வெளியில் சென்று வந்தால்
ஊர் சுற்றி என்கிறாய்
வீட்டிலேயே இருக்கிறேன்
அடைக்கோழி என்கிறாய்
நான் என்ன செய்ய
கவலையாக இருக்கும்போது
அருகில் வந்து
எதையும்
சீரியசாக எடுத்துக்கொள்ளாதே என்று
சொல்லிவிட்டுப் போகிறாய்
நீ சொல்வது சரிதானென்று
கவலையின்றி சிரித்துக்கொண்டிருந்தால்
உனக்கு கொஞ்சம் கூட
சீரியஸ்னெஸ் இல்லை என்று கோபப்படுகிறாய்
நான் என்ன செய்ய
யாருக்கும் உதவுவது இல்லையென்று
விமர்சனம் செய்கிறாய்
ஓடிப்போய் உதவினால்
நடிப்பு என்கிறாய்
நான் என்ன செய்ய
மதிப்பெண் குறைவென்றால்
மக்கு என்கிறாய்
அதிகம் எடுத்தால்
அதுவொன்றும்
அறிவின் அடையாளமல்ல என்று
அறிவுரை சொல்கிறாய்
நான் என்ன செய்ய
பேசாமல் இருக்கிறேன்
திமிர் பிடித்தவன் என்கிறாய்
பேசினால்
அதிகபிரசங்கி என்று
ஏளனம் செய்கிறாய்
நான் என்ன செய்ய
கோபம் கொள்கிறேன்
ஆத்திரக்காரன் என்கிறாய்
பொறுமையாய் இருந்தால்
சொரணை அற்றவன் என்று
சொல்லிவிட்டுப் போகிறாய்
நான் என்ன செய்ய
பயந்துபோய் ஒளிந்து கொள்கிறேன்
கோழை என்கிறாய்
தைரியமாக சண்டை போட்டால்
வம்புக்காரன் என்று
வசை படுகிறாய்
நான் என்ன செய்ய
எனது வார்த்தைகள்
உன்னைக் காயப்படுத்தி விடுமோ என்று பயந்தே
நான் அமைதியாக இருக்கிறேன்
ஆனால்
என் மௌனம் தான்
உன்னை மிகவும் காயப்படுத்துவதாக
நீ சொன்னால்
நான் என்ன செய்ய
ஊர் சுற்றி என்கிறாய்
வீட்டிலேயே இருக்கிறேன்
அடைக்கோழி என்கிறாய்
நான் என்ன செய்ய
கவலையாக இருக்கும்போது
அருகில் வந்து
எதையும்
சீரியசாக எடுத்துக்கொள்ளாதே என்று
சொல்லிவிட்டுப் போகிறாய்
நீ சொல்வது சரிதானென்று
கவலையின்றி சிரித்துக்கொண்டிருந்தால்
உனக்கு கொஞ்சம் கூட
சீரியஸ்னெஸ் இல்லை என்று கோபப்படுகிறாய்
நான் என்ன செய்ய
யாருக்கும் உதவுவது இல்லையென்று
விமர்சனம் செய்கிறாய்
ஓடிப்போய் உதவினால்
நடிப்பு என்கிறாய்
நான் என்ன செய்ய
மதிப்பெண் குறைவென்றால்
மக்கு என்கிறாய்
அதிகம் எடுத்தால்
அதுவொன்றும்
அறிவின் அடையாளமல்ல என்று
அறிவுரை சொல்கிறாய்
நான் என்ன செய்ய
பேசாமல் இருக்கிறேன்
திமிர் பிடித்தவன் என்கிறாய்
பேசினால்
அதிகபிரசங்கி என்று
ஏளனம் செய்கிறாய்
நான் என்ன செய்ய
கோபம் கொள்கிறேன்
ஆத்திரக்காரன் என்கிறாய்
பொறுமையாய் இருந்தால்
சொரணை அற்றவன் என்று
சொல்லிவிட்டுப் போகிறாய்
நான் என்ன செய்ய
பயந்துபோய் ஒளிந்து கொள்கிறேன்
கோழை என்கிறாய்
தைரியமாக சண்டை போட்டால்
வம்புக்காரன் என்று
வசை படுகிறாய்
நான் என்ன செய்ய
எனது வார்த்தைகள்
உன்னைக் காயப்படுத்தி விடுமோ என்று பயந்தே
நான் அமைதியாக இருக்கிறேன்
ஆனால்
என் மௌனம் தான்
உன்னை மிகவும் காயப்படுத்துவதாக
நீ சொன்னால்
நான் என்ன செய்ய
No comments:
Post a Comment