Monday 9 October 2017

கவிதைகள்

பேருந்துகளுக்கு மட்டுமே
சொந்தமானதில்லை
பேருந்து நிலையங்கள்
குடலைப் புரட்டும்
நாற்றத்திற்கும் தான்.

அலுவலகம் விட்டு வரும்போதெல்லாம்
கையை நீட்டி காசு கேட்கும்
முதியவரை
கொஞ்ச நாட்களாகவே காணவில்லை
அவருக்கு என்னவாயிற்று என்று
யாரிடம் போய் கேட்பது.

குறைவான கட்டணம் வாங்கும்
தனியார் பேருந்துகள் எல்லாம்
இலாபத்தில் ஓடும்போது
அதிக கட்டணம் வாங்கும்
அரசுப்பேருந்துகள் எல்லாம்
நட்டத்தில் ஓடுகின்றன
இந்த லட்சணத்தில்
யாருமே இல்லாமல்
ஒன் டு ஒன் வேறு.

எத்தனையோ சாமிப்படங்கள்
மாட்டியிருந்தாலும்
எப்படியோ
விபத்துக்குள்ளாகி விடுகின்றன
பேருந்துகள்.

அரசுப் பேருந்துகளில்
உள்ளதைப்போலவே
அரசு விமானங்களிலும்
இனிமேல்
மாட்டிவிடுவார்களோ
சாமிப்படங்களை.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...