Monday 9 October 2017

எழுத்து

எழுதுவது எளிதாக வருகிறது
எனக்கு
பேசுவதைக் காட்டிலும்.

உண்மையை மட்டுமே
எழுதுகிற எனக்கு
பேசும்போது
அவ்வாறு முடிவதில்லை.

பிழையில்லாமல்
எழுதிவிட முடிகிறது
பேசும்போது
முடியவில்லை.

டைமிங்காக பேசுவதாக
என்னைப் பார்த்து
சொல்பவர்கள்தான்
டைமிற்கு
எங்குமே வருவதில்லை என்றும்
சொல்கிறார்கள்.

நீயெல்லாம் எழுதலைன்னு
இங்க யாருடா அழுதான்னு
பிறர் கேட்பதற்கு முன்னாலேயே
நிறுத்திவிடுவேன்
எழுதுவதை.

நான் அதிகம் பேசுவதில்லையென்று
குறை சொல்பவர்களில்
எத்தனை பேர்
நான் எழுதுவதைப்
படிக்கிறார்களென்று
தெரியவில்லை.

பேசுவதைவிட எழுதுவது
பிடித்திருக்கிறது
ஏனென்றால்
எழுதுவதற்கு முன்னால்
இது பயனுள்ளதாவென்று
யோசிப்பதற்கு
நேரம் கிடைக்கிறது.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...