உனது கண்களால்
என்னை வன்புணர்வு செய்கிறாய்
கேட்டால்
அழகை ரசிக்கிறேன்
இதில் என்ன தவறு என்கிறாய்
காறி உமிழத் தோன்றுகிறது
எனக்கு
உன் முகத்தில்.
என்னை அவமானப்படுத்த
நீ விரும்பினால்
எளிதாகச் சொல்லிவிடுகிறாய்
நான்
நடத்தை சரியில்லாதவள் என்று.
நான் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும்
நீயே தீர்மானிக்கிறாய்
என்னுடைய வாழ்வையும்
நீயே வாழ்ந்துவிட்ட பிறகு
நான் எப்போது வாழ்வது.
என்னால் எப்போதும்
உனக்கு
தாயாக,சகோதரியாக,
மனைவியாக,மகளாக,
தோழியாக
இருக்க முடிகிறது
ஆனால் நீ மட்டும்
எப்போதும் ஆணாய்.
எங்கள் பாட்டிகள்
வீட்டில்
கதவுகளுக்குப் பின்னால்
தங்கள் முகங்களை
ஒளித்துக்கொண்டார்கள்
நாங்கள்
முகநூலில்
எங்கள் பிள்ளைகளின்
நிழற்படங்களுக்குப் பின்னால்
ஒளித்துக்கொள்கிறோம்.
திருமணம் செய்து
என்னை மனைவியாகவும்
என் தந்தையை
கடனாளியாகவும்
ஆக்கி விட்டாய்.
என்னை வன்புணர்வு செய்கிறாய்
கேட்டால்
அழகை ரசிக்கிறேன்
இதில் என்ன தவறு என்கிறாய்
காறி உமிழத் தோன்றுகிறது
எனக்கு
உன் முகத்தில்.
என்னை அவமானப்படுத்த
நீ விரும்பினால்
எளிதாகச் சொல்லிவிடுகிறாய்
நான்
நடத்தை சரியில்லாதவள் என்று.
நான் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும்
நீயே தீர்மானிக்கிறாய்
என்னுடைய வாழ்வையும்
நீயே வாழ்ந்துவிட்ட பிறகு
நான் எப்போது வாழ்வது.
என்னால் எப்போதும்
உனக்கு
தாயாக,சகோதரியாக,
மனைவியாக,மகளாக,
தோழியாக
இருக்க முடிகிறது
ஆனால் நீ மட்டும்
எப்போதும் ஆணாய்.
எங்கள் பாட்டிகள்
வீட்டில்
கதவுகளுக்குப் பின்னால்
தங்கள் முகங்களை
ஒளித்துக்கொண்டார்கள்
நாங்கள்
முகநூலில்
எங்கள் பிள்ளைகளின்
நிழற்படங்களுக்குப் பின்னால்
ஒளித்துக்கொள்கிறோம்.
திருமணம் செய்து
என்னை மனைவியாகவும்
என் தந்தையை
கடனாளியாகவும்
ஆக்கி விட்டாய்.
No comments:
Post a Comment