Saturday 7 October 2017

துளிப்பாக்கள்

எதற்காக குரைக்க வேண்டும்
என்பதை மறந்து போன நாய்கள்
தனது இருப்பை காட்டிக்கொள்வதற்காகக்
குரைக்கின்றன

தேட வேண்டும் என்பதற்காகவே
ஒளிந்து கொள்வதும்
ஒளிந்திருப்பது தெரிந்தும்
தெரியாததுபோல் தேடுவதும்
நன்றாகத்தான் இருக்கிறது

எங்குமே நிற்காத
ஒன் டூ ஒன் பேருந்துகள் கூட
ஓசி உணவு தரும் உணவக வாசலில்
பத்து நிமிடம்
நின்றுவிட்டுத்தான் போகிறது

எல்லா உணவுகளும் 
ஆறியே இருக்கின்றன
இது
ஆரியபவனா? ஆறியபவனா?

முயலாமையால்
தோற்கிறது
முயல் ஆமையிடம்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...