Saturday 7 October 2017

பற்றி எரிந்த தேர்

பற்றி எரிந்த தேர்

பஞ்சமனென்றாய் 
எனைத் தாழ்ந்தவனென்றாய்

தொட்டால் தீட்டென்றாய்
எனைப் பார்த்தாலே பாவமென்றாய்

தீண்டத்தகாதவன் என்று சொல்லி
ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து
எனைச் சேரியிலே வாழவைத்தாய்

காதலிக்கக் கூடாதென்றாய்
கழுத்தறுத்துக் கதற வைத்தாய்

உயிர் பறித்தாய்
என் உடைமைகளை எரித்தாய்

மலம் தின்ன வைத்தாய்
எனைச் சிறுநீர் பருக வைத்தாய்

கோயிலுக்கு வராதே என்றாய்
தேர் இழுக்கத் தடையென்றாய்

நீ பற்ற வைத்த சாதித்தீயில்
எரிந்தது தேர் மட்டுமல்ல
எரியும்போது
மயிரைப் பிடுங்கிக்கொண்டிருந்த
சாமியும் தான்

நான் கதறியழும்போது
ஏனென்று கேட்க வராத
உன் சாமியும் எனக்கு வேண்டாம்
உன் மதமும் எனக்கு வேண்டாம்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...