமைதியாகி விடுகிறது.
நகைக்கடைகளில்
கேட்டதை அப்படியே
கொடுத்துவிட்டு வரும்
இந்த பாழாய்ப்போன மனது
தெருவில் கீரை விற்பவரிடம் மட்டும்
பேரம் பேசுகிறது.
No comments:
Post a Comment