பயந்து ஓடுகிறேன்
கேள்விகளைக் கண்டு
கேட்கப்படப்போகும்
கேள்விகள் பற்றிய
அச்சத்துடனேயே செல்கிறேன்
எங்கு சென்றாலும்,
நன்கு படிக்காத மாணவனைப் போலவே.
கேள்விகள்,
அவமானப்படுத்துகின்றன
முட்டாளாக்குகின்றன
எரிச்சலூட்டி
கோபம் கொள்ள வைக்கின்றன.
கேட்க வேண்டுமென்பதற்காகவே
கேட்கப்படுகின்றன கேள்விகள்,
விடை தெரியாமல்
திணறி நிற்கையில்
தீர்வு ஏதும் சொல்லாமல்
மௌனமாகப் புன்னகைத்துவிட்டோ
சத்தமாகச் சிரித்து விட்டோ
சட்டென்று நகர்ந்து விடுகின்றன.
கேள்விகளே இல்லாத
இடமாய்ப் பார்த்து
தனித்திருக்கையில்
என்னிடம் கேட்கப்படும்
எனது கேள்விகள்
கவலை கொள்ள வைக்கின்றன
க.ம.மணிவண்ணன்
கேள்விகளைக் கண்டு
கேட்கப்படப்போகும்
கேள்விகள் பற்றிய
அச்சத்துடனேயே செல்கிறேன்
எங்கு சென்றாலும்,
நன்கு படிக்காத மாணவனைப் போலவே.
கேள்விகள்,
அவமானப்படுத்துகின்றன
முட்டாளாக்குகின்றன
எரிச்சலூட்டி
கோபம் கொள்ள வைக்கின்றன.
கேட்க வேண்டுமென்பதற்காகவே
கேட்கப்படுகின்றன கேள்விகள்,
விடை தெரியாமல்
திணறி நிற்கையில்
தீர்வு ஏதும் சொல்லாமல்
மௌனமாகப் புன்னகைத்துவிட்டோ
சத்தமாகச் சிரித்து விட்டோ
சட்டென்று நகர்ந்து விடுகின்றன.
கேள்விகளே இல்லாத
இடமாய்ப் பார்த்து
தனித்திருக்கையில்
என்னிடம் கேட்கப்படும்
எனது கேள்விகள்
கவலை கொள்ள வைக்கின்றன
க.ம.மணிவண்ணன்
No comments:
Post a Comment