தொந்தரவு செய்யக்கூடாதென
நான் தள்ளியிருப்பதை
உன்னைத் தவிர்ப்பதற்காகத்தானென
தவறாக எண்ணிக்கொள்கிறாய் நீ
நான் கேட்பது எதையும்
தராத நீ தான்
நீ எதிர்பார்ப்பதையெல்லாம்
நான் தரவேண்டுமென
கட்டளையிடுகிறாய்
உனக்குக் கோபமேவராது என்று
சொல்லிச்சொல்லியே
கோபமூட்டிக்கொண்டிருக்கிறாய் நீ
என் மௌனத்தை
புரிந்துகொள்ள முடியாத நீ
என் வார்த்தையை மட்டும்
எப்படி புரிந்துகொள்ளப் போகிறாய்
உன்னுடைய எந்தகேள்வியுமே
என்னுடைய அறியாமையை
நீக்குவதற்காக இல்லை
உன்னுடைய மேதமையை
உணர்த்துவதற்காகவே இருக்கின்றன
நான் தள்ளியிருப்பதை
உன்னைத் தவிர்ப்பதற்காகத்தானென
தவறாக எண்ணிக்கொள்கிறாய் நீ
நான் கேட்பது எதையும்
தராத நீ தான்
நீ எதிர்பார்ப்பதையெல்லாம்
நான் தரவேண்டுமென
கட்டளையிடுகிறாய்
உனக்குக் கோபமேவராது என்று
சொல்லிச்சொல்லியே
கோபமூட்டிக்கொண்டிருக்கிறாய் நீ
என் மௌனத்தை
புரிந்துகொள்ள முடியாத நீ
என் வார்த்தையை மட்டும்
எப்படி புரிந்துகொள்ளப் போகிறாய்
உன்னுடைய எந்தகேள்வியுமே
என்னுடைய அறியாமையை
நீக்குவதற்காக இல்லை
உன்னுடைய மேதமையை
உணர்த்துவதற்காகவே இருக்கின்றன
No comments:
Post a Comment