Saturday 7 October 2017

கவிதைகள்

என் மகளுக்குப் பரிசு 
கிடைக்கும்போது
திறமைக்காகவென
எண்ணுகிற மனசு
பிறருக்குக் கிடைக்கும்போது மட்டும்
அதைத் திறமையென
ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறது

நடந்து செல்லும்போது
யாரேனும்
கால் தவறி விழுந்து விட்டால்
வருத்தம் வருவதற்கு முன்பாகவே
சிரிப்பு வந்து தொலைகிறது

பந்திகளில் அமர்ந்து
சாப்பிடும்போது
பிடித்த உணவைத்
திரும்ப கேட்பதற்குச்
சங்கடப்பட்டு
ஆற்றாமையோடு
எழுந்து செல்கிறது மனது

முகநூலில் போட்ட பதிவிற்கு
ஒருவருமே லைக்
போடவில்லையென்றால்
தவியாய்த் தவிக்கும் மனது
சில வேளைகளில்
எல்லோரையும்
திட்ட வேறு செய்கிறது

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...