Saturday 7 October 2017

கவிதைகள்

நான் போடும் பதிவிற்கெல்லாம்
சொந்தக்காரர்களும்
நண்பர்களும்தான்
லைக் போடுகிறார்கள்

பாவம்,
நாமே போடவில்லையென்றால்
வேறு யார் போடப்போகிறார்களென்று
நினைப்பார்கள் போலிருக்கிறது

சொந்தக்காரர்கள் போடும் பதிவிற்கு
(வெறும் நிழற்படமாக இருந்தாலும்)
லைக் போட்டு விடுவேன்
போடாவிட்டால்
எங்கே
உறவு முறையை விட்டு
தள்ளி வைத்து விடுவார்களோ என்று வேறு
பயமாக இருக்கிறது


No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...