Saturday 7 October 2017

துளிப்பாக்கள்

தொந்தரவு செய்யக்கூடாதென
நான் தள்ளியிருப்பதை
உன்னைத் தவிர்ப்பதற்காகத்தானென
தவறாக எண்ணிக்கொள்கிறாய் நீ

நான் கேட்பது எதையும் 
தராத நீ தான்
நீ எதிர்பார்ப்பதையெல்லாம்
நான் தரவேண்டுமென
கட்டளையிடுகிறாய்

உனக்குக் கோபமேவராது என்று
சொல்லிச்சொல்லியே
கோபமூட்டிக்கொண்டிருக்கிறாய் நீ

என் மௌனத்தை
புரிந்துகொள்ள முடியாத நீ
என் வார்த்தையை மட்டும்
எப்படி புரிந்துகொள்ளப் போகிறாய்

உன்னுடைய எந்தகேள்வியுமே
என்னுடைய அறியாமையை
நீக்குவதற்காக இல்லை
உன்னுடைய மேதமையை
உணர்த்துவதற்காகவே இருக்கின்றன

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...