பற்றி எரிந்த தேர்
பஞ்சமனென்றாய்
எனைத் தாழ்ந்தவனென்றாய்
தொட்டால் தீட்டென்றாய்
எனைப் பார்த்தாலே பாவமென்றாய்
தீண்டத்தகாதவன் என்று சொல்லி
ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து
எனைச் சேரியிலே வாழவைத்தாய்
காதலிக்கக் கூடாதென்றாய்
கழுத்தறுத்துக் கதற வைத்தாய்
உயிர் பறித்தாய்
என் உடைமைகளை எரித்தாய்
மலம் தின்ன வைத்தாய்
எனைச் சிறுநீர் பருக வைத்தாய்
கோயிலுக்கு வராதே என்றாய்
தேர் இழுக்கத் தடையென்றாய்
நீ பற்ற வைத்த சாதித்தீயில்
எரிந்தது தேர் மட்டுமல்ல
எரியும்போது
மயிரைப் பிடுங்கிக்கொண்டிருந்த
சாமியும் தான்
நான் கதறியழும்போது
ஏனென்று கேட்க வராத
உன் சாமியும் எனக்கு வேண்டாம்
உன் மதமும் எனக்கு வேண்டாம்
பஞ்சமனென்றாய்
எனைத் தாழ்ந்தவனென்றாய்
தொட்டால் தீட்டென்றாய்
எனைப் பார்த்தாலே பாவமென்றாய்
தீண்டத்தகாதவன் என்று சொல்லி
ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து
எனைச் சேரியிலே வாழவைத்தாய்
காதலிக்கக் கூடாதென்றாய்
கழுத்தறுத்துக் கதற வைத்தாய்
உயிர் பறித்தாய்
என் உடைமைகளை எரித்தாய்
மலம் தின்ன வைத்தாய்
எனைச் சிறுநீர் பருக வைத்தாய்
கோயிலுக்கு வராதே என்றாய்
தேர் இழுக்கத் தடையென்றாய்
நீ பற்ற வைத்த சாதித்தீயில்
எரிந்தது தேர் மட்டுமல்ல
எரியும்போது
மயிரைப் பிடுங்கிக்கொண்டிருந்த
சாமியும் தான்
நான் கதறியழும்போது
ஏனென்று கேட்க வராத
உன் சாமியும் எனக்கு வேண்டாம்
உன் மதமும் எனக்கு வேண்டாம்
No comments:
Post a Comment