நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
அமைந்திருக்கிறது
எல்லோருக்கும்
உயர்ந்த நல் ஒழுக்கங்கள்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
கேடும் செய்து
முகமறியா உறவுகளைத் தந்து
வாழவும் வைத்திருக்கிறது மழை
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
இங்கு எல்லோரும்
நல்லவராய் இருப்பதால்தானோ
இவ்வளவு மழை
மாமழை போற்றுதும்
மாமழை போற்றுதும்
மனிதனை நேசிக்கச்
சொல்லித் தந்ததற்காக
வான்இன்று அமையாது ஒழுக்கு
அமைந்திருக்கிறது
எல்லோருக்கும்
உயர்ந்த நல் ஒழுக்கங்கள்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
கேடும் செய்து
முகமறியா உறவுகளைத் தந்து
வாழவும் வைத்திருக்கிறது மழை
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
இங்கு எல்லோரும்
நல்லவராய் இருப்பதால்தானோ
இவ்வளவு மழை
மாமழை போற்றுதும்
மாமழை போற்றுதும்
மனிதனை நேசிக்கச்
சொல்லித் தந்ததற்காக
No comments:
Post a Comment