எதற்காக குரைக்க வேண்டும்
என்பதை மறந்து போன நாய்கள்
தனது இருப்பை காட்டிக்கொள்வதற்காகக்
குரைக்கின்றன
தேட வேண்டும் என்பதற்காகவே
ஒளிந்து கொள்வதும்
ஒளிந்திருப்பது தெரிந்தும்
தெரியாததுபோல் தேடுவதும்
நன்றாகத்தான் இருக்கிறது
எங்குமே நிற்காத
ஒன் டூ ஒன் பேருந்துகள் கூட
ஓசி உணவு தரும் உணவக வாசலில்
பத்து நிமிடம்
நின்றுவிட்டுத்தான் போகிறது
எல்லா உணவுகளும்
ஆறியே இருக்கின்றன
இது
ஆரியபவனா? ஆறியபவனா?
என்பதை மறந்து போன நாய்கள்
தனது இருப்பை காட்டிக்கொள்வதற்காகக்
குரைக்கின்றன
தேட வேண்டும் என்பதற்காகவே
ஒளிந்து கொள்வதும்
ஒளிந்திருப்பது தெரிந்தும்
தெரியாததுபோல் தேடுவதும்
நன்றாகத்தான் இருக்கிறது
எங்குமே நிற்காத
ஒன் டூ ஒன் பேருந்துகள் கூட
ஓசி உணவு தரும் உணவக வாசலில்
பத்து நிமிடம்
நின்றுவிட்டுத்தான் போகிறது
எல்லா உணவுகளும்
ஆறியே இருக்கின்றன
இது
ஆரியபவனா? ஆறியபவனா?
முயலாமையால்
தோற்கிறது
முயல் ஆமையிடம்
தோற்கிறது
முயல் ஆமையிடம்
No comments:
Post a Comment