Monday 9 October 2017

செவிக்கு உணவு

எப்படியோ கிடைத்துவிடுகிறது உணவு 
எல்லா வேளைகளிலும்.
வெண்டாமென்றாலும் யாரும் விடுவதாக இல்லை
செரிக்க முடியாமல் திணறினாலும் 
யாரும் கவலைப்படுவதாக இல்லை.
ஊட்டிவிடுவதில்தான் எல்லோருக்கும் விருப்பமே தவிர
உண்பதில் இல்லை.
எங்கு பார்த்தாலும் இறைந்து கிடக்கிறது உணவு
உண்பவர்கள் இல்லாமல்.
வழிஎங்கும் இறைத்துக் கொண்டே போகிறார்கள் உணவை,
உண்பவனைப்பற்றி சிறிதும் யோசிக்காமல்.
எப்படியோ, இப்படியாக
கிடைத்துவிடுகிறது உணவு செவிக்கு,
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...