Saturday 7 October 2017

மழை

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

அமைந்திருக்கிறது 
எல்லோருக்கும்
உயர்ந்த நல் ஒழுக்கங்கள்

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

கேடும் செய்து
முகமறியா உறவுகளைத் தந்து
வாழவும் வைத்திருக்கிறது மழை

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு 
எல்லார்க்கும் பெய்யும் மழை

இங்கு எல்லோரும் 
நல்லவராய் இருப்பதால்தானோ
இவ்வளவு மழை

மாமழை போற்றுதும் 
மாமழை போற்றுதும்

மனிதனை நேசிக்கச்
சொல்லித் தந்ததற்காக

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...