Saturday 7 October 2017

துளிப்பாக்கள்

தமிழிலில் எழுதப்பட்டதை 
வாசிக்கும்போது
எழுத்துப்பிழையிருந்தால்
கோபம் வருகிறது
இது ஒன்றும் மனநோய் இல்லையே

கருப்புச்சட்டையணிந்து வராதேயென்கிறாய்
என் தோலும் கருப்புதான்
இப்போது என்ன செய்வாய்

எல்லா மதங்களையும் சகித்துக்கொள்ள
எந்த மதத்தாலும் முடிவதில்லை
அது நாத்திகத்தால் மட்டும்தான் முடிகிறது

உன்னை விட்டு விலகுவதுமில்லை
கைவிடுவதுமில்லையென்றான் தேவகுமாரன்

நான் உறுதியாகச் சொல்லிவிட்டேன்
என்னை விட்டு விலகிவிடு
நானே என்னைப் பார்த்துக்கொள்கிறேனென்று

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...