Saturday 7 October 2017

துளிப்பாக்கள்

இலக்கை நோக்கி 
ஓயாமல் துரத்திக்கொண்டே இருக்கின்றன
அவமானப்படுத்தும் வார்த்தைகள்.

நாள்தோறும்
நம்பிக்கையை
விதைத்துகொண்டே இருக்கிறது
விடியற்பொழுது.

அப்படியொன்றும்
அதிக தூரமில்லை
அருகில்தானிருக்கிறது கரை.

சிறகுகள்
சிறியதாக இருந்தாலும்
வானவீதியில்
பறந்துகொண்டுதான் இருக்கின்றன
சிட்டுக்குருவிகள்.

ஊன்றி எழுவதற்கு
கைகள் இருக்கின்றன
எப்படியும் நடந்துவிடலாம் எழுந்து.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...