Monday 9 October 2017

கவிதைகள்

பெரிய நிறுவனங்களிலும்
உடைந்து போன நாற்காலிகளே 
கொடுக்கப்படுகின்றன
வாட்ச்மேன்கள் அமருவதற்கு.

ஏடிஎம்மில் 
பணமெடுக்கத் தெரியாதவர்களும்
அதை விரும்புகிறார்கள்
ஏன் என்றால்
அவை அவர்களை
அவமானப்படுத்துவதில்லை
திட்டுவதில்லை
அலட்சியம் செய்வதில்லை
அலைக்கழிப்பதில்லை.

ஒரு ரூபாய்காக
நடத்துனரிடம் சண்டை போடும்
இந்த பாழாய்ப்போன மனது
கோடி கோடியாக
கொள்ளை அடிப்பவர்களிடம் மட்டும்
அமைதியாகி விடுகிறது.

நகைக்கடைகளில்
கேட்டதை அப்படியே
கொடுத்துவிட்டு வரும்
இந்த பாழாய்ப்போன மனது
தெருவில் கீரை விற்பவரிடம் மட்டும்
பேரம் பேசுகிறது.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...