Saturday 7 October 2017

தலைக்கவசம்

யார் சொன்னாலும்
தலைக் கவசம் 
அணியமாட்டோம் என்று
வெறுந்தலையுடனேயே
திரிகின்றன
சில தறுதலைகள்

ஹெல்மெட்டை
அரசாங்கமே கொடுக்கலாம் என
மற்றவர்கள் சொல்லும் போது
அரசாங்கம் கொடுத்த
மிக்ஸ்சி,கிரைண்டர்,ஃபேன் தான்
ஞாகபத்திற்கு வருகிறது

நடக்கும் போதே
ஹெல்மெட் அணிந்துதான்
செல்ல வேண்டும்போலிருக்கிறது
எதிரே வரும் வாகனங்களின்
வேகத்திற்குப் பயந்து

ஹெல்மெட் அணியாமல்
போலீசிடமிருந்து 
எப்படி தப்பிக்கலாம் என்று
யோசிக்கும் மனசு
ஹெல்மெட் அணிந்து
சாகாமல் எப்படித் தப்பிக்கலாம் என்று
யோசிக்க மறுக்கிறது

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...