Saturday 7 October 2017

துளிப்பாக்கள்

அடி தாங்க முடியாமல்
வலியால் கத்தினாலும்
திருப்பி அடிப்பதே இல்லை
கோவில்மணிகளும்
கணவனிடம் அடி வாங்கும்
மனைவிகளும்.

கணவன் 
மனைவியை அடிப்பது
கலாச்சாரமாகிவிட்ட சமூகத்தில்
மனைவி 
கணவனை அடிப்பது மட்டும்
எப்படியோ செய்தியாகிவிடுகிறது.

குழந்தைகளை 
நான் அடிப்பதில்லை என்று சொன்னால்
சிலர் பொய் என்கிறார்கள்
சிலர் அப்படியா என்று
ஆச்சரியப்படுகிறார்கள்.

மேலதிகாரியின் திட்டுக்கு
பூனையைப் போல்
பதுங்கும் மனது
குழந்தைகளை திட்டும்போது மட்டும்
புலி போல பாய்கிறது.

குழந்தைகளுக்கு
தமிழ்ப் பெயர் வைப்பது மட்டுமே
போதுமானதாகி விட்டது
தமிழ் உணர்வை வெளிப்படுத்த.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...