Saturday 7 October 2017

பெயர்

பெரியார் அம்பேத்கார்
மார்க்சு பகத்சிங் பிரபாகரன் போன்ற
சில பெயர்கள்
உச்சரிக்கப்படும்போதே
புரட்சியை விதைத்துவிடுகின்றன

வைத்தவர்களுக்கோ
வைக்கப்பட்டவர்களுக்கோ
அழைப்பவர்களுக்கோ
பொருள் புரியாமலேயே இருக்கின்றன
நிறைய பெயர்கள்

தமிழில் பெயர் வைப்பது
அதிசயமாகவோ 
இல்லையென்றால் 
கேலியாகவோதான் பார்க்கப்படுகிறது
தமிழ்நாட்டில்

பெற்றவர்களின் பெயராலும்
பிள்ளைகளின் பெயராலுமே
அறியப்படுகிறேன் சில நேரங்களில்

பெண்ணின்பெயருக்குப் பின்னால் 
ஒட்டியிருக்கும் ஆணின் பெயர்
எதற்காகவென
இதுவரை தெரியவில்லை

சில நேரங்களில்
பெயரைத் தொலைத்துவிட்டு வாழ
ஆசையாக இருக்கிறது

எங்கே போனாலும் 
கூடவே சுமந்து செல்ல வேண்டியிருக்கிறது
பெயரையும்

சாதி மதம் இனம் எதுவென்பதை
எப்படியோ சொல்லிவிடுகின்றன
பெயர்கள்

சிலருக்கு அடையாளமாகவும்
சிலருக்கு 
வெறும் பெயருக்காகவும் மட்டுமே இருக்கின்றன
பெயர்கள்


No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...